search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காய்ச்சல் சிறப்பு முகாம்"

    • வைரஸ் காய்ச்சல் பாதிப்பால் மக்கள் மருத்துவமனைகளில் அதிகளவில் அனுமதிக்கப்படுகிறார்கள்.
    • டிசம்பர் மாத இறுதி வரை காய்ச்சல் முகாம்கள் நடைபெற உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சல், சளி, இருமல் போன்றவற்றால் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள். வைரஸ் காய்ச்சல் பாதிப்பால் மக்கள் மருத்துவமனைகளில் அதிகளவில் அனுமதிக்கப்படுகிறார்கள்.

    புறநோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று செல்கிறார்கள். தனியார் மருத்துவமனைகள், சிறிய கிளினிக்குகளில் கூட்டம் நிரம்பி காணப்படுகிறது.

    மழைக்காலத்தில் ஏற்படக்கூடிய காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்த பொது சுகாதாரத்துறையின் சார்பில் கடந்த மாத இறுதியில் காய்ச்சல் சிறப்பு முகாம்கள் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டது. டிசம்பர் மாத இறுதி வரை காய்ச்சல் முகாம்கள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:

    * தமிழகத்தில் இதுவரை புதிய வகை வைரஸ் பாதிப்பு இல்லை.

    * மாநிலம் முழுவதும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    * உரிய முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • டிசம்பர் இறுதி வரை காய்ச்சல் முகாம்கள் நடைபெறும்.
    • மொபைல் மருத்துவ குழுவினரும் கிராமப்பகுதிகளுக்கு சென்று சிகிச்சை அளிக்கிறார்கள்.

    சென்னை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சல், சளி, இருமல் போன்றவற்றால் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள். வைரஸ் காய்ச்சல் பாதிப்பால் மக்கள் மருத்துவமனைகளில் அதிகளவில் அனுமதிக்கப்படுகிறார்கள்.

    புறநோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று செல்கிறார்கள். தனியார் மருத்துவமனைகள், சிறிய கிளினிக்குகளில் கூட்டம் நிரம்பி காணப்படுகிறது.

    மழைக்காலத்தில் ஏற்படக்கூடிய காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்த பொது சுகாதாரத்துறையின் சார்பில் காய்ச்சல் சிறப்பு முகாம்கள் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படுகிறது. கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் காய்ச்சல் முகாம் தொடங்கியது.

    அதனை தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படுகின்றன. ஒன்றியத்திற்கு 3 முகாம்கள் வீதம் நடக்கின்றன. நகரப் பகுதிகள், கிராமப்பகுதிகளில் இதுவரை 4 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. நாளை (சனிக்கிழமை) 5-வது வாரமாக முகாம்கள் நடக்கின்றன.

    இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் கூறியதாவது:-

    இதுவரையில் 4 வாரங்கள் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. மொத்தம் 6260 முகாம்களில் மக்கள் சிகிச்சை பெற்றுள்ளனர். காய்ச்சல், இருமல், சளி போன்றவற்றால் பாதிக்கப்பட்ட 4 லட்சத்து 14 ஆயிரத்து 458 பேர் பயன் அடைந்துள்ளனர்.

    நாளை 1000 சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. சென்னையில் மண்டலத்திற்கு 3 வீதம் 50 முகாம்கள் நடைபெறுகின்றன. காய்ச்சல் முகாம்களில் மருத்துவர்கள், செவிலியர்கள், உதவியாளர்கள் இடம்பெறுவார்கள்.

    டிசம்பர் இறுதி வரை காய்ச்சல் முகாம்கள் நடைபெறும். மொபைல் மருத்துவ குழுவினரும் கிராமப்பகுதிகளுக்கு சென்று சிகிச்சை அளிக்கிறார்கள். 3 பேருக்கு மேல் எந்த பகுதியில் காய்ச்சல் பாதிப்பு இருந்தாலும் அந்த இடங்களை கண்டறிந்து முகாம்கள் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 4 இடங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் இன்று சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • இந்த முகாம் இன்னும் ஒரு வாரம் தொடர்ந்து நடைபெற உள்ளது.

