search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூகுள் டூடுல்"

    • 'கூகுள்' பிரபல ஆளுமைகளின் பிறந்தநாள், பண்டிகை நாட்கள், முக்கிய தினங்கள் போன்ற நாட்களில் சிறப்பு டூடுலை வெளியிடுவது வழக்கம்.
    • 'டூடுல்' பக்கத்தில் 'சந்திரயான்-3' திட்டத்தின் முழு பின்னணி தகவலும் இணைக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    உலகின் முன்னணி தேடுபொறி நிறுவனமான 'கூகுள்' பிரபல ஆளுமைகளின் பிறந்தநாள், பண்டிகை நாட்கள், முக்கிய தினங்கள் போன்ற நாட்களில் சிறப்பு டூடுலை (கவன ஈர்ப்பு சித்திரம்) வெளியிடுவது வழக்கம்.

    அந்த வகையில் இந்தியாவின் 'சந்திரயான்-3' விண்கலம் நிலவின் தென்துருவத்தில் கால்பதித்த சரித்திர சாதனையை கொண்டாடும் வகையில் 'ஜிப்' என்று அழைக்கப்படும் கிராபிக்ஸ் பட வடிவமைப்பில் சிறப்பு டூடுலை கூகுள் வெளியிட்டுள்ளது.

    அதில் கண்களை மூடிக்கொண்டு இருக்கும் நிலா தன்னை சுற்றி வரும் சந்திரயான் விண்கலத்தை மிரட்சியுடன் பார்ப்பது போலவும், பின்னர் விக்ரம் லேண்டர் தரையிறங்கி அதில் இருந்து பிரக்யான் ரோவர் வெளியேறியதும் நிலா மகிழ்ச்சி ததும்ப சிரிப்பது போலவும் அந்த 'டூடுல்' உருவாக்கப்பட்டுள்ளது.

    மேலும் அந்த 'டூடுல்' பக்கத்தில் 'சந்திரயான்-3' திட்டத்தின் முழு பின்னணி தகவலும் இணைக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜி என்ற எழுத்தில் இன்பம் என்ற வார்த்தை இருக்குமாறும், எல் இருக்க வேண்டிய இடத்தில் திருவள்ளுவரின் உருவத்தை "மினிமலிஸ்டிக் ஆர்ட்" வகையில் அமைத்துள்ளார்.
    • இ என்று எழுத்து மற்றும் மற்ற அனைத்து எழுத்துக்களும் கூகுள் லோகோவில் இருக்கும் நிறங்களை கொண்டு அமைத்துள்ளார்.

    ஓசூர்:

    ஓசூர் பகுதியை சேர்ந்த ஐ.டி. நிறுவன ஊழியர் லூகாஸ் (வயது 33), இவர் திருக்குறள் ஆர்வலர்.

    திருவள்ளுவர் தினத்தில் திருவள்ளுவருக்கு கூகுள் டூடுல் வெளியிட வலியுறுத்தி ஒரு கற்பனையான கூகுள் டூடலை "சுகர் ஆர்ட்" ஒன்றை அவர் வடிவமைத்துள்ளார்.

    5,000 மேற்பட்ட கூகுள் டூடுலை வரைந்து பார்த்து இதற்கு முன்பு வந்த எந்த டூடுல் மாதிரியும் இல்லாமல் இப்போது உருவாகியிருக்கும் இந்த டூடுல் தனித்தன்மையோடு உள்ளது. மேலும் அதே நேரத்தில் திருக்குறளையும் வெளிப்படுத்துமாறு வடிவமைத்துள்ளார்.

    ஜி என்ற எழுத்தில் திருக்குறள் என்ற வார்த்தை இருக்குமாறும், ஓ என்ற எழுத்தில் அறம் என்ற வார்த்தை இருக்குமாறும், ஓ என்ற எழுத்தில் பொருள் என்ற வார்த்தை இருக்குமாறும் வடிவமைத்துள்ளார்.

