search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலெக்டர் தொடங்கி வைத்தார்"

    • நடமாடும் உணவு ஆய்வக வாகனத்தின் பயன் பாட்டினை கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • இந்த நடமாடும் ஆய்வு வாகனம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு இடங்களுக்கு சென்று வர உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உணவு பாதுகாப்புத் துறையின் மூலம் மாவட்டம் முழுவதும் உணவு பொருட்களின் தரத்தினை ஆய்வு செய்யும் நடமாடும் உணவு ஆய்வக வாகனத்தின் பயன் பாட்டினை பொதுமக்கள் சேவைக்கு கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா பொது மக்கள் சேவைக்கு கொடிய சைத்து தொடங்கி வைத்தார்.

    பின்னர் கலெக்டர் கூறியதாவது:

    ஈரோடு மாவட்டத்தில் உணவு பொருட்களின் தர த்தை உடனுக்குடன் ஆய்வு செய்ய உணவு பாதுகாப்பு த்துறையில் நடமாடும் வாகனம் ஏற்பாடு செய்யப்ப ட்டுள்ளது. தமிழகத்தில் உணவு பொருட்களின் தரம் மற்றும் கலப்படம் குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதில் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி அதன் முடிவுகளின் அடிப்ப டையில் நடவடிக்கை எடுக்க இந்த வாகனம் பெரும் உதவியாக இருக்கும்.

    இந்த நடமாடும் ஆய்வு வாகனம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கு இந்த வாகனம் சென்று வர உள்ளது. 16-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை ஈரோடு மாநகராட்சி பகுதிகளிலும்,

    21-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை பவானி நகராட்சி பகுதிகளிலும், 23-ந் தேதி முதல் 24-ந் தேதி மொடக்குறிச்சி வட்டார பகுதிகளிலும், 25-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை சென்னிமலை வட்டார பகுதிகளிலும்,

    27-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை சத்தியமங்கலம் நகராட்சி மற்றும் வட்டார பகுதிகளிலும், 29-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை கோபிசெட்டிபாளையம் நகராட்சி பகுதிகளிலும் ஆய்வகம் மூலம் பரி சோதனை செய்து பயனடை யலாம். எனவே பொது மக்கள் உணவுப்பொருள்கள் தொடர்பான புகார்களை 9444042322 என்ற கைபேசி எண்ணில் புகார் தெரிவி த்தால் உடனடியாக நடவடி க்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்

    இந்நிகழ்வின்போது, நியமன அலுவலர் (உணவு பாதுகாப்பு தங்கவிக்னேஷ் உள்பட பலர் உள்ளனர்.

    • சென்னை மாவட்ட பள்ளிகளின் முன்னோடி திட்டமாகவும் செயல்பட்டு வருகிறது.
    • மாணவ, மாணவியருக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கி கொடுக்க வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளி பார்வை திட்ட தொடக்க விழா நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கி திட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:&

    ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் மூலம் அலுவலர் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள் பள்ளியின் வகுப்பறை உற்று நோக்கலை வலுப்படுத்தும் வகையில் பள்ளிபார்வை செயலி திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இது திருவண்ணாமலை, சென்னை மாவட்ட பள்ளிகளின் முன்னோடி திட்டமாகவும் செயல்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தை தற்போது கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களில் விரிவுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி இன்று கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் வகுப்பறையில் கல்வி தரத்தின் உண்மையான நிலையை அறிய முடியும். ஆசிரியர்களின் கற்றல், கற்பித்தல் செயல்பாடுகள் தரவுகளின் அடிப்படையில் அறியலாம். இந்த செயலி பள்ளியின் கற்றல் நிலை, ஆசிரியர்களின் திறனறிந்து நிர்வகிக்க கள அளவில் கண்காணிப்பு அலுவலர்களுக்கும் உதவியாக இருக்கும்.

    மாவட்ட கல்வி அலுவலர்கள், உதவி திட்ட அலுவலர்கள், பள்ளிக் கல்வித்துறை அலுவலர்கள், வட்டார அளவிலான அலுவலர்களுக்கு இந்த நிர்வாக பயிற்சி வழங்கப்படுகிறது. இச்செயலியை பயன்படுத்தி மாணவ, மாணவியருக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கி கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    • மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகளை மாவட்ட கலெக்டர் சாந்தி, தொடங்கி வைத்தார்.
    • தொடர்புடைய அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    தருமபுரி,

    தருமபுரி நகராட்சி க்குட்பட்ட தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அரசினர் தொழிற் பயிற்சி நிலைய ங்களுக்கு இடையிலான சேலம் மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகளை மாவட்ட கலெக்டர் சாந்தி, தொடங்கி வைத்தார்.

    பின்னர் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை, பதக்கம் மற்றும் சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.

    இந்த மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகளில் Ball Badminton, Volley Ball, Foot Ball, Tennikoit, Basket Ball, Throw Ball போன்ற விளையாட்டுகளும் 100மீ, 200மீ, 400மீ, 800மீ, 1500மீ, 4x100 Rellay, Long Jump, High Jump, Javelin Throw, Shot Put போன்ற தடகள போட்டிகளும் இடம் பெற்று வருகிறது.

    சேலம் மண்டலத்தில் உள்ள தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களை சார்ந்த 10 தொழிற் பயிற்சி நிலையங்களிலிருந்து 350 மாணவர்களும், 150-க்கும் மேற்பட்ட மாணவிகளும் பங்கேற்றுள்ளனர்.

    போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை, பதக்கம் மற்றும் சான்றிதழ் அன்றைய தினமே வழங்கப்படுகிறது. மண்டல விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் சென்னையில் நடைபெறவுள்ள மாநில விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ளனர்.

    போட்டி நடைபெறும் மூன்று நாட்களுக்கும் போட்டி யாளர்களுக்கு தங்கு மிடம், உணவு வசதி, கழிப்பறை வசதிகள் அனைத்தும் நல்ல முறையில் ஏற்பாடு செய்யப்ப ட்டுள்ளது. இது தவிர மருத்துவ வசதிகளும் காவல்துறை மூலம் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

    இந்நிகழ்ச்சியில் தருமபுரி நகரமன்ற தலை வர் மா.லட்சுமி, சேலம் மண்டல பயிற்சி இணை இயக்குநர் (பொ) ராஜகோபாலன், தருமபுரி அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் முதல்வர் (பொ) டி.கே.சிவகுமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி, மாணவ, மாணவியர்கள் உட்பட தொடர்புடைய அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    ×