search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடிமராமத்து பணிகள்"

    திருவாரூர் மாவட்டத்தில் ரூ.10½ கோடியில் குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை அமைச்சர் காமராஜ் பார்வையிட்டார்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் ஊருக்குடி கிராமத்தில் பதினெட்டாவது வாய்க்கால் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் 11.7 கி.மீ தூரத்திற்கு தூர்வாரும் பணி நடைபெற்று வருவதை உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது மாவட்ட கணிப்பாய்வு அதிகாரியும், பள்ளிக்கல்வித்துறை இணைச் செயலாளருமான சரவணவேல்ராஜ், மாவட்ட கலெக்டர் நிர்மல் ராஜ் ஆகியோர் உடன் சென்றனர்.

    பின்னர் உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அரசின் நீண்ட சட்டப் போராட்டத்தின் விளைவாக காவிரி தண்ணீர் உறுதி செய்யும் வகையில் காவிரி நீர் முறைபடுத்தும் குழு அமைக்கப்பட்டு முதல் முறையாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மேட்டூர் அணை திறக்கப்பட்டது. அதற்கு காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

    திருவாரூர் மாவட்டத்தை பொறுத்தவரை ஆறு, வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. நடப்பு ஆண்டில் குடிமராமத்து பணிகள், தூர்வாரும் பணிகள் ரூ.10 கோடியே 48 லட்சம் மதிப்பீட்டில் 144 பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை விரைவாக முடிக்க அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இப்பணிகளை கண்காணிக்கவும், கடைமடை பகுதிக்கு தண்ணீர் செல்வதை உறுதி செய்வதற்காகவும் கலெக்டரும் வெவ்வேறு துறைகளை சேர்ந்த இரண்டு அதிகாரிகள் கணிப்பாய்வு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மேற்பார்வையில் ஆறு, வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் வெண்ணாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் திருவேட்டை செல்வன், கொரடாச்செரி வட்டார வளர்ச்சி அலுவலர் வாசு மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    வேதாரண்யம் குடிமராமத்து பணிகள் மற்றும் பராமரிப்பு பணிகளை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் தமிழ்நாடு பாடநூல்கழக நிர்வாக மேலாளர் ஜெகநாதன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். #Chennairain

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தால்ககா தலைஞாயிறு பகுதிகளில் பொதுப்பணித்துறை மூலம் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகள் மற்றும் பராமரிப்பு பணிகளை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் தமிழ்நாடு பாடநூல்கழக நிர்வாக மேலாளர் ஜெகநாதன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    வேதாரண்யம் தாலுக்கா தலைஞாயிறு மற்றும் கீழையூர் ஒன்றியங்களில் சிகார் கிராமம் அண்டக்குடி வாய்க்காலில் ரூ.1.5 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகளையும், மேலநாகலூர் கிராமம் நாகலூர் வாய்க்காலில் ரூ.2.5 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகளையும், எட்டுக்குடி கிராமம் வடக்கு காட்டாறு எட்டுக்குடி கிளை வாய்க்காலில் ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகளையும், கலெக்டர் பார்வையிட்டார்.

    பின்னர் தலைஞாயிறு ஒன்றியம் தொழுதூர் வடக்கில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் தொழுதூர் வாய்க்கால் மதகு பழுதுபார்த்தல் பணிகளையும், மாராச்சேரி கிராமம் கோடிவி நாயநல்லூர் வாய்க்காலில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளையும், அருந்தவம்புலம் கிராமத்தில் ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மல்லியனாறு வடிகால் இடதுகரையில் மதகு பழுதுபார்த்தல் பணிகளையும் கலெக்டர் சுரேஷ்குமார் மற்றும் தமிழ்நாடு பாடநூல்கழக நிர்வாக மேலாளர் ஜெகநாதன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இந்த ஆய்வின் போது பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் தங்கமுத்து, உதவி செயற்பொறியாளர்கள் பாண்டியன், கண்ணப்பன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார், மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர். #Chennairain

    கடலூர் மாவட்டத்தில் வெள்ள தடுப்பு பணிக்காக ரூ.140 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாக ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
    கடலூர்:

    தமிழக அரசு சார்பில் கடலூர் மாவட்டத்தில் குடிமராமத்து பணி மற்றும் வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் சம்பந்தமான பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த பணிகளை ஆய்வு செய்வதற்கு வேளாண்மை துறை முதன்மை செயலாளர் ககன் தீப் சிங் பேடி நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்த பணிகளை ஆய்வு செய்வதற்காக ககன் தீப் சிங் பேடி இன்று காலை கடலூருக்கு வந்தார்.

    கடலூர் கம்மியம் பேட்டை பகுதியில் உள்ள கெடிலம் ஆற்றில் கரையை பலப்படுத்தும் பணி ரூ.22 கோடி செலவில் நடைபெற்று வருகிறது. இந்த பணியை ககன் தீப் சிங் பேடி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் குடிமராமத்து பணிகள் எவ்வாறு நடைபெற்று வருகிறது என்பதனை ஆய்வு செய்ய கலெக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இதில் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, தர்மபுரி, ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் குடிமராமத்து பணியினை ஆய்வு செய்ய என்னை நியமித்து உள்ளனர்.