    ஜி என்ற எழுத்தில் இன்பம் என்ற வார்த்தை இருக்குமாறும், எல் இருக்க வேண்டிய இடத்தில் திருவள்ளுவரின் உருவத்தை "மினிமலிஸ்டிக் ஆர்ட்" வகையில் அமைத்துள்ளார். இ என்று எழுத்து மற்றும் மற்ற அனைத்து எழுத்துக்களும் கூகுள் லோகோவில் இருக்கும் நிறங்களை கொண்டு அமைத்துள்ளார்.

    கூகுள் நிறுவனம் இதுவரைக்கும் கன்பியூசியஸ், ஷேக்ஸ்பியர், லியோ டோல்ஸ்டோரி என அநேக உலக அறிஞர்களுக்கு டூடுல்ஸ் வெளியிட்டு கவுரவபடுத்தியுள்ளனர்.

    மற்ற உலக அறிஞர்களோடு ஒப்பிடும்போது திருவள்ளுவர் யாருக்கும் சளைத்தவரல்ல. அதனால் திருக்குறள் தந்த இந்திய ஞானி திருவள்ளுவருக்கும் ஒரு இன்டர்நேஷனல் அல்லது இந்தியன் டூடுல் வெளியிட வேண்டும் என்று எனது டூடுல் ப்ரோபோஸால்-ளை கூகுள் நிறுவனத்துக்கு அனுப்பியுள்ளார்.

    • ஒரு கற்பனையான கூகுள் டூடலை "சுகர் ஆர்ட்" ஒன்றை அவர் வடிவமைத்துள்ளார்.
    • கூகுள் லோகோவில் இருக்கும் நிறங்களை கொண்டுஅமைத்துள்ளார்.

    ஓசூர்,

    ஓசூர் பகுதியை சேர்ந்த ஐ.டி. நிறுவன ஊழியர் லூகாஸ் (வயது 33), இவர் திருக்குறள் ஆர்வலர்.

    திருவள்ளுவர் தினத்தில் திருவள்ளுவருக்கு கூகுள் டூடல் வெளியிட வலியுறுத்தி ஒரு கற்பனையான கூகுள் டூடலை "சுகர் ஆர்ட்" ஒன்றை அவர் வடிவமைத்துள்ளார்.

    5,000 மேற்பட்ட கூகள் டூடுலை அறைந்து பார்த்து இதற்கு முன்பு வந்த எந்த டூடல் மாதிரியும் இல்லாமல் இப்போது உருவாகியிருக்கும் இந்த டூடல் தனித்தன்மையோடு உள்ளது. மேலும் அதே நேரத்தில் திருக்குறளையும் வெளிப்படுத்துமாறு வடிவமைத்துள்ளார்.

    ஜி என்ற எழுத்தில் திருக்குறள் என்ற வார்த்தை இருக்குமாறும், ஓ என்ற எழுத்தில் அறம் என்ற வார்த்தை இருக்குமாறும், ஓ என்ற எழுத்தில் பொருள் என்ற வார்த்தை இருக்குமாறும் வடிவமைத்துள்ளார்.

    ஜி என்ற எழுத்தில் இன்பம் என்ற வார்த்தை இருக்குமாறும், எல் இருக்க வேண்டிய இடத்தில திருவள்ளுவரின் உருவத்தை "மினிமலிஸ்டிக் ஆர்ட்" வகையில் அமைத்துள்ளார். இ என்று எழுத்து மற்றும் மற்ற அணைத்து எழுத்துக்களும் கூகுள் லோகோவில் இருக்கும் நிறங்களை கொண்டுஅமைத்துள்ளார்.

    கூகுள் நிறுவனம் இதுவரைக்கும் கன்பியூசியஸ், ஷேக்ஸ்பியர், லியோ டோல்ஸ்டோரி என அநேக உலக அறிஞர்களுக்கு டூடுல்ஸ் வெளியிட்டு கவுரவபடுத்தியுள்ளனர்.

    மற்ற உலக அறிஞர்களோடு ஒப்பிடும்போது திருவள்ளுவர் யாருக்கும் சளைத்தவரல்ல. அதனால் திருக்குறள் தந்த இந்திய ஞானி திருவள்ளுவருக்கும் ஒரு இன்டர்நேஷனல் அல்லது இந்தியன் டூடல் வெளியிட வேண்டும் என்று எனது டூடல் ப்ரோபோஸால்-ளை கூகுள் நிறுவனத்துக்கு அனுப்பியுள்ளார்.

