search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கீழக்கரை நகராட்சியில் கண்துடைப்பாக நடந்த கிராம சபை கூட்டம்
    X

    கீழக்கரை நகராட்சியில் கண்துடைப்பாக நடந்த கிராம சபை கூட்டம்

    • கீழக்கரை நகராட்சியில் கிராம சபை கூட்டம் கண்துடைப்பாக நடந்தது.
    • விடுதலை சிறுத்தைகள் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

    கீழக்கரை

    உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு கீழக்கரை நகராட்சியில் 21 வார்டுகளில் நகர் மன்ற தலைவர் தலைமையில் துணைத்தலைவர் ஹமீது சுல்தான், ஆணையாளர் செல்வராஜ் முன்னிலையில் கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் ஒவ்வொரு வார்டுக்கும் குறைவான நேரம் ஒதுக்கப்பட்டதால் பொதுமக்கள் குறைகளை தெரிவிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். 3,17,18 ஆகிய வார்டுகளில் சாமியானா பந்தல் அமைக்கப்பட்டு பொதுமக்களின் குறைகள், கோரிக்கைகள் கேட்கப்பட்டது.

    பொதுமக்கள் அளித்த மனுக்களை 3-வது வார்டு கவுன்சிலரும், நகர்மன்ற துணைத் தலைவருமான ஹமீது சுல்தான் பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இருப்பினும் நகராட்சி தரப்பில் கூட்டம் குறித்த முறையான அறிவிப்பு இல்லாததால் பெரும்பாலான வார்டுகளில் மக்கள் குறைந்த எண்ணிக்கையில் பங்கேற்றனர்.

    இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர் தலைவர் பாசித் இலியாஸ் கூறுகையில், இந்த கிராம சபை கூட்டத்தில் சில வார்டுகளில் மட்டுமே மக்களின் குறைகள் கேட்கப்பட்டது. பெரும்பாலான வார்டுகளில் கூட்டம் கண்துடைப்பாக நடத்தப்பட்டு உடனடியாக முடிக்கப்பட்டது, இது மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. முதலமைச்சர் அறிவித்த இந்த கூட்டத்தை கீழக்கரையில் முறையாக நடத்தப்படவில்லை. பல கவுன்சிலர்கள் முறையாக பதிலளிக்கவில்லை. நகராட்சி ஆணையளர், துறை அதிகாரிகள் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. இது பொதுமக்களுக்கு வருத்தத்தை அளித்துள்ளது என்றார்.

    Next Story
    ×