search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கட்டிட மேஸ்திரி பலி"

    • எதிரே பென்னாகரத்தில் இருந்து தருமபுரி நோக்கி வந்த டாட்டா ஏசி வாகனம் மோதியது.
    • தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே சின்னசாமி பலியானார்.

    பென்னாகரம்,

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள திப்பட்டிபள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னசாமி (வயது53). இவர் கோயம்புத்தூரில் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று சொந்த ஊரான திப்பட்டிபள்ளம் வந்தார். நேற்று மாலை உறவினரின் துக்கி நிகழ்ச்சிக்காக சின்னசாமி திப்பட்டிபள்ளம் கிராமத்தில் இருந்து பென்னாகரம் நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்குள்ள தனியார் கல்லூரி அருகே வந்த போது எதிரே பென்னாகரத்தில் இருந்து தருமபுரி நோக்கி வந்த டாட்டா ஏசி வாகனம் மோதியது. இதில் தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே சின்னசாமி பலியானார். இந்த விபத்தை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து பாப்பாரப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வரகூர் என்ற இடத்தருகே சென்றபோது அவ்வழியாக வந்த லாரி ஒன்று அவர்கள் மீது மோதியது.
    • இந்த விபத்து குறித்து மதிகோன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் அள்ளியூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 45). கட்டிட மேஸ்திரி. இவர்தன்னுடன் வேலை பார்க்கும் ராமகிருஷ்ணன் என்பவருடன் நேற்று இரவு வேலை முடிந்து மோட்டார்சைக்கிளில் ஊர் திரும்பினார்.

    வரகூர் என்ற இடத்தருகே சென்றபோது அவ்வழியாக வந்த லாரி ஒன்று அவர்கள் மீது மோதியது. இதில் சுப்பிரமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    ராமகிருஷ்னன் படுகாயம் அடைந்தார்.அவரை தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

    இந்த விபத்து குறித்து மதிகோன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • ஒரு வளைவில் திடீரென வந்த பள்ளி வாகனம் ஒன்று லட்சுமணன் மீது மோதியது.
    • லட்சுமணன் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே யுள்ள தேவர்முக்குளம் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் லட்சுமணன் (வயது 26).கட்டிட மேஸ்திரி .

    இவர் தனது மோட்டார்சைக்கிளில் வேலைக்கு புறப்பட்டு சென்றார். சிகரஅள்ளி என்ற இடைத்தருகே சென்றபோது ஒரு வளைவில் திடீரென வந்த பள்ளி வாகனம் ஒன்று லட்சுமணன் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த லட்சுமணனை தருமபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை கொண்டு செல்லப்பட்ட லட்சுமணன் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து காரிமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    மத்தூர் அருகே சாலையோர பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்த விபத்தில் கட்டிட மேஸ்திரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    ஊத்தங்கரை:

    வேலூர் மாவட்டம், கும்பிடிகாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் சக்திவேல் (வயது20). இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வந்தார்.

    சக்திவேல் தனது உறவினர் வீடான கிருஷ்ணகிரி மாவட்டம், புட்டூர் கிராமத்திற்கு நேற்றிரவு வேலூரில் இருந்து புறப்பட்டு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது கிருஷ்ணகிரி மாவட்டம், ஆம்பள்ளி தனியார்  ஜுஸ் கம்பெனி அருகே செல்லும் போது சாலையோர பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக கவிழ்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே சக்திவேல் பரிதாபமாக உயிரிழந்தார். 

     இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் பலியான சக்திவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
    இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×