    இந்திய விஞ்ஞானி பிரசந்தா சந்திரா மகாலனோபிசு 125-வது பிறந்த நாளை கூகுள் நிறுவனம் டூடுலால் கொண்டாடி வருகிறது. #GoogleDoodle #PrasantaChandraMahalanobis
    புதுடெல்லி:

    இந்திய விஞ்ஞாஅனி பிரசந்தா சந்திரா மகாலனோபிசு மேற்கு வங்காளம் மாநிலம் கொல்கத்தாவில் பிறந்தவர். கணிதம் மற்ரும் அறிவியியலில் மிகவும் சிறந்து விளங்கிய இவர் கண்டுபிடித்த அளவீடுக்கு இவரின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

    மகாலனோபிசு தொலைவு என்ற இந்த அளவீடு பல அளவீடு முறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்திய புள்ளிவிவர நிறுவனம் நிறுவப்படுவதற்கு இவர் முக்கிய காரணமாக இருந்தார். இவர் பொருளாதாரம் மற்றும் கணிதத்துறையில் ஆற்றிய பணி மூலம் உலகில் உள்ள மக்களால் அறியப்பட்டார்.



    இந்நிலையில், மகாலனோபிசு பிறந்த தினமான இன்று அவரை பெருமைப்படுத்தும் விதமாக கூகுள் நிறுவனம் டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது. மகாலனோபிசு தனது 78 வது வயதில் ஜீன் 28-ம் தேதி மரணம் அடைந்தார். #GoogleDoodle #PrasantaChandraMahalanobis

    உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள உலக கோப்பை கால்பந்து போட்டி இன்று மாலை தொடங்க உள்ள நிலையில் அதனை கூகுள் டூடுலாக கொண்டாடி வருகிறது. #GoogleDoodle #FIFA2018
    புதுடெல்லி:

    உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலக கோப்பை கால்பந்து போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. கடைசியாக 2014-ம் ஆண்டு பிரேசிலில் நடந்த உலக கோப்பை போட்டியில் ஜெர்மனி அணி வாகை சூடியது.

    இந்த நிலையில் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் 21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் இன்று தொடங்குகிறது. இது மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.


    அதனை கொண்டாடும் வகையில் கூகுள் நிறுவனம் டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதே போல் ஒடிசா மணற்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் உலக கோப்பை கால்பந்து போட்டிக்காக மணற்சிற்பம் ஒன்றை வடித்துள்ளார். இது பார்வையாளர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #GoogleDoodle #FIFA2018


    இந்தியாவில் பிரம்ம சமாஜத்தை தோற்றுவித்து, மறுமலர்ச்சிக்கு வித்திட்ட ராஜா ராம் மோகன் ராயின் 246-வது பிறந்த நாளை கூகுள் நிறுவனம் டூடுலாக கொண்டாடி வருகிறது. #Googledoodle #RajaRamMohanRoy
    புதுடெல்லி:

    இந்திய மறுமலர்ச்சியின் தந்தை என்று அழைக்கப்படும் ராஜா ராம் மோகன் ராய்  மே 22, 1772 -ம் ஆண்டு வங்காளத்திலுள்ள வசதி படைத்த வைதிக பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவர். பிரம்ம சமாஜத்தை நிறுவியவர். இவரைப் புதிய இந்தியாவை நிறுவியர் என்றும், புதிய மறுமலர்ச்சியை தொடங்கி வைத்தவர் என்றும் கூறுவர். பிரம்ம சமாஜம் கி.பி. 1828 இல் நிறுவப்பட்டது. இதுவே முதல் சீர்திருத்த இயக்கமாகும்.

    அவர் இந்து சமுதாயத்தில் இருந்த மூடநம்பிக்கைகளுக்கும் மற்றும் ஏனைய தீமைகளுக்கும் எதிராக குரல் எழுப்பினார். இந்த நிறுவனத்தை நிறுவியதன் மூலம் அவர் ஒரு புதிய சமயத்தைப் பரப்ப விரும்பவில்லை. மாறாக இந்த அமைப்பில் அனைத்துச் சமயங்களின் அரிய கோட்பாடுகள் அமைந்திருந்தன. எல்லா மக்களும் சாதி, சமய பாகுபாடின்றி ஒன்றாக சேர்ந்து ஒரே இறைவனை வழிபட இந்நிறுவனம் வழிவகுத்துக் கொடுத்தது.



