search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கரும்பு தோட்டம்"

    • மின் கம்பி உரசியதில் விபத்து
    • போலீசார் விசாரணை

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் தாலுகா செளளூர் பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 54). இவருக்கு சொந்தமான நிலத்தில் சுமார் 16 ஏக்கர் அளவில் கரும்பு சாகுபடி செய்திருந்தார்.

    இந்த நிலையில் கரும்பு வெட்டப்பட இருந்த நிலையில் நேற்று கரும்பு தோட்டத்தின் மீது சென்ற மின் கம்பி உரசியதில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு 16 ஏக்கர் அளவிலான கரும்பு தோட்டம் முழுவதும் மள மளவென தீ பரவி எரிந்தது. கரும்பு தோட்டத்தில் பரவிய தீயை அணைக்க அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் குடத்தில் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து திருப்பத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.தீயணைப்புத் துறையினர் தீ அணைக்க முயற்சி செய்தனர். அதற்குள் கரும்புத் தோட்டம் எரிந்தது.

    இது குறித்து தீயணைப்புத்துறையினர் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். கரும்பு தோட்டம் எரிந்து நாசமானதால் கரும்பு விவசாயி குடும்பத்தினர் மிகுந்த வேதனைக்கு உள்ளாகினர்.

    • தீ பற்றி எரிந்து சுமார் 2 ஏக்கர் பரப்பிலான கரும்பு தோட்டம் எரிந்து நாசமானது.
    • பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கடத்தூர்,

    கடத்தூர் அருகே உள்ள வெங்கடதாரள்ளி புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சம்பத். இவருக்கு சொந்தமாக எட்டு ஏக்கர் விவசாயம் நிலம் உள்ளது.

    இதில் இரண்டு ஏக்கர் பரப்பில் கரும்பு சாகுபடி செய்துள்ளார். வெட்டுவதற்கு கரும்புகள் தயாராக இருந்த நிலையில் ஆலையில் இருந்து அனுமதி வராத நிலையில் வெட்டுவதற்காக காத்திருந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு அங்குள்ள டிரான்ஸ்பார்மரில் இருந்து தீப்பொறி விழுந்ததில் கரும்பு தோட்டத்தில் தீ பற்றி எரிந்து சுமார் 2 ஏக்கர் பரப்பிலான கரும்பு தோட்டம் எரிந்து நாசமானது. இது குறித்து அப்பகுதியில் இருந்தவர்கள் பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் பிரகாஷ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக விரைந்து வந்து கொழுந்து விட்டு எரிந்த தீயை அணைத்தனர்.

    தொடர்ந்து கடத்தூர் பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வறட்சி துவங்கியுள்ளதால் கரும்பு பயிர்களில் தீப்பற்றி எரிந்து வருவது அதிகரித்துள்ளது.

    எனவே இவற்றை தடுக்க மின்சாரத் துறையினர் உரிய பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • இந்நிலையில் கடந்த ஒருவார காலமாக, தோட்டத்து பகுதியில் தங்கி கரும்பு வெட்டும் பணியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
    • இது தொடர்பாக தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் தெற்கு வட்டத்துக்கு உட்பட்ட கண்டியன்கோவில் பகுதியில் கரும்பு வெட்டும் பணிக்காக, விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை சேர்ந்த 8 பேர் வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஒருவார காலமாக, தோட்டத்து பகுதியில் தங்கி கரும்பு வெட்டும் பணியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகள், சம்பளம், மருத்துவ வசதிகள் மற்றும் அவசரத் தேவைக்கு ஊருக்கு செல்ல முடியாத நிலையில் இருப்பதாக, தெற்கு தாசில்தாருக்கு புகார்கள் வந்தன.

    இதையடுத்து, கண்டியன்கோவில் பகுதியில் உள்ள கரும்புதோட்டத்தில் தொழிலாளர்களை மீட்டனர். இது தொடர்பாக கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் உள்ளிட்ட பலர் விசாரித்து வருகின்றனர். 8 பேரில் ஒருவர் தரகராகவும், மற்ற 7 பேர் தொழிலாளர்களாகவும் பணி செய்துள்ளனர். இது தொடர்பாக தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

    • கள்ளக்குறிச்சி அருகே மயானத்தில் ஆக்கிரமித்த கரும்பு தோட்டம் அகற்றப்பட்டது.
    • நில அளவையர் விஜயசாந்தி, மணிமாறன் ஆகியோர் தலைமையிலான வருவாய்த்துறையினர் அளவீடு செய்யும் பணி நிறைவடைந்தது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருேக விருகாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா (வயது 45) இவர் இதே பகுதியில் உள்ள மயானத்தை தனிநபர் ஆக்கிரமித்துள்ளதாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இதில் உயர்நீதிமன்றம் மயான ஆக்கிரமிப்புகளை அகற்ற ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு நில அளவையர் விஜயசாந்தி, மணிமாறன் ஆகியோர் தலைமையிலான வருவாய்த்துறையினர் மூலம் மயான எல்லை அளவீடு செய்யும் பணி நிறைவடைந்தது.


    இந்நிலையில் நேற்று தியாகதுருகம் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) பன்னீர்செல்வம் தலைமையில் மயானத்தை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கரும்பு பயிர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டது. அப்போது வருவாய் ஆய்வாளர் பாலு, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வராஜ், கிராம நிர்வாக அலுவலர் மஞ்சுளாதேவி, ஊராட்சி மன்ற தலைவர் சந்திரலேகா அருள், ஊராட்சி செயலாளர் முத்துவேல் ஆகியோர் உடனிருந்தனர். அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க வரஞ்சரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

    ×