search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேதாரண்யம் பகுதியில் குடிமராமத்து பணிகளை பார்வையிட்டு கலெக்டர் ஆய்வு
    X

    வேதாரண்யம் பகுதியில் குடிமராமத்து பணிகளை பார்வையிட்டு கலெக்டர் ஆய்வு

    வேதாரண்யம் குடிமராமத்து பணிகள் மற்றும் பராமரிப்பு பணிகளை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் தமிழ்நாடு பாடநூல்கழக நிர்வாக மேலாளர் ஜெகநாதன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். #Chennairain

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தால்ககா தலைஞாயிறு பகுதிகளில் பொதுப்பணித்துறை மூலம் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகள் மற்றும் பராமரிப்பு பணிகளை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் தமிழ்நாடு பாடநூல்கழக நிர்வாக மேலாளர் ஜெகநாதன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    வேதாரண்யம் தாலுக்கா தலைஞாயிறு மற்றும் கீழையூர் ஒன்றியங்களில் சிகார் கிராமம் அண்டக்குடி வாய்க்காலில் ரூ.1.5 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகளையும், மேலநாகலூர் கிராமம் நாகலூர் வாய்க்காலில் ரூ.2.5 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகளையும், எட்டுக்குடி கிராமம் வடக்கு காட்டாறு எட்டுக்குடி கிளை வாய்க்காலில் ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகளையும், கலெக்டர் பார்வையிட்டார்.

    பின்னர் தலைஞாயிறு ஒன்றியம் தொழுதூர் வடக்கில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் தொழுதூர் வாய்க்கால் மதகு பழுதுபார்த்தல் பணிகளையும், மாராச்சேரி கிராமம் கோடிவி நாயநல்லூர் வாய்க்காலில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளையும், அருந்தவம்புலம் கிராமத்தில் ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மல்லியனாறு வடிகால் இடதுகரையில் மதகு பழுதுபார்த்தல் பணிகளையும் கலெக்டர் சுரேஷ்குமார் மற்றும் தமிழ்நாடு பாடநூல்கழக நிர்வாக மேலாளர் ஜெகநாதன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இந்த ஆய்வின் போது பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் தங்கமுத்து, உதவி செயற்பொறியாளர்கள் பாண்டியன், கண்ணப்பன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார், மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர். #Chennairain

    Next Story
    ×