search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவள்ளூரில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்த சென்னை வாலிபர் கைது
    X

    திருவள்ளூரில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்த சென்னை வாலிபர் கைது

    • விசாரணையின்போது ராஜா முகமதுவின் செல்போனையும் கைப்பற்றி அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
    • ராஜா முகமதுவிடம் விசாரணை முடிந்ததும் அவரை திருவள்ளூர் குற்றவியல் நடுவர் கோர்ட்டு நீதிபதி மூகாம்பிகை முன்பு ஆஜர்படுத்தினார்கள்.

    திருவொற்றியூர்:

    சென்னை ஆர்.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜா முகமது (வயது26). இவர் கடந்த ஒரு வருடமாக திருவள்ளூரில் உள்ள தனது மாமனார் வீட்டில் தங்கி இருந்தார். திருவள்ளூர் அருகே காக்களூர் பகுதியில் உள்ள ஒரு இறைச்சி கடையில் வேலைபார்த்து வந்தார்.

    நேற்று முன்தினம் இரவு ராஜா முகமது தனது மாமனார் வீட்டில் இருந்தார். அப்போது அங்கு என்.ஐ.ஏ. அதிகாரிகள், உளவுத்துறை அதிகாரிகள் மற்றும் திருவள்ளூர் டவுன் போலீசார் ஆகியோர் சென்றனர். அவர்கள் ராஜா முகமதுவை கைது செய்தனர்.

    பின்னர் அவரை மணவாளநகர் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு வைத்து அவரிடம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையின்போது ராஜா முகமது, ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருக்கும் அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது.

    கைதான ராஜா முகமது பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்தினார். அதன் பிறகு அவர் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் செயல்களால் ஈர்க்கப்பட்டார். அவர்களுக்கு ஆதரவான கருத்துக்களையும் இணையதளங்களில் பதிவிட்டு வந்தார்.

    இந்த தகவல்களை பார்த்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் சவூதி அரேபியாவில் இருந்து அவரை தொடர்பு கொண்டனர். இதற்கிடையே ராஜா முகமது திருவள்ளூரில் மாமனார் வீட்டில் தங்கி கறிக்கடையில் வேலை பார்த்து வந்தார்.

    ஆனாலும் அவர் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பிலேயே இருந்தார். சிக்னல் என்ற தடை செய்யப்பட்ட செயலி மூலம் பயங்கரவாத அமைப்பினருடன் தொடர்பு கொண்டு பேசியது கண்டுபிடிக்கப்பட்டது. கறிக்கடையில் வேலைபார்க்கும்போது அவர் அடிக்கடி செல்போனிலேயே பேசிக்கொண்டு இருப்பார்.

    இதை அறிந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் மற்றும் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் அவரை தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில்தான் அவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள், உளவுத்துறை அதிகாரிகள் மற்றும் திருவள்ளூர் டவுன் போலீசார் ஆகியோர் கைது செய்தனர்.

    மணவாளநகர் போலீஸ் நிலையத்தில் வைத்து அவரிடம் அதிகாரிகள் 18 மணிநேரம் விசாரணை நடத்தினார்கள். அப்போது அதிகாரிகளிடம் ராஜா முகமது பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார்.

    சவூதி அரேபியாவில் இருந்து ராஜா முகமதுவுடன் தொடர்பு கொண்டு பேசிய ஐ.எஸ். பயங்கரவாதிகள் அவரை பயங்கரவாத அமைப்பில் சேர வருமாறு அழைத்தனர். அதற்காக சவூதி அரேபியா வருவதற்கான பாஸ்போர்ட், விசா எடுத்து அனுப்பி வைப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

    விசாரணையின்போது ராஜா முகமதுவின் செல்போனையும் கைப்பற்றி அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    ராஜா முகமதுவிடம் விசாரணை முடிந்ததும் அவரை திருவள்ளூர் குற்றவியல் நடுவர் கோர்ட்டு நீதிபதி மூகாம்பிகை முன்பு ஆஜர்படுத்தினார்கள். அவரது உத்தரவின்பேரில் ராஜா முகமது புழல் சிறையில் அடிக்கப்பட்டார்.

    Next Story
    ×