என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எரிமலை குழம்பு"

    • கடந்த ஆண்டில் இருந்து அடிக்கடி கிளாவியா எரிமலை குழம்புகளை வெளியேற்றி வருகிறது.
    • 2,400 அடி உயரத்துக்கு எரிமலை குழம்புகளை பீச்சி அடித்துள்ளது.

    அமெரிக்காவில் உள்ள ஹவாய் தீவின் கிளாவியா எரிமலை கடும் சீற்றத்துடன் எரிமலை குழம்புகளை வளியேற்றி வருகிறது.

    கடந்த ஆண்டில் இருந்து அடிக்கடி கிளாவியா எரிமலை குழம்புகளை வெளியேற்றி வருகிறது. கிட்டத்தட்ட 2,400 அடி உயரத்துக்கு எரிமலை குழம்புகளை பீச்சி அடித்துள்ளது.

    இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. 

    • இந்தோனேசியாவில் லக்கி லக்கி எரிமலை வெடித்துச் சிதறியது.
    • அதில் இருந்து வானுயரத்துக்கு தீக்குழம்பு வெளியேறியது.

    ஜகார்த்தா:

    பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் இருப்பதால் இந்தோனேசியாவில் பல எரிமலைகள் அமைந்துள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்கது வெவோடோபி நகரில் உள்ள லிவோட்பி எரிமலை.

    1,500 மீட்டர் உயரமுள்ள அந்த எரிமலை பிரபலமாக லக்கி லக்கி என அறியப்படுகிறது. இந்த மலையின் அழகைக் காண வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் படையெடுக்கின்றனர்.

    அந்த எரிமலை சமீப காலமாக அடிக்கடி வெடித்துச் சிதறுகிறது. அதன்படி லக்கி லக்கி எரிமலை பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் எரிமலையில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் உயரத்துக்கு தீக்குழம்பு வெளியேறியது.

    இதனை தொடர்ந்து அடுத்த சில மணி நேரங்களில் மீண்டும் எரிமலை வெடிக்க தொடங்கியது. எனவே அந்த இடம் முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சி அளித்தது.

    இதனால் எரிமலையை சுற்றியுள்ள பகுதியில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டது. எரிமலையில் இருந்து வெளியேறிய சாம்பல் 8 கிலோமீட்டர் தூரம் வரை ஆறாக ஓடியது.

    எரிமலை அருகே உள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    • தலையில் ஹெல்மட் அணிந்திருக்கும் அவர், கையில் வாக்கி-டாக்கி வைத்திருக்கிறார்.
    • இந்த வீடியோவைப் பார்த்த பலர் திகைப்புடன் தங்கள் கவலையை பகிர்ந்துள்ளனர்.

    வெடித்து சிதறும் எரிமலையின் குழம்பான லாவா அருகே நிற்கும் மனிதர் குறித்த வீடியோ ஒன்றை பார்த்த சமூக வலைதள பார்வையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

    ட்விட்டரில் வெளி வந்துள்ள இந்த வீடியோவில் எரிமலை குழம்பு பெருகி கடல் போல் காணப்படும் பகுதியில் இருக்கும் ஒரு பாறையின் விளிம்பு பகுதிக்கு ஒரு மனிதர் மெதுவாக செல்கிறார்.

    அவருக்கு அருகில் எரிமலை குழம்பு தீப் பிழம்புடன் வந்து விழுகின்றது. தலையில் ஹெல்மட் அணிந்திருக்கும் அவர் கையில் வாக்கி-டாக்கியை வைத்திருக்கிறார். இதன் மூலம் அவர் ஆய்வாளராகவோ அல்லது எரிமலை குறித்து ஆய்வு செய்பவராகவோ இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவித்துள்ளன. 

    இந்த வீடியோ எந்த பகுதியில் எடுக்கப்பட்டது என்பது குறித்த தகவல் இல்லை. இதை பார்த்த பலர் திகைப்புடன் தங்கள் கவலையை பகிர்ந்துள்ளனர். முழு அளவில் பாதுகாப்பு எதுவும் இல்லாமல், எரிமலை கடலுக்கு அருகே இவ்வளவு நெருக்கமாக அந்த மனிதனால் எப்படி செல்ல முடிந்தது என்று பலர் கேள்வி எழுப்பினர்.

    ட்விட்டரில் பகிரப்பட்டதிலிருந்து இந்த வீடியோ 20 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றுள்ளது. 5433 பேர் ரீ ட்வீட் செய்துள்ளனர்.56,000 க்கும் மேற்பட்டோர் வீடியோவை விரும்பியுள்ளனர்.

    ×