search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cauvery commission"

    காவிரி ஆணையத்தின் முதலாவது கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது. இதில் தமிழக பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள். #cauveryissue #CauveryCommission

    புதுடெல்லி:

    சுப்ரீம்கோர்ட்டு உத்தரவுப் படி தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுவை மாநிலங்கள் காவிரி நீரை பங்கிட்டு கொள்வது தொடர்பாக முடிவு எடுக்க காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு நியமித்துள்ளது.

    காவிரி ஆணையத்தின் முதலாவது கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது. கூட்டத்துக்கு மத்திய நீர்வள கமி‌ஷன் தலைவர் எஸ். மசூத் உசைன் தலைமை தாங்குகிறார். காவிரி மேலாண்மை ஆணைய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய நீர்வள கமி‌ஷன் முதன்மை பொறியாளர் நவீன்குமார் மற்றும் மத்திய அரசின் பிரதிநிதிகளான நீர்வளத்துறை பொறியாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    இதில் தமிழகத்தின் பிரதிநிதிகளாக பொதுப்பணித் துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர், திருச்சி மண்டல முதன்மை பொறியாளர் செந்தில்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். அவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக டெல்லி சென்றுள்ளனர். இதே போல் கேரளா, புதுவை மாநில பிரதிநிதிகளும் டெல்லி சென்றுள்ளனர்.

    கர்நாடகம் முதலில் காவிரி ஆணையத்துக்கு பிரதிநிதிகளை நியமிக்காமல் காலம் கடத்தியது. இதைத் தொடர்ந்து மத்திய அரசே அதிரடியாக கர்நாடகத்தின் பிரதிநிதிகளை நியமித்தது. இதனால் கர்நாடகம் பணிந்தது. நாளை நடைபெறும் காவிரி ஆணைய கூட்டத்துக்கு தனது பிரதிநிதிகளை அனுப்பி வைத்துள்ளது.

    இந்த நிலையில் நேற்று பெங்களூரில் கர்நாடக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி காவிரி ஆணையத்தை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப் போவதாக அறிவித்தது. ஆனால் சுப்ரீம்கோர்ட்டு இறுதி தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்ய முடியாது என்று நீதிபதிகள் திட்டவட்டமாக அறிவித்து இருப்பதால் கர்நாடகத்தின் அறிவிப்பு எடுபடாது என்று சட்ட நிபுணர்கள் தெரிவித்தனர்.

    நாளைய கூட்டத்தில் இதுவரை காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை அளவு, அணைகளின் நீர்மட்டம், திறக்கப்பட்ட நீரின் அளவு போன்றவை கணக்கிடப்பட்டு ஆய்வு செய்யப்படும்.

    மேலும் ஜூலை மாதத்தில் தமிழகத்துக்கு காவிரியில் திறக்கப்பட வேண்டிய நீரின் அளவு, கர்நாடகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய நீரின் அளவு போன்றவை பற்றி முடிவு எடுக்கப்படும். தமிழகத்துக்கான ஜூலை மாத நீரின் அளவை 10 நாட்கள் இடைவெளியில் 3 தவணைகளில் திறக்க உத்தரவிடப்படும் என்று தெரிகிறது.

    மேலும் கேரளா, புதுவைக்கு தண்ணீர் திறப்பது குறித்தும் ஆலோசிக்கப்படும். #cauveryissue #CauveryCommission

    மத்திய அரசு தலையீடு இல்லாமல் காவிரி ஆணையம் செயல்பட வேண்டும் எனவும் இதற்கு தமிழக அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் கி.வீரமணி கூறியுள்ளார்.
    தஞ்சாவூர்:

    தஞ்சையில் விடுதலை விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட திராவிட கழக தலைவர் கி.வீரமணி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். காலூன்ற முயற்சி செய்து தனியார் பள்ளிகளில் பயிற்சி முகாம்களை நடத்துகிறது. இதற்கு தமிழக அரசு அனுமதி கொடுத்திருப்பது மிகவும் வேதனையளிக்கிறது. மதசார்பின்மை கட்சிகள் ஒன்று சேர வேண்டிய சூழ்நிலையை கர்நாடக தேர்தல் உண்டாக்கி விட்டது. இந்த நல்ல ஒற்றுமையை பிரதமர் மோடி தன்னுடைய அதீத நடவடிக்கையின் மூலமாக உருவாக்கியிருக்கிறார். இதுவரை ஒதுங்கியிருந்த கேரளா, ஆந்திரா, புதுச்சேரி முதல் மந்திரிகள், கர்நாடக எம்.எல்.ஏ.க்களுக்கு பாதுகாப்பு கொடுக்கிறோம் என்று கூறி உள்ளனர்.

    மதர்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து பா.ஜனதாவை எதிர்க்க கூடிய கூட்டணி வர வேண்டும். இதன் மூலம் தான் இந்த தேசத்தை காப்பாற்ற முடியும், சமூக நீதியையும் காப்பாற்ற முடியும். நீட் தேர்வு நிலை பெற்று விடக்கூடாது என்பதற்காக தொடர்ந்து ஒத்த கருத்துடையவர்களுடன் இணைந்து நாங்கள் போராட்டத்தை நடத்தி வருகிறோம்.

    காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் திருத்தப்பட்ட மத்திய அரசு திட்டத்தை ஏற்கிறோம் என்று சொல்லியிருப்பது நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. ஆணையமா? அல்லது வாரியமா? என்பது முக்கியமல்ல. நடுவர் மன்ற தீர்ப்பு படி நமக்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் கிடைக்க வேண்டும். மத்திய அரசு தலையீடு இல்லாமல் ஆணையம் செயல்பட வேண்டும். இதற்கு தமிழக அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    ×