    அக்காலத்தில் இந்துப் பெண்களுக்குக் கட்டாய வழக்கமாக இருந்த உடன்கட்டை ஏறல் (சதி) என்ற சமுதாயக் கொடுமையை ஒழிக்க இவர் பெரிதும் பாடுபட்டார். தனது விடா முயற்சியால் சதி என்னும் மூட நம்பிக்கையை ஒழித்தார். மேலும், குழந்தைகள் திருமணம், ஜாதி முறை, பலமணம், கொத்தடிமை முறை மற்றும் கல்வியறிவின்மைக்கு எதிராக போராடினார்.

    இந்தியாவில் மேற்கத்திய கல்வியை புகுத்துதில் ராஜாராம் ஆர்வமாக இருந்தார். இந்திய மறுமலர்ச்சிக்காக பாடுபட்டார். அவர் வேதாந்தா கல்லூரி, இந்து கல்லூரி மற்றும் ஆங்கிலோ இந்து பள்ளியை தொடக்கினார்.

    இந்நிலையில், இந்தியாவில் பிரம்ம சமாஜத்தை தோற்றுவித்து, மறுமலர்ச்சிக்கு வித்திட்ட ராஜா ராம் மோகன் ராயின் 246-வது பிறந்த நாளை கூகுள் நிறுவனம் இன்று டூடுலாக கொண்டாடி வருகிறது. #Googledoodle #RajaRamMohanRoy

    இந்திய நடனக்கலைஞர் மிருணாளினி சாராபாயின் 100-வது பிறந்த நாளை கூகுள் நிறுவனம் டூடுலாக கொண்டாடி வருகிறது. #GoogleDoodle #MrinaliniSarabhai
    புதுடெல்லி:

    இந்தியாவின் பிரபல நடனக் கலைஞரும், பயிற்றுனரும் ஆன மிருணாளினி சாராபாய் 1918 மே 11 அன்று கேரளாவில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அம்மு சுவாமிநாதன் என்பவருக்குப் பிறந்தார். அகமதாபாத் நகரில் இவர் கலைக் கல்லூரி ஒன்றை ஆரம்பித்து நடத்தி வந்தார். பரத நாட்டியம், கதகளி ஆகிய நாட்டியக் கலைகளில் இவர் 18,000 மேற்பட்டவருக்கும் அதிகமானோரைப் பயிற்றுவித்தார். பத்மஸ்ரீ, பத்மபூஷண் உட்பட பல விருதுகளைப் பெற்றவர்.

    இளம் வயதில் இவர் சுவிட்சர்லாந்தில் வாழ்ந்தார். அங்கு டால்குரோசு பள்ளியில் மேற்கத்தைய நடனம் பயின்றார். இந்தியாவில் இரவீந்திரநாத் தாகூரின் வழிகாட்டலில் சாந்தி நிகேதனில் கல்வி பயின்ற மிருணாளினி சிறிது காலம் ஐக்கிய அமெரிக்காவில் அமெரிக்கன் நாடகக் கல்விக் கழகத்தில் இணைந்து பயிற்சி பெற்று இந்தியா திரும்பினார். இந்தியாவில் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் பரதநாட்டியமும், தகழி குஞ்சு குருப்பு என்பவரிடம் கதகளி நடனமும் பயின்றார்.



    இவர் உடல்நலக் குறைவின் காரணமாக 21 ஜனவரி 2016 அன்று அகமதாபாத்தில் காலமானார். இவர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் தந்தை என்று அழைக்கப்படும் விக்ரம் சாராபாயின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பத்மஸ்ரீ மிருணாளினி சாராபாயின் 100-வது பிறந்த நாளை கூகுள் நிறுவனம் டூடுலாக கொண்டாடி வருகிறது. #GoogleDoodle #MrinaliniSarabhai
    ×