    ஈரோடு:

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரம் அடைந்து வருவதன் காரணமாக டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல்கள் வேகமாக பரவி வருகிறது. தமிழ்நாடு முழுவதும் அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் காய்ச்ச லுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இதையடுத்து தமிழகத்தில் பருவமழை காரணமாக டெங்கு மற்றும் காய்ச்சல் அதிகரிப்பதை தொடர்ந்து முதல்-அமைச்சர் வழிகாட்டுதலின் பேரில் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் இன்று முதல் ஒரு வாரத்திற்கு தமிழகம் முழுவதும் தினமும் 1000 இடங்களில் டெங்கு மற்றும் மழைக்கால நோய்க ளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தார்.

    அதன்படி ஈரோடு மாவட்டத்தில் டெங்கு மற்றும் காய்ச்சல் அதிகரி க்கும் இடங்களை கண்ட றிந்து இன்று முதல் ஒரு வாரத்திற்கு தினந்தோறும் 46 இடங்களில் 15 மருத்துவ குழுக்களை கொண்டு டெங்கு மற்றும் மழைக்கால நோய்காளுக்கான காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படும் என சுகாதாரத் துறை அறிவித்திருந்தது.

    அதன்படி ஈரோடு மாவட்ட மாநகராட்சி பகுதியில் வில்லரசம்பட்டி, ராயபாளையம், இ.பி.பி. நகர், வெண்டிபாளையம் ஆகிய 4 இடங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்க ளில் இன்று சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

    வில்லரசம்பட்டி பகுதி மக்களுக்கு திண்டலில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திலும், ராயபாளை யம் பகுதி மக்களுக்கு வீரப்பன்சத்திரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திலும், இ.பி.பி. நகர் பகுதி மக்களுக்கு பெரிய சேமூர் ஆரம்ப சுகாதார நிலை யத்திலும், வெண்டி பாளை யம் பகுதி மக்களுக்கு நேதாஜி தெருவில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தி லும் சிறப்பு காய்ச்சல் முகாம் நடந்தது.

    இதேபோல் கோபியில் 3 இடங்களிலும், சத்தியமங்கலத்தில் 3 இடங்களிலும், நம்பியூரில் 3 இடங்களிலும், டி. என். பாளையம் பகுதியில் 3 இடங்களிலும், சென்னி மலை, மொடக்கு றிச்சி, கொடுமுடி, தாள வாடி, அந்தியூர், அம்மா பேட்டை, பவானி, பவானிசாகர், பெருந்துறை ஆகிய பகுதி களில் தலா 3 இடங்களிலும் இந்த சிறப்பு மருத்துவ முகாம் நடை பெற்றது.

    முகாம் நடைபெறும் இடங்கள் காய்ச்சல் அதிகம் பரவ கூடிய இடங்களை கண்டறியப்பட்டு அங்கு நடத்தப்படுகிறது. இன்று காய்ச்சல் முகாமில் வந்த ஒரு சிலருக்கு காய்ச்சல் அறிகுறிகள் இருந்தது.

    அவர்களுக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன. மேலும் சிலரை அருகே உள்ள அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலை யத்திற்கு சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டனர்.

    இந்த முகாம் இன்னும் ஒரு வாரம் தொடர்ந்து நடைபெற உள்ளது.

    இதுகுறித்து ஈரோடு மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் சோம சுந்தரம் கூறியதாவது:-

    ஈரோடு மாவட்ட பொது மக்கள் தங்கள் பகுதிகளுக்கு அருகில் நடைபெறும் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்களை அணுகி காய்ச்சல் இருப்பின் சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.

    சுய மருத்துவமாக கடை களில் தாமாகவே காய்ச்சலு க்கான மருந்து, மாத்திரை களை வாங்கி உட்கொ ள்வதை தவிர்க்க வேண்டும்.

    மழைக்கால ங்களில் தங்கள் வீடுகளை சுற்றியுள்ள பகுதி களில் உள்ள தேவையற்ற பொரு ட்களை அகற்றி மழை நீர் தேங்கா வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    கொசு உற்பத்தியை தடுப்பதற்காக தினந்தோறும் தங்கள் வீடுகளில் உள்ள தண்ணீர் பிடித்து வைக்க க்கூடிய தொட்டிகள், குடங்கள் ஆகியவற்றை வாரம் ஒரு முறை சுத்தம் செய்து தண்ணீரை மூடி வைத்து பாதுகாத்து கொள்ள வேண்டும்.

    கொதிக்க வைத்து, ஆறவைத்து, வடிகட்டிய தண்ணீரை குடிநீராக பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • பொது மக்கள் நல்ல தண்ணீரை மூடி வைக்க வேண்டும்.
    • சென்னையில் கை புகை தெளிப்பான், வாகன தெளிப்பான் மூலமாக கொசுவை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்.

