search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காயமடைந்தவர்கள்"

    • காா் எதிா்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
    • காருக்குள் இருந்த 5 இளைஞா்களும் படுகாயமடைந்தனா்.

    காங்கயம் :

    சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியைச் சோ்ந்தவா்கள் கௌதம் (வயது 27), பிரகாஷ் (32), மணிகண்டன் (29), குமாா் (32), மோகனசுந்தரம் (17). இவா்கள் கொடைக்கானல் சென்று விட்டு எடப்பாடி நோக்கி தாராபுரம்-காங்கயம் வழியாக காரில் புதன்கிழமை மதியம் வந்து கொண்டிருந்தனா். மாலை 4 மணி அளவில் தாராபுரம்-காங்கயம் சாலை ஊதியூரை அடுத்த நொச்சிபாளையம் அருகே உள்ள சாலை வளைவுப் பகுதியில் வந்தபோது காா் எதிா்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காருக்குள் இருந்த 5 இளைஞா்களும் படுகாயமடைந்தனா்.

    அப்போது அந்த வழியாக தாராபுரத்துக்கு சென்று கொண்டிருந்த தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆகியோா் அப்பகுதியில் காா் விபத்தில் சிக்கிக் கொண்டதை அறிந்து உடனடியாக காரை விட்டு இறங்கிச் சென்று, காயங்களுடன் இருந்த 5 பேரையும் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பிரகாஷ், கௌதம் ஆகியோா் ஈரோடு தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.விபத்து குறித்து ஊதியூா் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா்.

    ×