search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அனைத்து துறைகள் ஒருங்கிணைப்பு முகாம்
    X

    முகாமில் ஆர்.டி.ஓ. சவும்யாவிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு வழங்கிய காட்சி.

    அனைத்து துறைகள் ஒருங்கிணைப்பு முகாம்

    • சங்ககிரி ஊராட்சி ஒன்றியம், சின்னாக்க வுண்டனூர் ஊராட்சியில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் அனைத்து துறைகள் ஒருங்கிணைப்பு முகாம் நடைபெற்றது.
    • இதில் 102 கோரிக்கை மனுக்கள் வழங்கல்

    சங்ககிரி:

    சங்ககிரி ஊராட்சி ஒன்றியம், சின்னாக்க வுண்டனூர் ஊராட்சி, ஜெஜெ நகர் காளியம்மன் கோவில் திடலில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் அனைத்து துறைகள் ஒருங்கிணைப்பு முகாம் நடைபெற்றது. சங்ககிரி ஆர்.டி.ஓ. சவும்யா தலைமை தாங்கினார். பிடிஓ முத்து முன்னிலை வகித்தார்.

    இந்த முகாமில், வேளாண்மை துறை, பள்ளிக்கல்வித்துறை, வருவாய்த்துறை, மகளிர் திட்டம், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை, கால்நடை துறை, ஆதிதிராவிடர் மற்றும் சிறுபான்மை துறை, முன்னோடி வங்கிகள் உள்ளிட்ட 16 துறை அதிகாரிகள் கலந்து கொண்டு மக்களுக்கு பயனளிக்கும் வகையில் அரசு நல திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தனர். பின்னர், பொதுமக்கள் இலவச பட்டா, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி, பஸ் வசதி, தெருவிளக்கு வசதி உள்ளிட்ட 102 கோரிக்கை மனுக்களை ஆர்.டி.ஓ.விடம் வழங்கினார்கள்.

    அந்த மனுக்களை உரிய அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார். முகாமில் தாசில்தார் பானுமதி, ஊராட்சி ஒன்றியக்குழு கவுன்சிலர் தங்கமுத்து, சின்னாக் கவுண்டனுார் ஊராட்சி மன்ற தலைவர்(பொறுப்பு) சங்கீதா தனபால், தனி தாசில்தார் ராஜேந்திரன், மண்டல துணை தாசில்தார் ஜெயக்குமார், வட்டார கல்வி அலுவலர் கோகிலா, கால்நடை பராமரிப்புத்துறை மருத்துவர் அன்னக்கொடி மற்றும் சின்னாக்கவுண்டனுார் ஊராட்சி மன்ற கிளர்க் தமிழ்செல்வன் உட்பட அரசு அதிகாரிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×