search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காங்கிரஸ் வேட்பாளர்கள்"

    டெல்லியில் உள்ள 7 தொகுதிகளில் முதல்கட்டமாக 4 தொகுதிகளுக்கு காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். #Congress #Loksabhaelections2019
    புதுடெல்லி:

    டெல்லியில் மொத்தம் 7 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் கூட்டணி அமைத்து போட்டியிட காங்கிரஸ் கட்சியும், ஆம் ஆத்மி கட்சியும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தன.

    ஆனால் அந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படவில்லை. இதனால் 7 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

    டெல்லியில் 7 தொகுதிகளிலும் யார் யாரை வேட்பாளர்களாக நிறுத்தலாம் என்று நேற்று மாலை நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அப்போது ஏற்கனவே போட்டியிட்ட மூத்த தலைவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது.

    அந்த கோரிக்கையை காங்கிரஸ் தலைவர் ராகுல் ஏற்றுக்கொண்டார். இதையடுத்து டெல்லியில் உள்ள 7 தொகுதிகளில் முதல்கட்டமாக 4 தொகுதிகளுக்கு காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    புதுடெல்லி தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய்மக்கான் நிறுத்தப்பட்டுள்ளார். மற்றொரு மூத்த தலைவர் கபில்சிபல் சாந்தினி சவுக் தொகுதியில் போட்டியிடுகிறார்.

    வடகிழக்கு டெல்லி தொகுதியில் ஜே.பி.அகர்வால், வடமேற்கு டெல்லி தொகுதியில் ராஜ்குமார் சவுகான், காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளனர். கடந்த 2014-ம் ஆண்டு நடந்த தேர்தலில் கபில் சிபல், அஜய்மக்கான், அகர்வால் ஆகிய மூவரும் போட்டியிட்டு பா.ஜனதா வேட்பாளர்களிடம் தோல்வியடைந்தனர்.

    தற்போது அவர்கள் மூவருக்கும் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    தெற்கு டெல்லி, மேற்கு டெல்லி, கிழக்கு டெல்லி ஆகிய 3 தொகுதிகளுக்கும் காங்கிரஸ் வேட்பாளர்களாக யாரை நிறுத்தலாம் என்று ஆலோசனை நடந்து வருகிறது. ஓரிரு நாட்களில் அவர்கள் பெயர் வெளியிடப்படும் என்று டெல்லி மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் பி.சி.சாக்கோ தெரிவித்தார். #Congress #Loksabhaelections2019
    ஒடிசா சட்டசபை தேர்தலில் கடைசி நேரத்தில் 2 காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிட முடியாது என திடீரென மறுத்து விட்டனர். #Congress #CongressCandidate #Odisha
    புவனேசுவரம்:

    பாராளுமன்ற தேர்தலுடன் ஒடிசா சட்டசபைக்கும் தேர்தல் நடக்கிறது. இங்கு 4-ம் கட்ட தேர்தல் 29-ந் தேதி நடக்கிறது.

    இங்கு பர்சானா, நிமாபாரா ஆகிய 2 தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்களாக சீதாகந்த் மோகபத்ரா, சத்யபிராத் பத்ரா ஆகியோர் அறிவிக்கப்பட்டிருந்தனர். வேட்பு மனு தாக்கலுக்கு நேற்று கடைசி நாள்.

    இந்த நிலையில், இவர்கள் இருவரும் போட்டியிட முடியாது என நேற்று முன்தினம் இரவு திடீரென மறுத்து விட்டனர்.

    அதைத் தொடர்ந்து அவ்விரு தொகுதிகளில் புதிய வேட்பாளர்களாக அஜய் சமால், திலீப் நாயக் ஆகியோர் அறிவிக்கப்பட்டு, நேற்று கடைசி நேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தனர். ஏற்கனவே ஒடிசா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டிருந்த 4 பேர் போட்டியிட மறுத்து விட்டது நினைவுகூரத்தக்கது. #Congress #CongressCandidate #Odisha 
    பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தேனி தொகுதியில் இளங்கோவன் போட்டியிடுகிறார். #LSPolls #congress #congressCandidates
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான அணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, முஸ்லிம் லீக், ஐ.ஜே.கே., கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளன.

