search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில்"

    • திடீரென்று தண்டவாளத்தின் நடுவில் தடுப்பு போன்ற 2 பொருட்கள் வைக்கப்பட்டிருந்தது.
    • விபத்து காரணமாக என்ஜினுடன் சேர்ந்த 4 பெட்டிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதோடு, ரெயிலும் நிறுத்தப்பட்டது.

    திருச்சி:

    தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு தினமும் 10-க்கும் மேற்பட்ட ரெயில்கள் இயக்கப்படுகிறது. இதில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் சென்னை உள்ளிட்ட பிற நகரங்களுக்கு சென்று வருகிறார்கள். அதேபோல் இந்த ரெயில்களில் சரக்கு போக்குவரத்தும் அதிக அளவில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் கன்னியாகுமரியில் இருந்து சென்னை எழும்பூருக்கு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரெயில் திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த புதுக்குடி கிராமம் அருகிலுள்ள மேலவாளாடி பகுதிக்கு நள்ளிரவு சுமார் 1.05 மணிக்கு வந்தது.

    அப்போது திடீரென்று தண்டவாளத்தின் நடுவில் தடுப்பு போன்ற 2 பொருட்கள் வைக்கப்பட்டிருந்தது. இதனை கவனித்த என்ஜின் டிரைவர் ரெயிலை நிறுத்த முயன்றார்.

    ரெயில் அருகில் வந்தபோது தண்டவாளத்தில் நிற்க வைத்த நிலையில் ஒரு டயரும், படுக்க வைத்த நிலையில் மற்றொரு டயரும் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். ஆனால் அதிக வேகத்தில் ரெயில் வந்ததால் அந்த டயர்கள் மீது மோதியது. பயங்கர சத்தம் கேட்டதுடன் ரெயிலின் வேகமும் குறைந்தது.

    இந்த விபத்து காரணமாக என்ஜினுடன் சேர்ந்த 4 பெட்டிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதோடு, ரெயிலும் நிறுத்தப்பட்டது.

    இதையடுத்து என்ஜின் டிரைவர் உள்ளிட்டோர் இறங்கி வந்து பார்த்தபோது ரெயில் என்ஜினுக்குள் சிக்கிய நிலையில் 2 லாரி டயர்கள் கிடந்தன. அத்துடன் அவை என்ஜின் பகுதிக்கு மின்சாரம் கொண்டு செல்லும் வயர்களையும் கடுமையாக சேதப்படுத்தி இருந்தது.

    இதனால்தான் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட் டது. யாரோ மர்ம நபர்கள் சதிச்செயலில் ஈடுபடும் வகையில் தண்டவாளத்தில் லாரி டயரை வைத்துவிட்டு சென்றுள்ளதும் தெரியவந்தது.

    இதுபற்றி ரெயில்வே அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே நள்ளிரவில் நடுவழியில் ரெயில் நிறுத்தப்பட்டதால் அச்சமடைந்த பயணிகள் கீழே இறங்கி வந்து பார்த்தனர். அதற்குள் தொழில்நுட்ப குழுவினர் ரெயில் நின்ற பகுதிக்கு விரைந்து வந்தனர்.

    அவர்கள் சுமார் அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு ரெயில் பெட்டிகளில் துண்டிக்கப்பட்ட மின் இணைப்பை சீரமைத்தனர். இதையடுத்து அரை மணி நேரம் தாமதமாக கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

    மேலும் விபத்து நடந்த பகுதிக்கு ரெயில்வே துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபாபரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த டயர்களை கைப்பற்றிய அவர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தண்டவாளத்தில் டயர் வைக்கப்பட்ட பகுதியில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்படுவதற்கான பணிகளில் ரெயில்வே நிர்வாகம் ஈடுபட்டிருந்தது.

