search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குதிரை பேரம்"

    எடியூரப்பாவை ஆட்சி அமைக்க கவர்னர் அழைத்தது குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். #MKStalin #DMK
    சென்னை:

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:-



    கர்நாடக மாநில கவர்னர், தேர்தலுக்கு பிறகு அமைந்துள்ள காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம், பகுஜன்சமாஜ் ஆகிய கட்சிகளின் கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில், பா.ஜ.க.வை ஆட்சியமைக்க அவசரமாக அழைத்திருப்பது தன்னிச்சையானது மற்றும் அரசியலமைப்புக்கு விரோதமானது. இந்த நடவடிக்கை குதிரை பேரத்துக்கு வழிவகுத்து, நமது ஜனநாயக அடிப்படைகளை தகர்க்கும்.

    சட்டப்பேரவையில் பெரும்பான்மை பெறாத, ஊழல் மிகுந்த அ.தி.மு.க. அரசை பாதுகாக்க பா.ஜ.க. எடுத்துவரும் முயற்சிகளை எல்லாம் தமிழ்நாட்டு மக்கள் நன்றாக அறிவார்கள்.

    அரசியலமைப்பு நிறுவனங்கள் மற்றும் கொள்கைகள் அனைத்தும் இப்படிப்பட்ட நடவடிக்கைகளால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கின்றன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #MKStalin #DMK


    குதிரை பேரம் நடத்துவதற்கு வசதியாக 15 நாட்கள் அவகாசம் அளித்துள்ளதாகவும் அரசியலமைப்புச் சட்டத்தை மோடி அரசு மீறி விட்டதாகவும் குமாரசாமி குற்றம் சாட்டியுள்ளார்.#KarnatakaElections2018 #Yeddyurappa #Kumarasamy
    பெங்களூர்:

    கர்நாடகத்தில் பா.ஜனதாவை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்தார். இதை தொடர்ந்து எடியூரப்பா முதல்- மந்திரியாக இன்று பதவி ஏற்றார்.

    எடியூரப்பாவை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்ததற்கு மதசார்பற்ற ஜனதாதள தலைவர் குமாரசாமி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

    இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    எடியூரப்பாவை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்த வி‌ஷயத்தை நாங்கள் எளிதாக விட்டுவிட மாட்டோம். ஏனெனில் ஆட்சிக்கு தேவையான பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் பட்டியலை நாங்கள் அளித்துள்ளோம். ஆனால் எங்கள் கூட்டணிக்கு பதிலாக பெரும்பான்மை இல்லாத பா.ஜனதாவை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்தார்.



    மெஜாரிட்டியை நிரூபிக்க எடியூரப்பாவுக்கு 3 அல்லது 4 நாட்கள் அவகாசம் கொடுத்திருந்தால் கூட பரவாயில்லை. அவர்கள் குதிரை பேரம் நடத்துவதற்கு வசதியாக 15 நாட்கள் அவகாசம் அளித்து உள்ளார்.

    கவர்னரை பயன்படுத்தி இந்த நாடகத்தை நடத்தியதன் மூலம் மோடி தலைமையிலான மத்திய அரசு அரசியலமைப்பு சட்டத்தை மீறியுள்ளது.

    எங்கள் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விரைவில் முடிவு எடுப்போம்.

    இவ்வாறு குமாரசாமி கூறியுள்ளார்.#KarnatakaElections2018 #Yeddyurappa #Kumarasamy
    கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சியமைப்பதற்காக பிரதமர் மோடி குதிரை பேரத்தை ஊக்குவிப்பதாக முன்னாள் முதல்வர் சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார். #KarnatakaElection #KarnatakaHorseTrading #Siddaramaiah
    பெங்களூரு:

    கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் புதிய அரசு அமைவதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. அதிக தொகுதிகளை வென்ற கட்சி என்ற அடிப்படையில் பா.ஜ.க. ஆட்சியமைக்க உரிமை கோரி உள்ளது. அதேசமயம் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளது.  காங்கிரசும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் இணைந்து ஆட்சியமைக்க உரிமை கோரியிருக்கின்றன. ஆனால் யாரை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுப்பார் என்பதைப்பொருத்தே அடுத்தகட்ட அரசியல் நகர்வு இருக்கும்.

    இந்த சூழ்நிலையில், பெங்களூருவில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சில எம்.எல்.ஏ.க்கள் வர தாமதம் ஆனது. இது பரபரப்பையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியது. ஆனால், அனைத்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் தங்களுடன் தொடர்பில் ஒரே நிலைப்பாட்டில் இருப்பதாக சித்தராமையா கூறியுள்ளார்.

    காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் முடிவடைந்த பின்னர் சித்தராமையா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 117 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதால் மதச்சார்பற்ற ஜனதா தளம்- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியமைக்க கவர்னர் வஜுபாய் வாலா அழைப்பு விடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பிரதமர் நரேந்திர மோடி குதிரை பேரத்தை ஊக்குவிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

    மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு ஆதரவு அளிப்பதை காங்கிரஸ் கட்சியில் உள்ள சில எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் இருப்பதாக வெளியான தகவல் குறித்து சித்தராமையாவிடம் நிருபர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த சித்தராமையா, நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம், யாருக்கும் அதிருப்தி இல்லை என்றார்.



    காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு பா.ஜ.க. தலைவர்கள் போனில் அழைப்பு விடுத்திருப்பதாக மாநில முன்னாள் அமைச்சர் சிவக்குமார் குற்றம்சாட்டியிருந்தார். இதேபோல், எம்.எல்.ஏ.க்களுக்கு மந்திரி பதவி தருவதாகவும், ரூ.100 கோடி வரை ரொக்கமாக தருவதாகவும் ஆசை காட்டி பா.ஜனதா ஆட்சியை பிடிக்க பார்ப்பதாக குமாரசாமியும் குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது. #KarnatakaElection #KarnatakaHorseTrading #Siddaramaiah
    ×