    தமிழ்நாடு-புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் தி.மு.க. 20 இடங்களில் போட்டியிடுகிறது. காங்கிரஸ்-10, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகளுக்கு தலா 2 இடங்களும், ம.தி.மு.க., முஸ்லிம் லீக், ஐ.ஜே.கே., கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவைக்கு தலா ஒரு இடமும் ஒதுக்கப்பட்டுள்ளன.

    தி.மு.க. கூட்டணியில் கடந்த வாரம் தொகுதி பங்கீடு நடந்து முடிந்ததும் மறுநாளே தி.மு.க., வேட்பாளர்களை அறிவித்தது. விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., இடது சாரிகள், முஸ்லிம் லீக் உள்ளிட்ட மற்ற கூட்டணி கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பணிகளை தொடங்கின.

    காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் போட்டியிடும் 9 தொகுதி வேட்பாளர்கள் மற்றும் புதுச்சேரி வேட்பாளர் யார் என்பது குறித்து முடிவு செய்ய டெல்லி மேலிடத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கடந்த சில தினங்களாக ஆலோசனை நடத்தி வந்தனர். ஒவ்வொரு தொகுதியையும் 3 முதல் 5 பேர் பிடிவாதமாக கேட்டதால் காங்கிரஸ் வேட்பாளர்களை முடிவு செய்வதில் நீண்ட இழுபறி நீடித்தது.

    இந்த நிலையில் நேற்று மாலை காங்கிரஸ் உயர்மட்ட குழு கூட்டம் ராகுல் தலைமையில் நடந்தது. அதில் தமிழ்நாட்டில் 9 தொகுதிகளில் யார்-யாரை வேட்பாளர்களாக அறிவிப்பது என்பது பற்றி தீவிர ஆலோசனை நடத்தப்பட்டது. இரவு வரை இந்த ஆலோசனை நீடித்தது.

    தமிழக காங்கிரஸ் தலைவர்கள் எப்படியாவது தொகுதியை பெற்று விட வேண்டும் என்று தீவிரமாக இருந்ததால் கடும் சவால்களுக்கு மத்தியில்தான் காங்கிரஸ் வேட்பாளர்களை தேர்வு செய்ய முடிந்தது.

    இதையடுத்து நேற்று இரவு காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன் விவரம் வருமாறு:-

    கன்னியாகுமரி- எச்.வசந்த குமார்

    விருதுநகர்- மாணிக் தாகூர்

    திருச்சி - திருநாவுக்கரசர்

    ஆரணி-விஷ்ணு பிரசாத்

    திருவள்ளூர் (தனி)- ஜெயக்குமார்

    தேனி- ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

    கரூர்- ஜோதிமணி

    கிருஷ்ணகிரி- டாக்டர் செல்லக்குமார்

    புதுச்சேரி- வைத்திலிங்கம்


    சிவகங்கை தொகுதிக்கு மட்டும் காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. அங்கு யாரை நிறுத்துவது என்பது பற்றி தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு அந்த தொகுதி கேட்கப்பட்டது.

    ஆனால் காங்கிரஸ் மேலிட தலைவர்கள் கார்த்தி சிதம்பரத்துக்கு அந்த தொகுதியை ஒதுக்க மறுத்து விட்டனர். இதையடுத்து அங்கு களம் இறங்க காங்கிரஸ் கோஷ்டி தலைவர்கள் மத்தியில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

    இன்று இரவுக்குள் சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் விவரம் தெரிய வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் செயல் தலைவர்கள் மற்றும் வாரிசுகளுக்கு இடம் வழங்கப்பட மாட்டாது என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் அதை வேட்பாளர் தேர்வின்போது காங்கிரஸ் மூத்த தலைவர்களால் உறுதியாக கடைபிடிக்க இயலவில்லை.

    செயல் தலைவர்களில் வசந்தகுமார், விஷ்ணுபிரசாத் இருவரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை போராடி பெற்றுள்ளனர். அதுபோல திருநாவுக்கரசர், டாக்டர் செல்லக்குமார் ஆகியோரும் தங்கள் தொகுதியை கடைசி வரை போராடியே இறுதி செய்ய முடிந்ததாக கூறப்படுகிறது.

    காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழக தேர்தல் களம் மேலும் சூடு பிடித்துள்ளது. காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பால் சில தொகுதிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி உள்ளன.

    கன்னியாகுமரியில் மத்திய மந்திரி பொன்.ராதா கிருஷ்ணனை எதிர்த்து எச்.வசந்தகுமார் போட்டியிடுவதால் அந்த தொகுதி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதுபோல தேனி தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இறங்கி இருப்பதும் விறுவிறுப்பை உருவாக்கி இருக்கிறது.

    தேனி தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் போட்டியிடுகிறார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. தங்க தமிழ்ச்செல்வன் நிறுத்தப்பட்டுள்ளார். இவர்கள் இருவருக்கும் தேனி தொகுதியில் கணிசமான அளவுக்கு செல்வாக்கு இருக்கிறது.

    இந்த நிலையில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை அந்த தொகுதியில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி இறக்கி விட்டுள்ளது. இது அந்த தொகுதியை பரபரப்பான தொகுதியாக மாற்றி இருக்கிறது. அ.தி.மு.க. வாக்குகளையும், ஜாதி வாக்குகளையும் ரவீந்திரநாத்தும், தங்க தமிழ்ச்செல்வனும் பிரிக்கும் நிலையில் இளங்கோவன் களம் இறங்கி இருப்பதால் வாக்குகள் எப்படி மாறும் என்பதில் அதிர்ச்சி கலந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வாக்குகள் பிரியாது என்பதாலும் இளங்கோவன் செல்வாக்கு மிக்க தலைவர் என்பதாலும் அவருக்கு எதிராக நிற்கும் ஓ.பி.எஸ். மகன் மற்றும் தங்க தமிழ்ச்செல்வன் கடும் சவாலை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதேநிலைதான் திருநாவுக்கரசர் போட்டியிடும் திருச்சி தொகுதியிலும், டாக்டர் செல்லக்குமார் போட்டியிடும் கிருஷ்ணகிரி தொகுதியிலும், ஜோதிமணி போட்டியிடும் கரூர் தொகுதியிலும் ஏற்பட்டுள்ளது.

    காங்கிரஸ் வேட்பாளர்கள் செவ்வாய்க்கிழமை மனுதாக்கல் செய்வார்கள் என்று தெரிய வந்துள்ளது. #LSPolls #congress #congressCandidates
    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் வெளியாகி உள்ளது. #LSPolls #Congress
    சென்னை:

    தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரசுக்கு தமிழ்நாட்டில் 9 தொகுதிகளும், புதுச்சேரியில் ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியில் போட்டியிட விரும்புவர்களிடம் இருந்து விருப்ப மனுக்களும் பெறப்பட்டுள்ளன.

    கடந்தமுறை போட்டியிட்டு தோல்வி அடைந்தவர்கள் முன்னாள் எம்.பி.க்கள், முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர்.

    காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    1. திருவள்ளூர் (தனி)- காங்கிரஸ் மாநில எஸ்.சி. பிரிவு தலைவர் செல்வப் பெருந்தகை அல்லது விக்டரி ஜெயக்குமார், முன்னாள் எம்.பி. விஸ்வநாதன்.

    2. கிருஷ்ணகிரி- டாக்டர் செல்லகுமார் அல்லது ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.

    3. ஆரணி- முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி அல்லது அவரது மகன் விஷ்ணு பிரசாத்.

    4. கரூர்- ஜோதிமணி

    5. திருச்சி- திருநாவுக்கரசர்

    6. சிவகங்கை- கார்த்தி சிதம்பரம்

    7. தேனி- ஜே.எம்.ஆரூண்

    8. விருதுநகர்- மாணிக்கம் தாகூர்

    9.கன்னியாகுமரி- எச்.வசந்தகுமார், ரூபி மனோகரன், ராபர்ட் ப்ரூஸ்.

    10. புதுச்சேரி- ஏ.வி.சுப்பிரமணியம் #LSPolls #Congress
    ×