search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருக்குறள் மீதுள்ள ஆர்வத்தால் கூகுள் டூடுலை புதுமையாக வடிவமைத்துள்ள ஓசூர் வாலிபர்
    X

    திருக்குறள் மீதுள்ள ஆர்வத்தால் கூகுள் டூடுலை புதுமையாக வடிவமைத்துள்ள ஓசூர் வாலிபர்

    • ஒரு கற்பனையான கூகுள் டூடலை "சுகர் ஆர்ட்" ஒன்றை அவர் வடிவமைத்துள்ளார்.
    • கூகுள் லோகோவில் இருக்கும் நிறங்களை கொண்டுஅமைத்துள்ளார்.

    ஓசூர்,

    ஓசூர் பகுதியை சேர்ந்த ஐ.டி. நிறுவன ஊழியர் லூகாஸ் (வயது 33), இவர் திருக்குறள் ஆர்வலர்.

    திருவள்ளுவர் தினத்தில் திருவள்ளுவருக்கு கூகுள் டூடல் வெளியிட வலியுறுத்தி ஒரு கற்பனையான கூகுள் டூடலை "சுகர் ஆர்ட்" ஒன்றை அவர் வடிவமைத்துள்ளார்.

    5,000 மேற்பட்ட கூகள் டூடுலை அறைந்து பார்த்து இதற்கு முன்பு வந்த எந்த டூடல் மாதிரியும் இல்லாமல் இப்போது உருவாகியிருக்கும் இந்த டூடல் தனித்தன்மையோடு உள்ளது. மேலும் அதே நேரத்தில் திருக்குறளையும் வெளிப்படுத்துமாறு வடிவமைத்துள்ளார்.

    ஜி என்ற எழுத்தில் திருக்குறள் என்ற வார்த்தை இருக்குமாறும், ஓ என்ற எழுத்தில் அறம் என்ற வார்த்தை இருக்குமாறும், ஓ என்ற எழுத்தில் பொருள் என்ற வார்த்தை இருக்குமாறும் வடிவமைத்துள்ளார்.

    ஜி என்ற எழுத்தில் இன்பம் என்ற வார்த்தை இருக்குமாறும், எல் இருக்க வேண்டிய இடத்தில திருவள்ளுவரின் உருவத்தை "மினிமலிஸ்டிக் ஆர்ட்" வகையில் அமைத்துள்ளார். இ என்று எழுத்து மற்றும் மற்ற அணைத்து எழுத்துக்களும் கூகுள் லோகோவில் இருக்கும் நிறங்களை கொண்டுஅமைத்துள்ளார்.

    கூகுள் நிறுவனம் இதுவரைக்கும் கன்பியூசியஸ், ஷேக்ஸ்பியர், லியோ டோல்ஸ்டோரி என அநேக உலக அறிஞர்களுக்கு டூடுல்ஸ் வெளியிட்டு கவுரவபடுத்தியுள்ளனர்.

    மற்ற உலக அறிஞர்களோடு ஒப்பிடும்போது திருவள்ளுவர் யாருக்கும் சளைத்தவரல்ல. அதனால் திருக்குறள் தந்த இந்திய ஞானி திருவள்ளுவருக்கும் ஒரு இன்டர்நேஷனல் அல்லது இந்தியன் டூடல் வெளியிட வேண்டும் என்று எனது டூடல் ப்ரோபோஸால்-ளை கூகுள் நிறுவனத்துக்கு அனுப்பியுள்ளார்.

    Next Story
    ×