search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காதல் தொல்லை"

    • கொரியர் நிறுவனத்தில் வேலை பார்த்த ஞானசுப்பிரமணியன் அந்த பெண்ணிடம் தன் காதலை கூறி தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி வந்துள்ளார்.
    • ஞானசுப்பிரமணியன் தொடர்ந்து வற்புறுத்தியதால் பெண், வேலையை விட்டு விட்டு சென்னைக்கு சென்றுவிட்டார்.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த பழையபேட்டை பகுதியை சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர் டவுனில் உள்ள ஒரு தட்டச்சு பயிற்சி மையத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இவர் பேட்டை போலீசில் ஒரு புகார் அளித்தார். அந்த புகார் மனுவில் தனது தங்கைக்கு ஒரு இன்ஸ்டாகிராம் ஐடி-யில் இருந்து வாலிபர் ஒருவர் காதலிக்குமாறு வற்புறுத்துவதாகவும், அவரை கண்டறிந்து கைது செய்யவேண்டும் என்றும் கூறியிருந்தார்.

    அதன்பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்ஸ்டாகிராம் ஐடியை வைத்து மர்மநபரை தேடியதில், அந்த நபர் பாளை போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்த கணேசன் என்பவரது மகன் ஞானசுப்பிரமணியன்(வயது 28) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து நடத்திய விசாரணையில், கடந்த 4 வருடங்களுக்கு முன்பு இளம்பெண்ணின் தங்கை டவுனில் உள்ள ஒரு மருந்து கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.

    அப்போது கொரியர் நிறுவனத்தில் வேலை பார்த்த ஞானசுப்பிரமணியன் அந்த பெண்ணிடம் தன் காதலை கூறி தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி வந்துள்ளார். அவர் தொடர்ந்து வற்புறுத்தியதால் அந்த பெண், வேலையை விட்டு விட்டு சென்னைக்கு சென்றுவிட்டார்.

    ஆனாலும் அவரை போன் செய்து தொந்தரவு செய்து வந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் குறுந்தகவல்கள் அனுப்பியது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    • கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சூரிய பிரகாஷ், மாணவியிடம் காதலை வெளிப்படுத்தி உள்ளார்.
    • சூரிய பிரகாஷ் மாணவியை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கினார்.

    கோவை,

    கோவை அருகே கோவில்பாளையத்தை சேர்ந்தவர் 20 வயது கல்லூரி மாணவி. இவர் சின்னவேடம்பட்டியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    இவரது வகுப்பில் ஆர்.எஸ்.புரம் சுண்டபாளையம் ரோட்டை சேர்ந்த சூரிய பிரகாஷ் (21) என்ற மாணவர் படித்து வருகிறார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சூரிய பிரகாஷ், அந்த மாணவியிடம் தனது காதலை வெளிப்படுத்தி உள்ளார். ஆனால் அவரது காதலை மாணவி ஏற்க மறுத்து விட்டார்.

    ஆனால் சூரிய பிரகாஷ் மாணவியை பின்தொடர்ந்து சென்று தன்னை காதலிக்குமாறு தொல்லை கொடுத்து வந்தார். அவரது தொல்லை தாங்க முடியாமல் மாணவி தனது சகோதரரிடம் தெரிவித்தார். அவர் சூரியபிரகாசை அழைத்து கண்டித்தார்.

    சம்பவத்தன்று கல்லூரி முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக கல்லூரி வாசலில் மாணவி நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சூரியபிரகாஷ் மாணவியிடம் ஏன் என்னை காதலிக்க மாட்டாயா? என கேட்டு மீண்டும் தகராறு செய்தார்.

    இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த சூரிய பிரகாஷ் மாணவியை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கினார். இது குறித்து மாணவி சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து காதலிக்குமாறு தொல்லை கொடுத்து மாணவியை தாக்கிய கல்லூரி மாணவர் சூரியபிரகாசை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • மாணவி பள்ளிக்கு செல்லும் போது அவரை பின் தொடர்ந்து சென்று தன்னை காதலிக்குமாறு தொல்லை கொடுத்து வந்தார்.
    • மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்த மகேஸ்வரனை கைது செய்தனர்.

    கோவை,

    கோவை அருகே உள்ள எஸ்.எஸ்.குளத்தை சேர்ந்த 13 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    மாணவியை புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூரை சேர்ந்தவரும், தற்போது கோவில் பாளையத்தில் தங்கி இருந்து அங்குள்ள பேக்கரியில் டீ மாஸ்டராக வேலை பார்க்கும் மகேஸ்வரன் (வயது 21) என்பவர் ஒரு தலையாக காதலித்து வந்தார்.

    அவர் மாணவி பள்ளிக்கு செல்லும் போது அவரை பின் தொடர்ந்து சென்று தன்னை காதலிக்குமாறு தொல்லை கொடுத்து வந்தார்.

    இந்தநிலையில் மாணவி யின் செல்போனை எப்படியோ தெரிந்து கொண்ட மகேஸ்வரன் அவரது செல்போனுக்கு அடிக்கடி தொடர்பு கொண்டு தொல்லை கொடுத்து வந்தார்.

    இது குறித்து மாணவி தனது தாயிடம் கூறி கதறி அழுதார். அவர் இது குறித்து கோவில்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் பள்ளி மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்த மகேஸ்வரனை கைது செய்தனர். பின்னர் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  

    ×