search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காவிரி ஆணையம்"

    கர்நாடகத்தின் எதிர்ப்புக்கு இடையே, காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. இதில், இந்த மாதம் 30 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விடுமாறு தமிழகம் வலியுறுத்தும் என்று தெரிகிறது. #Cauveryissue #CauveryManagementAuthority
    புதுடெல்லி:

    தமிழகத்தில் டெல்டா மாவட்ட விவசாயிகள் காவிரி நீரையே பெரிதும் நம்பி இருக்கும் சூழ்நிலையில், ஆண்டுதோறும் கர்நாடக மாநிலத்தில் இருந்து உரிய தண்ணீரை பெறுவதில் பெரும் சிக்கல் நீடித்து வருகிறது.

    தமிழக அரசு மேற்கொண்ட தீவிர சட்டப் போராட்டத்தின் காரணமாக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில், சம்பந்தப்பட்ட மாநிலங்கள் காவிரி நீரை பகிர்ந்துகொள்வதற்காக காவிரி மேலாண்மை ஆணையத்தையும், ஒழுங்காற்று குழுவையும் மத்திய அரசு அமைத்தது. இந்த இரு அமைப்புகளுக்கும் தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களும் தங்கள் பிரதிநிதிகளை நியமித்து உள்ளன.

    காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு கர்நாடகம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தி காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு ஏற்படுத்தி இருக்கவேண்டும் என்று கர்நாடக அரசு கூறி வருகிறது.



    கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்ற கர்நாடக அனைத்துக்கட்சி கூட்டத்தில், காவிரி மேலாண்மை ஆணையத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.

    இந்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம், அதன் தலைவரான மத்திய நீர்வள ஆணைய தலைவர் மசூத் உசேன் தலைமையில் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.

    மத்திய நீர்வளத்துறை அமைச்சக அலுவலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் காவிரி மேலாண்மை ஆணையத்தில் தமிழக அரசின் சார்பில் உறுப்பினராக இடம் பெற்றுள்ள தமிழக பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர், திருச்சி மண்டல நீர்வளத் துறை தலைமை பொறியாளர் செந்தில்குமார் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். புதுச்சேரியின் சார்பில் அந்த மாநில பொதுப் பணித்துறை செயலாளர் அன்பரசு கூட்டத்தில் பங்கு கொள்கிறார். இதற்காக நேற்று அவர்கள் நேற்று டெல்லி புறப்பட்டு சென்றனர்.

    இதேபோல் கர்நாடகம், கேரளா ஆகிய மாநிலங்களின் சார்பில் உறுப்பினராக இடம் பெற்றுள்ள அதிகாரிகளும் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.

    இந்த கூட்டத்தில் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான அனைத்து விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்படுகிறது. குறிப்பாக, ஆணையத்தின் விதிகள், செயல்பாட்டு முறைகள், கூட்டங்களுக்கான நடைமுறைகள் போன்றவை பற்றி ஆலோசிக்கப்பட உள்ளது.

    மேலும், ஆணையத்தின் வரவு-செலவு கணக்குகள், மாநிலங்களின் பொறுப்புகள் போன்றவை குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக அந்த கூட்டத்தின் அலுவல் திட்டத்தில் கூறப்பட்டு உள்ளது.

    இன்றைய கூட்டத்தில், தமிழக அரசு சார்பில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட உள்ளன. இந்த மாதம் (ஜூலை) 30 டி.எம்.சி. தண்ணீரையும், அடுத்த மாதம் (ஆகஸ்டு) 50 டி.எம்.சி. தண்ணீரையும் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடுமாறு வலியுறுத்தப்படும் என்று தெரிகிறது.

    மேலும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி ஒவ்வொரு மாதமும் கர்நாடகம் தண்ணீர் திறந்து விடுவதை உறுதி செய்யவேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்படும். அத்துடன், காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டை அணுகுவது தவறு என்பதை சுட்டிக்காட்டவும் தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

    கர்நாடக அரசின் பிரதிநிதிகள் தங்கள் மாநில பிரச்சினைகள் குறித்து இன்றைய கூட்டத்தில் எடுத்துரைப்பார்கள் என்று தெரிகிறது. இதேபோல் கேரளா, புதுச்சேரி மாநிலங்களின் பிரதிநிதிகளும் தங்கள் கோரிக்கைகளை கூட்டத்தில் தெரிவிப்பார்கள்.#Cauveryissue #CauveryManagementAuthority
    மத்திய அரசு தலையீடு இல்லாமல் காவிரி ஆணையம் செயல்பட வேண்டும் எனவும் இதற்கு தமிழக அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் கி.வீரமணி கூறியுள்ளார்.
    தஞ்சாவூர்:

    தஞ்சையில் விடுதலை விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட திராவிட கழக தலைவர் கி.வீரமணி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். காலூன்ற முயற்சி செய்து தனியார் பள்ளிகளில் பயிற்சி முகாம்களை நடத்துகிறது. இதற்கு தமிழக அரசு அனுமதி கொடுத்திருப்பது மிகவும் வேதனையளிக்கிறது. மதசார்பின்மை கட்சிகள் ஒன்று சேர வேண்டிய சூழ்நிலையை கர்நாடக தேர்தல் உண்டாக்கி விட்டது. இந்த நல்ல ஒற்றுமையை பிரதமர் மோடி தன்னுடைய அதீத நடவடிக்கையின் மூலமாக உருவாக்கியிருக்கிறார். இதுவரை ஒதுங்கியிருந்த கேரளா, ஆந்திரா, புதுச்சேரி முதல் மந்திரிகள், கர்நாடக எம்.எல்.ஏ.க்களுக்கு பாதுகாப்பு கொடுக்கிறோம் என்று கூறி உள்ளனர்.

    மதர்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து பா.ஜனதாவை எதிர்க்க கூடிய கூட்டணி வர வேண்டும். இதன் மூலம் தான் இந்த தேசத்தை காப்பாற்ற முடியும், சமூக நீதியையும் காப்பாற்ற முடியும். நீட் தேர்வு நிலை பெற்று விடக்கூடாது என்பதற்காக தொடர்ந்து ஒத்த கருத்துடையவர்களுடன் இணைந்து நாங்கள் போராட்டத்தை நடத்தி வருகிறோம்.

    காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் திருத்தப்பட்ட மத்திய அரசு திட்டத்தை ஏற்கிறோம் என்று சொல்லியிருப்பது நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. ஆணையமா? அல்லது வாரியமா? என்பது முக்கியமல்ல. நடுவர் மன்ற தீர்ப்பு படி நமக்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் கிடைக்க வேண்டும். மத்திய அரசு தலையீடு இல்லாமல் ஆணையம் செயல்பட வேண்டும். இதற்கு தமிழக அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    ×