    விவசாய நிலங்கள் அதிகம் கொண்ட அந்த பகுதியில் சுரங்கப்பாதை அமைத்தால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் அபாயம் ஏற்படும் என்றும், விவசாய விளை பொருட்களை கொண்டு செல்லும் சுரங்கப்பாதையில் மழை காலங்களில் தண்ணீர் தேங்கி பாதிக்கும் நிலை ஏற்படும் என்று கூறி அதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

    இந்நிலையில்தான் ரெயில் தண்டவாளத்தில் லாரி டயர்களை வைத்து சதிச்செயல் அரங்கேறியுள்ளது.

    இதில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார், கிராமத்தை சேர்ந்தவர்களா அல்லது வெளி நபர்களா என்பது உள்ளிட்ட கோணங்களில் ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • மற்ற ரெயில்களிலும் கொண்டு வர திட்டம்
    • டிக்கெட் பரிசோதகர்களின் பணி இனி மிகவும் எளிமையானதாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் இருக்கும்.

    நாகர்கோவில்:

    ரெயில்வே துறையில் தற்போது டிஜிட்டல் முறையில் பயணிகள் அட்டவணை சரிபார்க்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.

    அதாவது டிக்கெட் பரிசோதகர்கள் இனி டேப்லெட் மூலமாக டிஜிட்டல் முறையில் பயணிகளின் அட்ட வணையை சரிபார்ப்பார்கள்.

    இதன் மூலம் டிக்கெட் பரிசோதகர்களின் பணி இனி மிகவும் எளிமையா னதாகவும், வெளிப்படை தன்மையுடனும் இருக்கும்.

    திருவனந்தபுரம் கோட்டத்தில் முதற்கட்ட மாக 140 டிஜிட்டல் டேப்லெட்டுகள் ரெயில்வேத்துறையால் கொடுக்கப்பட்டு உள்ளது. இதில் நாகர்கோவில் பணிமனைக்கு 20 டிஜிட்டல் டேப்லெட்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன.

    தற்போது கன்னியா குமரி, அனந்தபுரி, குருவாயூர், தாம்பரம் ஆகிய ரெயில்களில் இந்த திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதில் குறிப்பாக கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் இந்த திட்டம் அமலுக்கு வந்து இருக்கிறது.

    குமரி மாவட்டத்தில் இருந்து இயங்க கூடிய முக்கியமான ரெயில் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் என்பதால் முதலில் அந்த ரெயிலில் டிஜிட்டல் முறை அமல்படுத்தப்பட்டதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அதோடு வெகு விரைவில் அனைத்து ரெயில்களிலும் டிஜிட்டல் முறையில் பயணிகள் அட்டவணை சரிபார்க்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக வும் கூறப்படுகிறது.

    இந்த திட்டத்தின் மூலம் இனி ரெயில்களில் சார்ட் பிரிண்ட் எடுக்க பயன்படுத்தும் காகிதத்தின் பயன்பாடு வெகுவாக குறையும். அதோடு ரெயிலில் இருக்கைகள் காலி விவரங்கள் இணைய தளத்தில் அவ்வப்போது அப்டேட் செய்யப்படும். இதனால் பயணிகள் ரெயிலில் முன்பதிவு இருக்கைகள் விவரத்தை பார்த்து முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    ஒரு சில பயண சீட்டு பரிசோத கர்கள் கையூட்டு பெற்றுக்கொண்டு காத்திருப்போர் பட்டியல் இருக்கும் வேறு பயணிகளுக்கு பயண சீட்டு ஒதுக்கீடு செய்வது முற்றிலும் தவிற்கப்படும். வேறு பயணிகளுக்கு இருக்கைகள் ஒதுக்கீடு செய்யும் அனைத்தும் ஒழிவு மறைவின்றி வெளிப்படையாக அனை வருக்கும் தெரியும் விதத்தில் இருக்கும்.

