search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் கல்லூரி மாணவிக்கு காதல் தொல்லை
    X

    கோவையில் கல்லூரி மாணவிக்கு காதல் தொல்லை

    • கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சூரிய பிரகாஷ், மாணவியிடம் காதலை வெளிப்படுத்தி உள்ளார்.
    • சூரிய பிரகாஷ் மாணவியை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கினார்.

    கோவை,

    கோவை அருகே கோவில்பாளையத்தை சேர்ந்தவர் 20 வயது கல்லூரி மாணவி. இவர் சின்னவேடம்பட்டியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    இவரது வகுப்பில் ஆர்.எஸ்.புரம் சுண்டபாளையம் ரோட்டை சேர்ந்த சூரிய பிரகாஷ் (21) என்ற மாணவர் படித்து வருகிறார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சூரிய பிரகாஷ், அந்த மாணவியிடம் தனது காதலை வெளிப்படுத்தி உள்ளார். ஆனால் அவரது காதலை மாணவி ஏற்க மறுத்து விட்டார்.

    ஆனால் சூரிய பிரகாஷ் மாணவியை பின்தொடர்ந்து சென்று தன்னை காதலிக்குமாறு தொல்லை கொடுத்து வந்தார். அவரது தொல்லை தாங்க முடியாமல் மாணவி தனது சகோதரரிடம் தெரிவித்தார். அவர் சூரியபிரகாசை அழைத்து கண்டித்தார்.

    சம்பவத்தன்று கல்லூரி முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக கல்லூரி வாசலில் மாணவி நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சூரியபிரகாஷ் மாணவியிடம் ஏன் என்னை காதலிக்க மாட்டாயா? என கேட்டு மீண்டும் தகராறு செய்தார்.

    இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த சூரிய பிரகாஷ் மாணவியை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கினார். இது குறித்து மாணவி சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து காதலிக்குமாறு தொல்லை கொடுத்து மாணவியை தாக்கிய கல்லூரி மாணவர் சூரியபிரகாசை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    Next Story
    ×