search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒருங்கிணைப்பு"

    • தேவண்ணக்கவுண்டனுாரில் அனைத்து துறைகள் ஒருங்கிணைப்பு முகாம் நடைபெற்றது.
    • முகாமில் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டு மக்களுக்கு பயன ளிக்கும் வகையில் அரசு நல திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தனர்.

    சங்ககிரி:

    சங்ககிரி அருகே தேவண்ணக்கவுண்டனூர் ஊராட்சி, கிடையூர்மேட்டூர் கிராம சேவை மைய கட்டிட வளாகத்தில் அனைத்து துறைகள் ஒருங்கிணைப்பு முகாம் நடைபெற்றது. சங்ககிரி ஆர்.டி.ஓ சவும்யா தலைமை தாங்கினார். ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ராஜகணேஷ், பி.டி.ஓ. முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முகாமில், வேளாண்மை துறை, பள்ளிக்கல்வித்துறை, வருவாய்த்துறை, மகளிர் திட்டம், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை, கால்நடை துறை உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு மக்களுக்கு பயன ளிக்கும் வகையில் அரசு நல திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தனர். பின்னர், இலவச பட்டா, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி, சாக்கடைவசதி, தெருவிளக்கு வசதி உள்ளிட்ட 74 கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் ஆர்.டி.ஓ.விடம் வழங்கினார்கள்.

    அந்த மனுக்களை உரிய அதிகாரிகளுக்கு அனுப்பி

    வைத்து நடவடிக்கை எடுக்கப்ப டும் என கூறினார். முகாமில், சங்ககிரி தாசில்தார் பானுமதி, தேவண்ணக்கவுண்டனுார் ஊராட்சி மன்ற தலைவர் சாரதாபழனியப்பன், மண்டல துணை தாசில்தார் ஜெயக்குமார் உட்பட பல்துறை அரசு அதிகாரிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • சேலத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்ட ஒருங்கிணைப்பு முகாம் நடைபெற்றது.
    • இதில் ஆர்.டி.ஓ. விஷ்ணுவர்தினி நலதிட்டங்கள் வழங்கினார்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காடு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மாரமங்கலம் கிராம ஊராட்சியில் சேலம் ஆர்.டி.ஓ. விஷ்ணுவர்த்தினி தலைமையில் அண்ணா மறுமலர்ச்சி திட்ட ஒருங்கிணைப்பு முகாம் நடைபெற்றது.

    முகாமில் ஏற்காடு வட்டாட்சியர் விஸ்வநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் அனைத்து துறைகளின் மூலம் மாரமங்கலம் ஊராட்சியில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துக் கூறப்பட்டது. மேலும் எஸ்.டி. சாதி சான்றிதழ் வேண்டி விண்ணப்பித்திருந்த 10 நபர்களுக்கு வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுவர்த்தினி சாதி சான்றிதழ் வழங்கினார். பின்னர் கிராம மக்களிடம் மனுக்கள் பெற்றார். மேலும் முகாமில் அங்கன்வாடி பணியாளர்கள் சார்பில் காய்கறி வகைப்பாடு மற்றும் தானியங்களில் உள்ள சத்துக்கள் விளக்கும் வகையில் ஊட்டச்சத்து உணவுகள் கண்காட்சி வைத்திருந்தனர்.

    அதை ஆஎ.டி.ஓ. விஷ்ணுவர்த்தினி, அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கண்டுகளித்தனர். இதில் வைக்கப்பட்டிருந்த தானியங்கள் மற்றும் காய்கறிகளின் பயன்கள் குறித்து அங்கன்வாடி பணியாளர்கள் பொதுமக்களுக்கு விளக்கி கூறினார்.

    இந்த முகாமில் மாரமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர், துணை தலைவர், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • சங்ககிரி ஊராட்சி ஒன்றியம், சின்னாக்க வுண்டனூர் ஊராட்சியில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் அனைத்து துறைகள் ஒருங்கிணைப்பு முகாம் நடைபெற்றது.
    • இதில் 102 கோரிக்கை மனுக்கள் வழங்கல்

    சங்ககிரி:

    சங்ககிரி ஊராட்சி ஒன்றியம், சின்னாக்க வுண்டனூர் ஊராட்சி, ஜெஜெ நகர் காளியம்மன் கோவில் திடலில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் அனைத்து துறைகள் ஒருங்கிணைப்பு முகாம் நடைபெற்றது. சங்ககிரி ஆர்.டி.ஓ. சவும்யா தலைமை தாங்கினார். பிடிஓ முத்து முன்னிலை வகித்தார்.

    இந்த முகாமில், வேளாண்மை துறை, பள்ளிக்கல்வித்துறை, வருவாய்த்துறை, மகளிர் திட்டம், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை, கால்நடை துறை, ஆதிதிராவிடர் மற்றும் சிறுபான்மை துறை, முன்னோடி வங்கிகள் உள்ளிட்ட 16 துறை அதிகாரிகள் கலந்து கொண்டு மக்களுக்கு பயனளிக்கும் வகையில் அரசு நல திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தனர். பின்னர், பொதுமக்கள் இலவச பட்டா, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி, பஸ் வசதி, தெருவிளக்கு வசதி உள்ளிட்ட 102 கோரிக்கை மனுக்களை ஆர்.டி.ஓ.விடம் வழங்கினார்கள்.

    அந்த மனுக்களை உரிய அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார். முகாமில் தாசில்தார் பானுமதி, ஊராட்சி ஒன்றியக்குழு கவுன்சிலர் தங்கமுத்து, சின்னாக் கவுண்டனுார் ஊராட்சி மன்ற தலைவர்(பொறுப்பு) சங்கீதா தனபால், தனி தாசில்தார் ராஜேந்திரன், மண்டல துணை தாசில்தார் ஜெயக்குமார், வட்டார கல்வி அலுவலர் கோகிலா, கால்நடை பராமரிப்புத்துறை மருத்துவர் அன்னக்கொடி மற்றும் சின்னாக்கவுண்டனுார் ஊராட்சி மன்ற கிளர்க் தமிழ்செல்வன் உட்பட அரசு அதிகாரிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×