search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓய்வூதியர் சங்கம்"

    • ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • வட்டக் கிளை தலைவர் மணி தாங்கினார்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டக் கிளை தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பாக வாடிப்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. சத்துணவு, அங்கன்வாடி, ஊராட்சி எழுத்தர், ஊர் புற நூலகர்கள், கிராம உதவியாளர்கள், வனத்துறை ஊழியர்களுக்கு ஓய்வூதியம் குறைந்தபட்சம் ரூ.7850 வழங்கக்கோரி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டக் கிளை தலைவர் மணி தாங்கினார்.

    துணைத் தலைவர்கள் ராமகிருஷ்ணன், காமாட்சி, இணைச்செயலாளர்கள் ஆறுமுகம், சுந்தர லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வட்டச் செயலாளர் வேல் மயில், மாவட்ட பொருளாளர் ஜெயராமன், மாவட்ட இணைச்செயலாளர் பானு ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை விளக்கி பேசினார். முடிவில் வட்ட கிளை பொருளாளர் பாண்டியம்மாள் நன்றி கூறினார்.

    • அகவிலைப்படியை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என ஓய்வூதியர் சங்க கூட்டத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
    • குடும்ப பாதுகாப்பு நிதி ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கடலூர்:

    தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில் மாவட்ட பேரவை நிர்வாகிகள் கூட்டம் கடலூரில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் ரங்கநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் மரியதாஸ் வரவேற்றார்.மாவட்ட செயலாளர் இளங்கோவன் அறிக்கை வாசித்தார். இதில் மாநில செயலாளர் மகாலிங்கம், புதுச்சேரி அரசு ஊழியர் சம்மேளன இணைப்பு சங்கங்களின் கூட்டு இயக்க ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராசன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.

    இதில் மாவட்ட பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட துணை தலைவர் வையாபுரி, இணைச் செயலாளர் சந்திரசேகரன், நிர்வாகிகள் கோதண்டராமர், கந்தசாமி, ராமதாஸ், சுந்தரராஜ லட்சுமி, நாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் '2022 ஜனவரி மாதம் 1-ந் தேதி முதல் 3 சதவீத அகவிலைப்படியை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும். 70 வயது கடந்த ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதி ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் உயர்த்தி வழங்க வேண்டும்' உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாவட்ட இணைச்செயலாளர் சவரிமுத்து நன்றி உரை ஆற்றினார்

    ×