    அதன்படி கடலூர் மாவட்டத்தில் நடைபெறும் குடிமராமத்து பணியை ஆய்வு செய்து வருகிறேன். மேலும் கடலூர் மாவட்டத்தில் வெள்ள தடுப்பு பணிக்காக ரூ.140 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதில் கெடிலம் ஆற்றில் இருபுறமும் நிரந்தரமாக கரையை பலபடுத்தும் பணியும் மற்றும் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த பணிகள் மூலம் கடலூர் நகரில் உள்ள கெடிலம் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் போது வெள்ளம் ஊருக்கு புகாமல் நிரந்தரமாக தடுக்கப்படும். மேலும் கடலூர் மாவட்டத்தில் பரவனாறு,செங்கால் ஓடை, பழைய கொள்ளிடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வெள்ள தடுப்பு பணிகளையும் ஆய்வு செய்ய உள்ளேன்.

    கடலூர் மாவட்டத்தில் உள்ள பெருமாள் ஏரி, வாலாஜா ஏரி, வெலிங்டன் ஏரி, வீராணம் ஏரி, ஆகிய ஏரிகளில் தமிழக அரசு மற்றும் என்.எல்.சி. நிறுவனமும் இணைந்து தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது கலெக்டர் தண்டபாணி, மாவட்ட வருவாய் அதிகாரி விஜயா, சப்- கலெக்டர் சரயூ மற்றும் அனைத்து துறை அதிகாரிகளும் உடன் இருந்தனர். #GagandeepSinghBedi
    குடிமராமத்து பணிகளை கண்காணிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனத்தை வரவேற்கிறோம் என்று பி.ஆர்.பாண்டியன் நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #Chennairain #PrPandian

    திருத்துறைப்பூண்டி:

    தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் திருத்துறைப்பூண்டியில் நிரூபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    காவிரியில் இருந்து உபரி நீர் மட்டுமே தமிழகத்திற்கு வழங்க முடியும் என்ற கர்நாடகாவின் உள்நோக்கத்திற்கு ஆணையம் துணைபோய்விடக் கூடாது. உரிய நீரை உரிய காலத்தில் திறக்கப்படுவதை தான் கணக்கில் கொள்ள வேண்டும்.

    நடப்பாண்டு ஆகஸ்டு 15-ந்தேதிக்குள் சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படுவதை ஆணையம் உறுதிப்படுத்த வேண்டும்.

    இந்நிலையில் கர்நாடக சட்டமன்றக் கூட்டத்தில் முதல்-மந்திரி குமாரசாமி உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு முரணாக ராசிமணல், மேகதாது ஆகிய இடங்களில் தடுப்பணை கட்டியே தீருவோம் என பேசியுள்ளார். இது குறித்து ஆணைய தலைவர் தனது கண்டனத்தை தெரிவிக்காமல் மவுனம் காத்து வருவது தனது பொறுப்பை தட்டிக் கழிப்பதாகும்.

    மேலும் ஒரு போக சம்பா சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்கும் என்று நம்பி எதிர்பார்த்து தமிழக விவசாயிகள் உள்ளனர். எனவே இது குறித்து ஆணைய தலைவர் மசூத் உசேனை விரைவில் சந்தித்து பேச உள்ளோம்.

    குடிமராமத்துப் பணிகளில் ஊழல் முறைகேடுகளின்றி உரிய காலக்கெடுவுக்குள் பணிகள் முழுமையும் நிறை வேற்றுவதை கண்காணிக்க அரசுத் துறை செயலாளர்கள் நியமிக்க வேண்டுமென முதல்-அமைச்சரை வலியுறுத்தியதன் பேரில் 7 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமித்து உள்ளதை வரவேற்கிறோம்.

    இக்குழு தமிழகம் முழுவதும் ஆய்வு பணிகளை உடன் தொடங்குவதோடு, பணிகளின் நிலை குறித்து மாவட்டம் தோறும் விவசாயிகளோடு ஆய்வு கூட்டங்கள் நடந்திட வேண்டுமென குழு தலைவரும் வேளாண் துறை முதன்மை செயலாளருமான ககன்தீப்சிங்பேடியை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #Chennairain #PrPandian

    தமிழ்நாட்டில் ரூ.328.95 கோடியில் நடக்கும் 1,151 குடிமராமத்து திட்ட பணிகளை கண்காணிக்க 7 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
    சென்னை:

    குடிமராமத்து திட்டத்தின் கீழ் ஏரிகள் புனரமைப்பு பணி மேற்கொள்ள தமிழக அரசு முடிவு செய்தது. முதற்கட்டமாக ரூ.100 கோடி செலவில் 1513 ஏரிகள் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. இதன்தொடர்ச்சியாக,  மொத்தம் 328.95 கோடி செலவில் 1511 ஏரிகள் புனரமைப்பு பணிக்கு திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு, தமிழக அரசு ஒப்புதல் அளித்தது.

    வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்குள் அனைத்து ஏரிகள் புனரமைப்பு பணிகளை முடிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொதுப்பணித்துறை பொறியாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

    இந்த நிலையில், ரூ.328.95 கோடியில் நடக்கும் 1,151 குடிமராமத்து திட்ட பணிகள் முறையாக நடைபெறுகிறதா? என்பதை கண்காணிக்க ககன்தீப் சிங் பேடி, அமுதா, பவன்குமார் பன்சால் உட்பட ஏழு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக அரசு தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் இன்று உத்தரவிட்டுள்ளார். #IASofficers #TNdesiltingworks
    ×