    சென்னை:

    தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து உள்ளது. சென்னை மதுரவாயலைச் சேர்ந்த 4 வயது சிறுவன் ரக்சனும் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அபிநிதி என்ற சிறுமியும் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகி இருக்கிறார்கள். டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலுக்கு தினமும் 30 பேர் வரை பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள்.

    இதனை கருத்தில் கொண்டு சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் டெங்கு காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம்களை நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இதன்படி இன்று தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டது.

    ஞாயிற்றுக்கிழமையான இன்று விடுமுறை தினம் என்பதால் காய்ச்சல் முகாம்களில் பரிசோதனை செய்து கொள்வதற்காக மக்கள் குவிந்தனர். காய்ச்சலுடன் முகாமுக்கு வந்திருந்த பலருக்கு அது தொடர்பான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    காய்ச்சல் அதிகமாக இருப்பவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சுகாதார துணை ஊழியர்கள் அனுப்பி வைத்தனர்.

    அதுபோன்ற நபர்களுக்கு எந்த மாதிரியான காய்ச்சல் உள்ளது என்று பரிசோதனை செய்யப்பட்டது.

    சென்னையில் இன்று 45 இடங்களில் டெங்கு காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டன. சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரை பகுதியில் நடைபெற்ற காய்ச்சல் முகாமை மேயர் பிரியா தொடங்கி வைத்தார்.

    2 டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய மருத்துவக் குழுவினர் பரிசோதனைகளை மேற்கொண்டனர். அந்த பகுதியைச் சேர்ந்த மீனவ மக்களும் அந்த வழியாக சென்ற பொதுமக்களும் காய்ச்சல் முகாமில் பங்கேற்று பயன் அடைந்தனர்.

    சளித்தொல்லை, இருமலால் பாதிக்கப்பட்டு இருந்த நபர்களும் வந்து சிகிச்சை பெற்றனர். அவர்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. நிலவேம்பு கசாயம், கபசுர குடிநீர் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டது.

    லேசான காய்ச்சலுடன் வந்தவர்களிடம், 2 அல்லது 3 நாட்கள் வரையில் காய்ச்சல் நீடித்தால் அதன் பின்னரும் காத்திருக்க வேண்டாம். தாமதமின்றி காய்ச்சல் பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும் என்று முகாமுக்கு வந்தவர்களிடம் அறிவுறுத்தப்பட்டது. அப்போதுதான் அது சாதாரண காய்ச்சலா? இல்லை டெங்கு உள்ளிட்ட வேறு வகையான காய்ச்சலா? என்பதை கண்டறிய முடியும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

    டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்களின் உற்பத்தி குறித்தும், அதனை தடுப்பது குறித்தும் காய்ச்சல் முகாம்களில் உரிய விளக்கம் அளித்து செயல்முறை விளக்கத்தை செய்து காட்டும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

    வீடுகளில் உள்ள தண்ணீர் பாத்திரங்களை நன்றாக மூடி வைக்க வேண்டும் என்றும், மொட்டை மாடிகள் மற்றும் வீடுகளை சுற்றி உள்ள பகுதிகளில் டயர்கள், தேங்காய் சிரட்டைகள் மற்றும் மழைநீர் தேங்கும் வகையிலான பொருட்கள் கிடந்தால் அதனை உடனே அப்புறப்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது.

    அப்போதுதான் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க முடியும் என்றும் மருத்துவக் குழுவினர் தெரிவித்தனர். இதுதொடர்பான துண்டு பிரசுரங்களும் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. காய்ச்சல் முகாமை தொடங்கி வைத்த பின்னர் மேயர் பிரியா நிருபர்களிடம் கூறியதாவது:-

    சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் தலா 3 இடங்கள் வீதம் 45 இடங்களில் மருத்துவ முகாம் நடைபெறுகிறது. ஜனவரி முதல் செப்டம்பர் வரை 3962 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளன. சென்னையில் இதுவரை 145 பேருக்கு டெங்கு பாதித்து சிகிச்சை பெற்று உள்ளனர், தற்போது 75 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

