search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கண்துடைப்பு"

    • இமானுவேல் சேகரன் மணிமண்டபம் அறிவிப்பு அரசின் கண்துடைப்பு எவ டாக்டர் கிருஷ்ணசாமி பேசி உள்ளார்.
    • வெற்று அறிவிப்பை மட்டும் வெளியிட்டு பெயர் வாங்க தமிழக அரசு முயற்சி செய்கிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரன் 66- வது நினைவு நாள் அனுசரிப்பு நேற்று நடைபெற்றது. புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அஞ்சலி செலுத்த வருகை தந்தார்.

    அப்போது அவர் மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-

    தமிழக அரசு தியாகி இமானுவேல் சேகரனார் மணிமண்டபம் அமைப்ப தாக அறிவிப்பு வெளியிட்டு ளது வெறும் கண்துடைப்பே.இதுபோன்று அரசு சார்பில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு இன்னும் அமல்படுத்த முடியாத நிலையே தொடர்கிறது.புதிய தமிழகம் கட்சி சார்பில் பலமுறை கோரிக்கை விடுத்தும் தற்போது வெற்று அறி விப்பை மட்டும் வெளியிட்டு பெயர் வாங்க தமிழக அரசு முயற்சி செய்கிறது.

    இன்று இந்த நினைவிடத்தில் எங்களுக்கு பேச அனுமதி மறுக்கப்படு கிறது. சமாதி எங்கிருக்கிறது என்றே தெரியாத கால கட்டத்தில் பாதிரியாரிடம் கேட்டு அடையாளம் கண்டு லட்சோப லட்சம் மக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு வழிவகை செய்தது நாங்கள் தான். ஐந்து முனை ரோட்டில் இருந்து நினைவி டம் வந்தடையும் இடம் வரையில் தெரு விளக்குகள் இல்லாதது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.வன் முறையை தூண்டும் வகையில் பரமக்குடி நக ராட்சி நிர்வாகம் செயல்படு கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்

    இதில் மாநில பொதுச் செயலாளர் வி.கே.அய்யர், மாவட்ட செயலாளர் சிவ.பாலுச்சாமி, மாவட்ட செய்தி தொடர்பாளர் ஆர்.கே. முனியசாமி,மாவட்ட துணைச் செயலாளர்கள் முத்துக்கூரி, பேரின்ப ராஜ், மகேஸ் உள்பட மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

    • கீழக்கரை நகராட்சியில் கிராம சபை கூட்டம் கண்துடைப்பாக நடந்தது.
    • விடுதலை சிறுத்தைகள் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

    கீழக்கரை

    உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு கீழக்கரை நகராட்சியில் 21 வார்டுகளில் நகர் மன்ற தலைவர் தலைமையில் துணைத்தலைவர் ஹமீது சுல்தான், ஆணையாளர் செல்வராஜ் முன்னிலையில் கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் ஒவ்வொரு வார்டுக்கும் குறைவான நேரம் ஒதுக்கப்பட்டதால் பொதுமக்கள் குறைகளை தெரிவிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். 3,17,18 ஆகிய வார்டுகளில் சாமியானா பந்தல் அமைக்கப்பட்டு பொதுமக்களின் குறைகள், கோரிக்கைகள் கேட்கப்பட்டது.

    பொதுமக்கள் அளித்த மனுக்களை 3-வது வார்டு கவுன்சிலரும், நகர்மன்ற துணைத் தலைவருமான ஹமீது சுல்தான் பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இருப்பினும் நகராட்சி தரப்பில் கூட்டம் குறித்த முறையான அறிவிப்பு இல்லாததால் பெரும்பாலான வார்டுகளில் மக்கள் குறைந்த எண்ணிக்கையில் பங்கேற்றனர்.

    இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர் தலைவர் பாசித் இலியாஸ் கூறுகையில், இந்த கிராம சபை கூட்டத்தில் சில வார்டுகளில் மட்டுமே மக்களின் குறைகள் கேட்கப்பட்டது. பெரும்பாலான வார்டுகளில் கூட்டம் கண்துடைப்பாக நடத்தப்பட்டு உடனடியாக முடிக்கப்பட்டது, இது மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. முதலமைச்சர் அறிவித்த இந்த கூட்டத்தை கீழக்கரையில் முறையாக நடத்தப்படவில்லை. பல கவுன்சிலர்கள் முறையாக பதிலளிக்கவில்லை. நகராட்சி ஆணையளர், துறை அதிகாரிகள் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. இது பொதுமக்களுக்கு வருத்தத்தை அளித்துள்ளது என்றார்.

    ×