search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் கண்டியன்கோவில் கரும்பு தோட்டத்தில் 8 கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்பு
    X

    கோப்புபடம். 

    திருப்பூர் கண்டியன்கோவில் கரும்பு தோட்டத்தில் 8 கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்பு

    • இந்நிலையில் கடந்த ஒருவார காலமாக, தோட்டத்து பகுதியில் தங்கி கரும்பு வெட்டும் பணியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
    • இது தொடர்பாக தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் தெற்கு வட்டத்துக்கு உட்பட்ட கண்டியன்கோவில் பகுதியில் கரும்பு வெட்டும் பணிக்காக, விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை சேர்ந்த 8 பேர் வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஒருவார காலமாக, தோட்டத்து பகுதியில் தங்கி கரும்பு வெட்டும் பணியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகள், சம்பளம், மருத்துவ வசதிகள் மற்றும் அவசரத் தேவைக்கு ஊருக்கு செல்ல முடியாத நிலையில் இருப்பதாக, தெற்கு தாசில்தாருக்கு புகார்கள் வந்தன.

    இதையடுத்து, கண்டியன்கோவில் பகுதியில் உள்ள கரும்புதோட்டத்தில் தொழிலாளர்களை மீட்டனர். இது தொடர்பாக கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் உள்ளிட்ட பலர் விசாரித்து வருகின்றனர். 8 பேரில் ஒருவர் தரகராகவும், மற்ற 7 பேர் தொழிலாளர்களாகவும் பணி செய்துள்ளனர். இது தொடர்பாக தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×