    பொது மக்கள் நல்ல தண்ணீரை மூடி வைக்க வேண்டும். சென்னையில் கை புகை தெளிப்பான், வாகன தெளிப்பான் மூலமாக கொசுவை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • காய்ச்சல் முகாம்களுக்காக தமிழகத்தில் 476 நடமாடும் மருத்துவக் குழுக்கள் ஈடுபடுவார்கள்.
    • இந்த நோய்கள் பரவாமல் தடுக்க பல்வேறு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    சென்னை :

    தமிழகம், புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக இன்புளுயன்சா காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. மழை காலங்களில் இந்த வைரஸ் காய்ச்சல் பாதிப்பு ஏற்படுவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க அரசு ஆஸ்பத்திரிகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. டாக்டர்கள் அங்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    காய்ச்சல் அதிகளவில் பரவி வருவதால் 1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வருகிற 25-ந்தேதி வரை புதுச்சேரி அரசு விடுமுறை அளித்துள்ளது. இருந்தபோதிலும் குழந்தைகளுக்கு காய்ச்சல் அதிக அளவில் பரவி நாள்தோறும் சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    புதுச்சேரியில் நேற்று ஒரு நாளில் மட்டும் 830 பேர் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளனர்.

    தமிழகத்திலும் வேகமாக பரவி வரும் காய்ச்சல் குறித்து நேற்று 'தினத்தந்தி' யில் செய்தி வெளியானது. இதையடுத்து மருத்துவம் மற்றும் மக்கள் நல் வாழ்வுத்துறை காய்ச்சலை கட்டுப்படுத்தும் முயற்சியில் தீவிரம் காட்டியுள்ளது.

    இந்தநிலையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் மருத்துவர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

    கூட்டத்திற்கு பின்னர் நிருபர்களிடம் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

    தற்போது இன்புளுயன்சா காய்ச்சல் பாதிப்பு அடைந்து 371 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 5 வயதிற்கு உட்பட்டவர்கள் 46 பேர், 5 முதல் 14 வயதிற்குட்பட்டவர்கள் 60 பேர், 14 முதல் 65 வயதிற்குட்பட்டவர்கள் 194 பேர், 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் 71 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் பெரிய அளவில் அச்சப்பட வேண்டிய தேவையில்லை.

    இந்த நோய்கள் பரவாமல் தடுக்க பல்வேறு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில் காய்ச்சல் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க தமிழகம் முழுவதும் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட உள்ளன. நாளை (இன்று) தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் காய்ச்சல் தடுப்பு முகாம்கள் நடைபெறும். இந்த காய்ச்சல் முகாம்களுக்காக தமிழகத்தில் 476 நடமாடும் மருத்துவக் குழுக்கள் ஈடுபடுவார்கள்.

    சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 3 மற்றும் அதற்கு மேல் காய்ச்சல் பாதிக்கப்பட்ட நபர்கள் உள்ள இடங்களில் நாளை (இன்று) 100 சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடைபெறும். இவ்வாறு தமிழ்நாடு அரசு பருவ கால காய்ச்சல் மற்றும் நோய்களை கட்டுப்படுத்துவதற்கு அனைத்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், இம்முகாம்கள் காய்ச்சல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேவைக்கேற்ப தொடர்ந்து நடைபெறும். எனவே காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் அருகில் உள்ள முகாம்களுக்கு சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் அவர் கூறியதாவது:-

    முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இதுவரை 1 கோடி பயனாளிகளுக்கு மேல் பயனடைந்துள்ளனர். காப்பீட்டு திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று பயன்பெறுவோர் எண்ணிக்கை கடந்த 1½ ஆண்டுகளில் 37 சதவீதத்திலிருந்து 48 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஏழை-எளிய மக்களுக்கு இருதய நோய் தொடர்பாக உரிய சிகிச்சையை வழங்க தமிழ்நாடு அரசு 1973-ம் ஆண்டு ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 'கேத் லேப்' வசதி ஏற்படுத்தியது. தற்போது 19 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைகளில் தலா ரூ.4.5 கோடி முதல் 7.5 கோடி மதிப்பிலான 'கேத் லேப்' வசதிகள் நிறுவப்பட்டுள்ளன. இந்த உயர்தர கருவிகளை படிப்படியாக அனைத்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் செயல்படுத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அரசு முதன்மை செயலாளர் டாக்டர். செந்தில்குமார், மருத்துவக் கல்வி இயக்குனர் டாக்டர். நாராயணபாபு மற்றும் அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளின் இருதய சிகிச்சை பிரிவு மருத்துவர்கள் கலந்துக்கொண்டனர்.

    ×