search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "IS terrorist"

    • கடந்த ஜூலை மாதம் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் என்.ஐ.ஏ. குழுவினர் அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர்.
    • சையது நபீல் அகமதுவுக்கு உடந்தையாக இருந்தவர்கள் யார்-யார்? என்பது பற்றிய விசாரணையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட தென்மாநிலங்களில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தினர் கால்பதித்து பயங்கரவாத செயல்களுக்கு சதித்திட்டம் தீட்டி வருவதாக தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் 4 மாநிலங்களிலும் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில் கேரளாவில் ஐ.எஸ். இயக்க பயங்கரவாத ஆதரவாளர்கள் தனி குழு அமைத்து செயல்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் உஷாரான என்.ஐ.ஏ. அதிகாரிகள் அவர்களை பிடிக்க அதிரடி வேட்டையில் இறங்கினர்.

    ஈராக், சிரியா ஆகிய நாடுகளில் செயல்படும் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தினர் இந்தியாவில் தங்கள் இயக்கத்துக்கு ஆட்களை திரட்டி நாச வேலையில் ஈடுபட ஏற்கனவே சதித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் உதவியுடன் கேரள மாநிலம் திருச்சூரில் ஐ.எஸ். பயங்கரவாத கும்பலின் ஆதரவாளர்கள் திரண்டு திட்டம் தீட்டியது வெளிச்சத்துக்கு வந்தது.

    இவர்கள் தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் கோவில்கள் மற்றும் குறிப்பிட்ட மத தலைவர்களை கொல்வதற்கு திட்டம் தீட்டி வந்ததும் தெரியவந்தது. குறிப்பாக கேரள மாநிலத்தில் இருந்து தங்களது சதித்திட்டத்தை தொடங்க பயங்கரவாத ஆதரவு கும்பல் முடிவு செய்து காய் நகர்த்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

    தங்களது சதி திட்டத்துக்கு அவர்கள் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கண்டுபிடித்தனர். குறிப்பாக வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட செயல்களில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் கேரளாவில் கால்பதித்த ஐ.எஸ். பயங்கரவாத குழுவின் பின்னணி குறித்தும், அதற்கு மூளையாக செயல்படுபவர்கள் யார்-யார்? என்பது பற்றியும் ரகசிய விசாரணையில் ஈடுபட்டனர். இதில் சையது நபீல் அகமது என்பவர் ஐ.எஸ். பயங்கரவாத கும்பலுக்கு தலைவன் போல செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து அவரை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக என்.ஐ.ஏ. அமைப்பில் உள்ள தலைமறைவு குற்றவாளிகளை தேடி கண்டுபிடித்து கைது செய்யும் பிரிவு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு களம் இறங்கியது.

    என்.ஐ.ஏ. அதிகாரிகளின் பிடியில் சிக்காமல் இருப்பதற்காக சையது நபீல் அகமது தொடர்ந்து தனது இருப்பிடத்தை மாற்றிக் கொண்டே இருந்தார். இதனால் அவரை தேடி கண்டுபிடிப்பது என்.ஐ.ஏ. தனிப்படைக்கு பெரிய சவாலாக இருந்தது.

    இந்நிலையில் சென்னை பாடியில் சையது நபீல் அகமது பதுங்கி இருப்பதாக என்.ஐ.ஏ.க்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அங்கு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சையது நபீல் அகமது பாடியில் தங்கும் விடுதி ஒன்றில் மாத வாடகைக்கு அறை எடுத்து தங்கி இருப்பதை கண்டு பிடித்தனர்.

    இதையடுத்து சையது நபீல் அகமதுவை என்.ஐ.ஏ. அதிகாரிகள் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

    பின்னர் அவர் தங்கி இருந்த அறையை சோதனை செய்தனர். அப்போது அங்கிருந்து போலி சான்றிதழ்கள் மற்றும் டிஜிட்டல் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

    கைதான சையது நபீல் அகமது நேபாளம் வழியாக வெளிநாட்டுக்கு தப்பி செல்வதற்கு திட்டமிட்டு அதற்கான பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில்தான் என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் சிக்கியுள்ளார்.

    சையது நபீல் அகமது தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் ஐ.எஸ். பயங்கரவாத குழுக்களின் கிளைகளை தொடங்குவதற்கு திட்டமிட்டு அதற்கான பணிகளில் ரகசியமாக ஈடுபட்டு வந்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கேரள மாநிலம் திருச்சூரில் கிளை அமைப்பு ஒன்றை தொடங்கி அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு ஆரம்ப புள்ளியை பயங்கரவாத கும்பல் வைத்திருக்கும் திடுக்கிடும் தகவலும் தெரிய வந்துள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக கொச்சி என்.ஐ.ஏ. அதி காரிகள் கடந்த ஜூலை மாதம் முதல் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் ஏற்கனவே 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில்தான் தற்போது கும்பல் தலைவன் போல செயல்பட்ட சையது நபீல் அகமது கைதாகி இருக்கிறார்.

    தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களை இணைக்கும் முச்சந்தி காடுகளில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினர் ஆயுத பயிற்சி மற்றும் ஒத்திகையில் ஈடுபட்டிருக்கும் திடுக்கிடும் தகவலும் தெரியவந்து உள்ளது. இதற்காக வீரப்பன் சுற்றி திரிந்த காட்டுப் பகுதியை அவர்கள் தேர்வு செய்து அடிக்கடி அங்கு சென்று ஆயுத பயிற்சி மற்றும் ஒத்திகையில் ஈடுபட்டதும் அம்பலமாகி இருக்கிறது.

    இதுதொடர்பாக கடந்த ஜூலை மாதம் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் என்.ஐ.ஏ. குழுவினர் அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது சையது நபீல் அகமதுவின் கூட்டாளியான ஆசீப் என்பவர் கைதானார்.

