search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூடுதல் கட்டிடம்"

    • மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள்.
    • அரசு ஆஸ்பத்திரியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டிடப்பணிகள் ஆய்வு செய்யப்பட்டது. கூடுதல் கட்டிடம் ரூ.24 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது என்றார்.

    தாராபுரம், அக்.21-

    தாராபுரத்தில் ரூ.24 கோடி மதிப்பில் அரசு ஆஸ்பத்திரியின் கூடுதல் கட்டிடப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகளை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது அமைச்சர் கூறியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள்.அந்த வகையில் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டிடப்பணிகள் ஆய்வு செய்யப்பட்டது. கூடுதல் கட்டிடம் ரூ.24 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது என்றார்.

    நிகழ்ச்சியில் தாராபுரம் தலைமை அரசு மருத்துவர் சத்தியராஜ், நகர தி.மு.க. செயலாளர் முருகானந்தம், தலைமை செயற்குழு உறுப்பினர் தனசேகர், மாவட்ட திட்ட குழு உறுப்பினர் வெ.கமலக்கண்ணன், நகர துணை செயலாளர் தவச்செல்வன், மாவட்ட வக்கீல் அணி தலைவர் செல்வராஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஆரோன் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அம்பேத்குமார் எம்.எல்.ஏ.ஆய்வு
    • 50 படுக்கைகள் கொண்டது

    வந்தவாசி:

    வந்தவாசி அரசு மருத்துவமனையில் கூடுதலாக 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டிடம் கட்டப்பட்டு வ ருகிறது. இந்த கட்டிடத்தில் 50 படுக்கைகள் கொண்ட அவசர சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை மையம், ஸ்கேன் செய்யும் அறை, இடம்பெற உள்ளது.

    இந்த நிலையில் கட்டிடப் பணிகளை அம்பேத்குமார் எம்.எல்.ஏ., மற்றும் திமுக மாவட்ட கழக செயலாளர் எம் எஸ் தரணி வேந்தன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

    பின்னர் கட்டிட பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

    ஆய்வின்போது மாவட்ட இணை இயக்குனர் பாபுஜி, மருத்துவர்கள் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

    • தொண்டி அருகே அரசுப்பள்ளியில் கூடுதல் கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
    • யூனியன் சேர்மன் முகமது முக்தார், ஒன்றிய செயலாளர் சரவணன், கவுன்சிலர் கணேசன் முன்னிலை வகித்தனர்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பஞ்சாயத்து யூனியனுக்குட்பட்ட தினையத்தூர் கிராமத்தில் உள்ள பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைக்கான அடிக்கல் நாட்டு விழா திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ. கரு.மாணிக்கம் தலைமையில் நடந்தது.

    யூனியன் சேர்மன் முகமது முக்தார், ஒன்றிய செயலாளர் சரவணன், கவுன்சிலர் கணேசன் முன்னிலை வகித்தனர். பஞ்சாயத்து தலைவர் சிங்கத்துரை வரவேற்றார். வட்டார கல்வி அலுவலர் புல்லாணி, வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துகிருஷ்ணன் மற்றும் ஆசிரியர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

    • பண்ருட்டியில் தரமில்லாமல் கட்டிடம் கட்டும் பணி வேல்முருகன் எம்.எல்.ஏ.வின் அதிரடி நடவடிக்கையால் நிறுத்தப்பட்டது.
    • 10 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் குளிர்பதன கிடங்கு பணி மற்றும் தட்டாஞ்சாவடியில் உள்ள உழவர் சந்தைக்கு கூடுதல் கட்டிடம் கட்டும் பணியினை நேரில்பார்வையிட்டார்.

    கடலூர்:

    பண்ருட்டி நகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி பணிகளை வேல்முருகன் எம்.எல்.ஏ.நேற்று ஆய்வு செய்தார்.

    அப்போது பண்ருட்டி டைவர்ஷன் ரோட்டில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் ரூ. 10 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் குளிர்பதன கிடங்கு பணி மற்றும் தட்டாஞ்சாவடியில் உள்ள உழவர் சந்தைக்கு கூடுதல் கட்டிடம் கட்டும் பணியினை நேரில்பார்வையிட்டார்.

    கட்டிடம் கட்டுவதற்கு பயன்படுத்தப்படும் இரும்பு மற்றும் கட்டுமான பொருட்கள் தரம் இல்லாமல் இருப்பது குறித்து கேட்டார். ஒப்பந்தகாரர் அரசு விதிகளுக்கு உட்பட்டு இரும்பு மற்றும் கட்டுமான பொருள்கள் பயன்படுத்தவில்லை என்பதால்தரமில்லாமல் கட்டப்படும் கட்டிங்களை கட்டப்படுவதை நிறுத்த உத்தரவிட்டார்.

    ஆய்வின் போது நகரமன்ற தலைவர் ராஜேந்திரன், ஆணையாளர் மகேஷ்வரி, துணை தலைவர் சிவா ஆகியோர் உடன் இருந்தனர்.

    ×