    இதற்கு முன்பு டிக்கெட் பரிசோதகர்கள், ஒரு பயணி வரவில்லை என்றால் காலியாக உள்ள அந்த இருக்கையை மற்றொரு பயணிக்கு ஒதுக்குவதற்கு முன், அடுத்த முக்கிய நிலையங்க ளை ரெயில் கடக்கும் வரை காத்திருந்து பின்னர் பயணி வரவில்லை என்று ஒன்றுக்கு இரண்டு முறை உறுதி செய்துவிட்டு ஆர்.ஏ.சி. அல்லது காத்திருப்போர் பட்டியிலில் உள்ள பயணிக்கு அந்த இருக்கை ஒதுக்கீடு செய்து வந்தார். இனி இது போன்று டிக்கெட் பரிசோதகர்க ளால் செய்ய முடியாது.

    அதாவது கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் நாகர்கோவில் இருந்து முன்பதிவு செய்துள்ள ஒரு பயணி எதிர்பாராத விதமாக ரெயிலை தவற விடும் போது அவசரமாக சாலை மார்க்கமாக காரில் வள்ளியூர் ரெயில் நிலையம் சென்று ரெயிலில் ஏறலாம் என்று நினைத்தால் அது இனி முடியாது.

    ஏனென்றால் நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் ரெயில் புறப்பட்டதும் டிக்கெட் பரிசோதகர் வந்து சுமார் 5 நிமிடத்திற்குள் பயணிகள் விவரங்களை சரிபார்த்து டிஜிட்டல் டேப்லெட்களில் பதிவு செய்து விடுவார்.

    ஏதாவது பயணி வராமல் இருந்தால் அந்த விவரத்தை உடனே குறித்துவிட்டு ஆர்.ஏ.சி. அல்லது காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணிக்கு அந்த இருக்கையை ஒதுக்கீடு செய்து விடுவார். எனவே இதுபோன்ற பிரச்சினைகளை தவிர்க்க போர்டிங் பாயின்ட் முன்கூட்டியே தீர்மானித்து மாற்றி கொண்டு பயணிப்பது சிறப்பாக அமையும் என்று குமரி மாவட்ட ரெயில் பயணிகள் சங்க தலைவர் ஸ்ரீராம் கூறியுள்ளார்.

    • அக்டோபர் 10-ந்தேதி முதல் ரெயிலின் வேகம் அதிகரிப்பு
    • இருவழிபாதையை விரைந்து முடித்தால் 8 மணி நேரத்தில் சென்னை செல்லலாம்

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் மாவட்டத்தில் இருந்து இயக்கப்படும் ரெயில்களில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ரெயிலாகும். இந்த ரெயிலில் நாகர்கோவிலில் இருந்து தினசரி சராசரியாக ஆயிரம் பேர் பயணம் செய்கின்றனர். நாகர்கோவில் ரெயில் நிலையத்துக்கு வரும் வருவாயில் 50 சதவீதம் இந்த ரெயில் மூலம் கிடைத்து வருகிறது.

    திருவிதாங்கூர் சமஸ் தானத்தில் இருந்து தமிழ் மொழி மக்கள் உள்ள பகுதிகளை பிரித்து புதிய கன்னியாகுமரி மாவட்டம் உதயமாகி 1956-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி தாய் தமிழகத்துடன் இணைந்தது. தாய் தமிழகத்துடன் இணைந்தாலும் தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு நேரடி ரெயில் வசதி இல்லாமல் திருநெல்வேலிக்கு பஸ்களில் சென்று அங்கிருந்து சென்னை செல்லும் ெரயிலில் பயணம் செய்ய வேண்டும் என்ற நிலை இருந்தது.

    பின்னர் நீண்ட காலத்திற்கு பிறகு கன்னியாகுமரியில் இருந்து தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு 1994-ம் ஆண்டு நேரடியாக ரெயில் மூலம் இணைக்கப்பட்ட அந்த ரெயில் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் இயக்கப்பட்டது. இந்த ரெயில் ஆரம்ப காலகட்டங்களில் சென்னை எழும்பூர் மார்க்கம் மீட்டர் கேஜ் இருந்த காரணத்தால் ஈரோடு வழியாக சென்னை சென்ட்ரலுக்கு இயக்கப்பட்டது. பின்னர் சென்னை எழும்பூர் மார்க்கம் அகலபாதை யாக மாற்றம் செய்யப்பட்ட பிறகு சென்னை எழும்பூருக்கு மாற்றம் செய்யப்பட்டது.