    கேரள மாநிலத்தை சேர்ந்த இவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையிலேயே என்.ஐ.ஏ. அதிகாரிகள் தற்போது முக்கிய குற்றவாளியான சையது நபீல் அகமதுவை பிடித்திருக்கிறார்கள்.

    சையது நபீல் அகமதுவுக்கு உடந்தையாக இருந்தவர்கள் யார்-யார்? என்பது பற்றிய விசாரணையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களும் விரைவில் என்.ஐ.ஏ. பிடியில் சிக்குகிறார்கள்.

    சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திய பதில் தாக்குதல்களில் அமெரிக்கா ஆதரவு பெற்ற குர்து படையைச் சேர்ந்த 47 பேர் கொல்லப்பட்டனர். #Syria #ISCounterAttacks #USBackedFighters
    டமாஸ்கஸ்:

    சிரியாவில் உள்ள ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க ஆதரவு பெற்ற குர்து படையினர் (சிரிய ஜனநாயக படை) மற்றும் கிளர்ச்சி படையினர் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

    ஈராக் எல்லையை ஒட்டியுள்ள டீர் எஸ்ஸார் மாகாணத்தில் இருந்து ஐஎஸ் பயங்கரவாதிகளை விரட்டியடிப்பதற்காக தற்போது உக்கிரமான தாக்குதல் நடத்தி பயங்கரவாதிகளை கொன்று குவித்து வருகின்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஐஎஸ் பயங்கரவாதிகளும் அவ்வப்போது தாக்குதல் நடத்துகின்றனர்.

    அவ்வகையில், அல் பஹ்ரா மற்றும் கரானிஜ் கிராமங்கள் மற்றும் சிரிய ஜனநாயக படையின் கட்டுப்பாட்டில் உள்ள அல் தனக் எண்யெய் வயல் அருகில் சனிக்கிழமை முதல் ஐஎஸ் பயங்கரவாதிகள் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தினர். இரண்டு நாட்களாக நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களில் 47 பேர் கொல்லப்பட்டதாக மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. #Syria #ISCounterAttacks #USBackedFighters
    ஐஎஸ் பயங்கரவாதி அடைக்கப்பட்டுள்ள கடலூர் சிறையில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கடலூர்:

    சென்னையில் உள்ள புழல் சிறையில் கைதிகளுக்கு பல்வேறு உயர்ரக வசதிகள் செய்து கொடுத்ததால் அவர்கள் மிக மகிழ்ச்சியாக இருந்து வந்த படம் சமூக வலைதளங்களில் பரவியது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள சிறைச் சாலைகளை போலீஸ் மற்றும் சிறைத்துறை அதிகாரிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திடீர் சோதனை செய்து வந்தனர்.

    இதற்கிடையே புழல் சிறையில் இருந்து ஐ.எஸ். தீவிரவாதி அன்சார் மீரான் கடலூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு உள்ளார். மேலும் சிறை தகர்க்கப்பட்டு ஐஎஸ் தீவிரவாதி அன்சார் மீரானை மீட்டு கொண்டு செல்வோம் என மத்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்ததின் பேரில் கடலூர் மத்திய சிறைச்சாலையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீஸ் மற்றும் சிறைத்துறை அதிகாரிகள் கடலூர் மத்திய சிறைச்சாலையில் சோதனை நடத்தியதில் செல்போன், சிம்கார்டு உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    இந்நிலையில் இன்று காலை சுமார் 6 மணியிலிருந்து கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார், சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் மோப்ப நாய் வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் கடலூர் மத்திய சிறைச்சாலையில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    இந்த முறை சிறைத்துறை வளாகத்தில் சோதனை செய்யும்போது மோப்ப நாயும் வெடிகுண்டு நிபுணர்களும் புதிதாக சோதனையில் ஈடுபடுத்தப்பட்டது.

    ஐ.எஸ். தீவிரவாதி அன்சார் மீரானை சிறையை தகர்த்து மீட்டு செல்வோம் என மத்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்ததின் பேரில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்த நிலையில், மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சிறை வளாகத்தில் சோதனை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சிரியாவுக்குள் முகாமிட்டுள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய ஆலோசனை கூட்டத்தின்போது ஈராக் போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் 45 பேர் கொல்லப்பட்டனர். #Iraqbombing #IslamicStatemeeting #45killedinSyria
    பாக்தாத்:

    ஈராக் நாட்டின் பெரும்பகுதியை ஆக்கிரமித்து வைத்திருந்த ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஈராக் ராணுவம் முற்றிலுமாக ஒடுக்கி நாட்டை விட்டு விரட்டி அடித்துள்ளது. ஆனால், அங்கிருந்து அண்டை நாடான சிரியாவின் எல்லைப்பகுதிக்கு தப்பிச்சென்ற பயங்கரவாதிகள் அவ்வப்போது ஈராக் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

    சிரியாவில் பதுங்கி இருக்கும் ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒழிக்கும் பணியில் அமெரிக்க விமானப்படையுடன் அண்டை நாடான ஈராக்கின் விமானப்படைகளும் ஈடுபட்டு வருகின்றன.

    இந்நிலையில், சிரியாவின் ஹாஜின் நகரில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆலோசனை கூட்டம் நடத்திய மூன்று வீடுகளின்மீது ஈராக் நாட்டு போர் விமானங்கள் நேற்றிரவு ஆவேச தாக்குதல்களை நடத்தின.

    இந்த தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் போர்துறை மந்திரி, ஊடகத்துறை தலைமை பொறுப்பாளர் உள்பட 45 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக ஈராக் ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன. #Iraqbombing #IslamicStatemeeting #45killedinSyria
    ×