search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காவலாளி மரணம்"

    • போலீசார் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    • மாரடைப்பு காரணமாக தியாகராஜன் இறந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    ஆர்.கே. பேட்டை அடுத்த வங்கனூர் காலனியில் வசித்தவர் தியாகராஜன் (வயது 47). இவர் திருத்தணியை அடுத்த கே.ஜி. கண்டிகையில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நலன் மற்றும் மாணவர் விடுதியில் இரவு காவலாளியாக பணியாற்றி வந்தார்.

    இவரோடு விடுதியின் சமையலர் கோபிநாத் என்பவரும் பணியாற்றி வருகிறார். இன்று அதிகாலை 4 மணி அளவில் கழிவறைக்கு சென்ற தியாகராஜன் நீண்ட நேரம் ஆகியும் வரவில்லை. அறையை விட்டு வெளியே வந்து சமையலர் கோபிநாத் பார்த்த போது வராண்டாவில் தியாகராஜன் பிணமாக கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த கோபிநாத் விடுதி அதிகாரிகள் மற்றும் திருத்தணி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த போலீசார் பிணத்தைக் கைப்பற்றி திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மாரடைப்பு காரணமாக தியாகராஜன் இறந்ததாக போலீசார் தெரிவித்தனர். இறந்து போன இரவு காவலர் தியாகராஜனுக்கு பன்னீர் செல்வி என்ற மனைவியும் தனுஸ்ரீ, கோகுல்ராஜ் ஆகிய 2 குழந்தைகளும் உள்ளனர்.

    • யானை தாக்கி கூலித்தொழிலாளி உயிரிழந்திருப்பது விவசாயிகள் மற்றும் பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
    • வனத்துறையினர் துரிதமாக செயல்பட்டு யானை ஊருக்குள் வருவதை தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகில் உள்ள பல்லவராயன்பட்டியை சேர்ந்தவர் முருகன்(47). இவர் பண்ணைப்புரத்தில் உள்ள செல்லம் என்பவரது தென்னந்தோப்பில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். வழக்கமாக இரவு நேர காவலுக்கு சென்றுவிட்டு காலையில் வீடு திரும்புவது வழக்கம்.

    அதன்படி இன்றுகாலை வெகுநேரமாகியும் முருகன் வீட்டிற்கு வரவில்லை. இதனால் சந்தேகமடைந்து அவரது குடும்பத்தினர் தோட்டத்திற்கு வந்து பார்த்துள்ளனர். அப்போது முருகன் பலத்த ரத்தகாயங்களுடன் இறந்துகிடந்துள்ளார்.

    அவரை யானை மிதித்து கொன்றதற்கான தடயங்கள் இருந்ததால் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வனத்துறையினருக்கும், கோம்பை போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இதில் முருகன் யானை தாக்கி உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. இதனைதொடர்ந்து யானையின் கால் தடங்களை வைத்து ஒரு யானை வந்ததா அல்லது 2 யானைகள் வந்ததா என விசாரித்து வருகின்றனர்.

    இப்பகுதியில் ஏற்கனவே கடந்த காலங்களில் ஒற்றை யானை, மக்னா யானை ஆகியவை அடிக்கடி விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியதுடன் ஏராளமான உயிர்களையும் காவு வாங்கியது. இதனையடுத்து கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு மக்னா யானையை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். ஆனால் அந்த முயற்சி தோல்வியடைந்ததால் மீண்டும் கும்கி யானைகள் திருப்பி அனுப்பி விடப்பட்டன.

    தற்போது மீண்டும் யானை தாக்கி கூலித்தொழிலாளி உயிரிழந்திருப்பது இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. எனவே வனத்துறையினர் துரிதமாக செயல்பட்டு யானை ஊருக்குள் வருவதை தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    உயிரிழந்த முருகனுக்கு பிரியா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

    • கோயம்பேடு மார்க்கெட்டில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். மார்கெட் வளாகத்தில் திடீரென சுருண்டு விழுந்து இறந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சாலிகிராமம், விஜயராகவபுரம் பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் (வயது67). கோயம்பேடு மார்க்கெட்டில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இன்று அதிகாலை 3 மணி அளவில் மார்கெட் வளாகத்தில் திடீரென சுருண்டு விழுந்து இறந்தார். இதுகுறித்து கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×