    குமரியிலிருந்து சென்னைக்கு இயக்கப்படும் இந்த ரெயில் அதிகாலை செல்லும்படியாக இயக்கப் படுவதால் குமரி மாவட்ட மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆகும். தற்போது இந்த ரெயில் மாலை 5.05 மணிக்கு கன்னியாகுமரியிலிருந்து புறப்பட்டு திருநெல்வேலிக்கு சீக்கிரம் சென்றுவிட்டு திருநெல்வேலியில் சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் நிறுத்தி வைத்து விட்டு பின்னர் சென்னை புறப்பட்டு மறுநாள் காலை 6:10 மணிக்கு சென்னை எழும்பூர் செல்கிறது.

    அடுத்த மாதம் (அக்டோபர்) 10-ந் தேதி முதல் இந்த ரெயில் வேகம் அதிகரிக்கப்பட்டு திருநெல்வேலியில் அதிக நேரம் நிறுத்தி வைக்கப்படுவது தவிர்க்கப்பட்டு அந்த நேரத்துக்கு பதிலாக கன்னியாகுமரியிலிருந்து தாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி புதிய கால அட்டவணையில் இயங்கும்

    கன்னியாகுமரி - 5.45, நாகர்கோவில் - 6.07 (17:25)வள்ளியூர் -6.35 திருநெல்வேலி - 7.20 இந்த கால அட்ட வணையில் இயக்கப்பட இருக்கின்றது.

    இது குறித்து குமரி மாவட்ட ரெயில் பயணிகள் சங்கத்தின் தலைவர் ஸ்ரீராம் கூறியதாவது:-

    தற்போது மதுரை முதல் சென்னை வரை உள்ள ரெயில்பாதையில் இருவழிபாதை பணிகள் 100 சதவீதமும் மதுரை முதல் நாகர்கோவில் வரை உள்ள இருவழிபாதை பணிகள் 90 சதவீதமும் முடிந்துவிட்டது இன்னமும் ரெயில்களின் வேகத்தை அதிகரித்து பயண நேரத்தை வெகுவாக குறைக்க முடியும்.

    இது மட்டுமல்லாமல் கன்னியாகுமரியில் இருந்து மதுரை வரை உள்ள இருவழிபாதை பணிகள் முடிவு பெற்று விட்டால் சென்னைக்கு சுமார் 8 மணி நேரத்தில் போய் சேர முடியும். இவ்வாறு இருவழிபாதை பணிகள் முடிவு பெறும் பட்சத்தில் இந்த கன்னியாகுமரி ரெயிலை 7.30 மணிக்கு கன்னியாகுமரியிலிருந்து புறப்படுமாறு இயக்க வேண்டும். இவ்வாறு இயக்கும் போது சூரிய அஸ்தமனத்தை பார்த்துவிட்டு சுற்றுலா பயணிகள் இந்த ரெயிலில் பயணம் செய்ய ஏதுவாக இருக்கும்.

    கன்னியாகுமரி - சென்னை ரெயிலின் கால அட்டவணை மாற்றம் காரணத்தால் நாகர்கோவில் - தாம்பரம் ரயில் முன்பு இயங்கிய கால அட்டவணையின் படி நாகர்கோவிலிருந்து 5.05 மணிக்கு இயக்க வேண்டும். இது மட்டுமல்லாமல் இந்த ரயிலின் கால அட்ட வணையை மாற்றும் போது நாகர்கோவில் - தாம்பரம் அந்தோதையா ரயில் நாகர்கோவிலிருந்து புறப்படும் கால அட்டவணை மாற்றம் செய்து 4.15 க்கு (தற்போது நாகர்கோவில் - தாம்பரம் ெரயில் செல்லும் நேரம்) நாகர்கோவிலிருந்து புறப்படுமாறு இயக்க வேண்டும்.

    ×