search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐஎஸ் பயங்கரவாதி"

    • கடந்த ஜூலை மாதம் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் என்.ஐ.ஏ. குழுவினர் அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர்.
    • சையது நபீல் அகமதுவுக்கு உடந்தையாக இருந்தவர்கள் யார்-யார்? என்பது பற்றிய விசாரணையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட தென்மாநிலங்களில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தினர் கால்பதித்து பயங்கரவாத செயல்களுக்கு சதித்திட்டம் தீட்டி வருவதாக தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் 4 மாநிலங்களிலும் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில் கேரளாவில் ஐ.எஸ். இயக்க பயங்கரவாத ஆதரவாளர்கள் தனி குழு அமைத்து செயல்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் உஷாரான என்.ஐ.ஏ. அதிகாரிகள் அவர்களை பிடிக்க அதிரடி வேட்டையில் இறங்கினர்.

    ஈராக், சிரியா ஆகிய நாடுகளில் செயல்படும் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தினர் இந்தியாவில் தங்கள் இயக்கத்துக்கு ஆட்களை திரட்டி நாச வேலையில் ஈடுபட ஏற்கனவே சதித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் உதவியுடன் கேரள மாநிலம் திருச்சூரில் ஐ.எஸ். பயங்கரவாத கும்பலின் ஆதரவாளர்கள் திரண்டு திட்டம் தீட்டியது வெளிச்சத்துக்கு வந்தது.

    இவர்கள் தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் கோவில்கள் மற்றும் குறிப்பிட்ட மத தலைவர்களை கொல்வதற்கு திட்டம் தீட்டி வந்ததும் தெரியவந்தது. குறிப்பாக கேரள மாநிலத்தில் இருந்து தங்களது சதித்திட்டத்தை தொடங்க பயங்கரவாத ஆதரவு கும்பல் முடிவு செய்து காய் நகர்த்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

    தங்களது சதி திட்டத்துக்கு அவர்கள் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கண்டுபிடித்தனர். குறிப்பாக வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட செயல்களில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் கேரளாவில் கால்பதித்த ஐ.எஸ். பயங்கரவாத குழுவின் பின்னணி குறித்தும், அதற்கு மூளையாக செயல்படுபவர்கள் யார்-யார்? என்பது பற்றியும் ரகசிய விசாரணையில் ஈடுபட்டனர். இதில் சையது நபீல் அகமது என்பவர் ஐ.எஸ். பயங்கரவாத கும்பலுக்கு தலைவன் போல செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து அவரை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக என்.ஐ.ஏ. அமைப்பில் உள்ள தலைமறைவு குற்றவாளிகளை தேடி கண்டுபிடித்து கைது செய்யும் பிரிவு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு களம் இறங்கியது.

    என்.ஐ.ஏ. அதிகாரிகளின் பிடியில் சிக்காமல் இருப்பதற்காக சையது நபீல் அகமது தொடர்ந்து தனது இருப்பிடத்தை மாற்றிக் கொண்டே இருந்தார். இதனால் அவரை தேடி கண்டுபிடிப்பது என்.ஐ.ஏ. தனிப்படைக்கு பெரிய சவாலாக இருந்தது.

    இந்நிலையில் சென்னை பாடியில் சையது நபீல் அகமது பதுங்கி இருப்பதாக என்.ஐ.ஏ.க்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அங்கு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சையது நபீல் அகமது பாடியில் தங்கும் விடுதி ஒன்றில் மாத வாடகைக்கு அறை எடுத்து தங்கி இருப்பதை கண்டு பிடித்தனர்.

    இதையடுத்து சையது நபீல் அகமதுவை என்.ஐ.ஏ. அதிகாரிகள் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

    பின்னர் அவர் தங்கி இருந்த அறையை சோதனை செய்தனர். அப்போது அங்கிருந்து போலி சான்றிதழ்கள் மற்றும் டிஜிட்டல் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

    கைதான சையது நபீல் அகமது நேபாளம் வழியாக வெளிநாட்டுக்கு தப்பி செல்வதற்கு திட்டமிட்டு அதற்கான பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில்தான் என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் சிக்கியுள்ளார்.

    சையது நபீல் அகமது தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் ஐ.எஸ். பயங்கரவாத குழுக்களின் கிளைகளை தொடங்குவதற்கு திட்டமிட்டு அதற்கான பணிகளில் ரகசியமாக ஈடுபட்டு வந்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கேரள மாநிலம் திருச்சூரில் கிளை அமைப்பு ஒன்றை தொடங்கி அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு ஆரம்ப புள்ளியை பயங்கரவாத கும்பல் வைத்திருக்கும் திடுக்கிடும் தகவலும் தெரிய வந்துள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக கொச்சி என்.ஐ.ஏ. அதி காரிகள் கடந்த ஜூலை மாதம் முதல் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் ஏற்கனவே 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில்தான் தற்போது கும்பல் தலைவன் போல செயல்பட்ட சையது நபீல் அகமது கைதாகி இருக்கிறார்.

    தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களை இணைக்கும் முச்சந்தி காடுகளில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினர் ஆயுத பயிற்சி மற்றும் ஒத்திகையில் ஈடுபட்டிருக்கும் திடுக்கிடும் தகவலும் தெரியவந்து உள்ளது. இதற்காக வீரப்பன் சுற்றி திரிந்த காட்டுப் பகுதியை அவர்கள் தேர்வு செய்து அடிக்கடி அங்கு சென்று ஆயுத பயிற்சி மற்றும் ஒத்திகையில் ஈடுபட்டதும் அம்பலமாகி இருக்கிறது.

    இதுதொடர்பாக கடந்த ஜூலை மாதம் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் என்.ஐ.ஏ. குழுவினர் அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது சையது நபீல் அகமதுவின் கூட்டாளியான ஆசீப் என்பவர் கைதானார்.

    கேரள மாநிலத்தை சேர்ந்த இவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையிலேயே என்.ஐ.ஏ. அதிகாரிகள் தற்போது முக்கிய குற்றவாளியான சையது நபீல் அகமதுவை பிடித்திருக்கிறார்கள்.

    சையது நபீல் அகமதுவுக்கு உடந்தையாக இருந்தவர்கள் யார்-யார்? என்பது பற்றிய விசாரணையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களும் விரைவில் என்.ஐ.ஏ. பிடியில் சிக்குகிறார்கள்.

    • விசாரணையின்போது ராஜா முகமதுவின் செல்போனையும் கைப்பற்றி அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
    • ராஜா முகமதுவிடம் விசாரணை முடிந்ததும் அவரை திருவள்ளூர் குற்றவியல் நடுவர் கோர்ட்டு நீதிபதி மூகாம்பிகை முன்பு ஆஜர்படுத்தினார்கள்.

    திருவொற்றியூர்:

    சென்னை ஆர்.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜா முகமது (வயது26). இவர் கடந்த ஒரு வருடமாக திருவள்ளூரில் உள்ள தனது மாமனார் வீட்டில் தங்கி இருந்தார். திருவள்ளூர் அருகே காக்களூர் பகுதியில் உள்ள ஒரு இறைச்சி கடையில் வேலைபார்த்து வந்தார்.

    நேற்று முன்தினம் இரவு ராஜா முகமது தனது மாமனார் வீட்டில் இருந்தார். அப்போது அங்கு என்.ஐ.ஏ. அதிகாரிகள், உளவுத்துறை அதிகாரிகள் மற்றும் திருவள்ளூர் டவுன் போலீசார் ஆகியோர் சென்றனர். அவர்கள் ராஜா முகமதுவை கைது செய்தனர்.

    பின்னர் அவரை மணவாளநகர் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு வைத்து அவரிடம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையின்போது ராஜா முகமது, ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருக்கும் அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது.

    கைதான ராஜா முகமது பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்தினார். அதன் பிறகு அவர் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் செயல்களால் ஈர்க்கப்பட்டார். அவர்களுக்கு ஆதரவான கருத்துக்களையும் இணையதளங்களில் பதிவிட்டு வந்தார்.

    இந்த தகவல்களை பார்த்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் சவூதி அரேபியாவில் இருந்து அவரை தொடர்பு கொண்டனர். இதற்கிடையே ராஜா முகமது திருவள்ளூரில் மாமனார் வீட்டில் தங்கி கறிக்கடையில் வேலை பார்த்து வந்தார்.

    ஆனாலும் அவர் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பிலேயே இருந்தார். சிக்னல் என்ற தடை செய்யப்பட்ட செயலி மூலம் பயங்கரவாத அமைப்பினருடன் தொடர்பு கொண்டு பேசியது கண்டுபிடிக்கப்பட்டது. கறிக்கடையில் வேலைபார்க்கும்போது அவர் அடிக்கடி செல்போனிலேயே பேசிக்கொண்டு இருப்பார்.

    இதை அறிந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் மற்றும் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் அவரை தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில்தான் அவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள், உளவுத்துறை அதிகாரிகள் மற்றும் திருவள்ளூர் டவுன் போலீசார் ஆகியோர் கைது செய்தனர்.

    மணவாளநகர் போலீஸ் நிலையத்தில் வைத்து அவரிடம் அதிகாரிகள் 18 மணிநேரம் விசாரணை நடத்தினார்கள். அப்போது அதிகாரிகளிடம் ராஜா முகமது பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார்.

    சவூதி அரேபியாவில் இருந்து ராஜா முகமதுவுடன் தொடர்பு கொண்டு பேசிய ஐ.எஸ். பயங்கரவாதிகள் அவரை பயங்கரவாத அமைப்பில் சேர வருமாறு அழைத்தனர். அதற்காக சவூதி அரேபியா வருவதற்கான பாஸ்போர்ட், விசா எடுத்து அனுப்பி வைப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

    விசாரணையின்போது ராஜா முகமதுவின் செல்போனையும் கைப்பற்றி அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    ராஜா முகமதுவிடம் விசாரணை முடிந்ததும் அவரை திருவள்ளூர் குற்றவியல் நடுவர் கோர்ட்டு நீதிபதி மூகாம்பிகை முன்பு ஆஜர்படுத்தினார்கள். அவரது உத்தரவின்பேரில் ராஜா முகமது புழல் சிறையில் அடிக்கப்பட்டார்.

    ×