search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எடுக்க வேண்டும்"

    • குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் அறிக்கை
    • உரிய நடவடிக்கை எடுத்து பொதுமக்களிடம் போலீசார் மீது நம்பிக்கையை உறுதி செய்ய வேண்டும்.

    மார்த்தாண்டம்:

    கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பினுலால் சிங் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:- குலசேகரம் பகுதியில் அமைந்துள்ள மூகாம்பிகா மருத்துவக்கல்லூரியில் 2-ம் ஆண்டு பயின்று வந்த சுகிர்தா என்ற மாணவி தற்கொலை செய்வதற்கு தூண்டிய டாக்டர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் இதற்கு காரணமான டாக்டர்களை போலீசார் கைது செய்யாதது பரபரப்பை ஏற்படுத்தி வரு கிறது. கல்லூரி நிர்வாகம், கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு போதிய விடுப்பு கொடுத்தும், போதிய கவுன்சிலிங் கொடுத்தும் வரும் காலங்களில் இத்த கைய சம்பவங்கள் நடை பெறுவதை தவிர்க்க வழிவகுக்க வேண்டும். மேலும் போலீசார் குற்றம் செய்தவர்கள் தப்பிக்காத அளவுக்கு பாரபட்சம் இன்றி உரிய நடவடிக்கை எடுத்து பொதுமக்களிடம் போலீசார் மீது நம்பிக்கையை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடந்த மாதம் தாலுகா அலுவலகத்தின் உள்பகுதியில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த தாசில்தார் விஜயகுமாரின் 2 சக்கர வாகனம் தாலுகா அலுவலகத்திலேயே மாயமானது.
    • சி.சி.டி.வி. கேமராவில் உள்ள காட்சி பதிவுகளை வைத்து யாரேனும் இருசக்கர வாகனங்கள் எடுத்து செல்கின்றார்களா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றார்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள அந்தியூர் தாலுகா அலுவலகம், பஸ் நிலையம், தவிட்டுப் பாளையம் காய்கறி மார்க்கெட், ஜி ஹெச் கார்னர் உள்ளிட்ட பகுதிகளில் மளிகை கடைக்கு வருபவர்களும் வியாபாரிகளும் இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு கடைக்குள் சென்று வருவதற்குள் திருடு போகும் அவல நிலை நடந்து வருகிறது.

    கடந்த மாதம் தாலுகா அலுவலகத்தின் உள்பகுதியில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த தாசில்தார் விஜயகுமாரின் 2 சக்கர வாகனம் தாலுகா அலுவலகத்திலேயே மாயமானது.

    அதற்கு அடுத்த நாள் வேறொரு நபரின் இரு சக்கர வாகனமும் தாலுகா அலுவலக வளாகத்திற்கு உள்ளேயே திருடு போனது. இதனை தொடர்ந்து நேற்று முன் தினம் தவிட்டுப்பாளையம் மார்க்கெட் அருகே தேநீர் கடை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் காணாமல் போனது.

    இதனை தொடர்ந்து சம்பவத்தன்று காலை அந்தியூர் பஸ் நிலைய வளாகத்திற்குள் தனியார் பேருந்து நடத்துனர் தனது 2 சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றுள்ளார் மீண்டும் அந்த வாகனத்தை ஒரு மணிக்கு அந்தியூர் பஸ் நிலையம் வந்தபோது பார்த்துள்ளார்.

    அப்போது அவர் நிறுத்தி விட்டு சென்ற தனது இரு சக்கர வாகனத்தை காணவில்லை. இதனை அடுத்து அக்கம் பக்கம் தேடிப் பார்த்துள்ளார். வண்டியை காணவில்லை. இதுகுறித்து அந்தியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி அந்தியூர் பஸ் நிலையம், ஜி ஹெச் கார்னர், அண்ணா மடுவு உள்ளிட்ட இடங்களில் உள்ள சி.சி.டி. கேமராவில் உள்ள காட்சி பதிவுகளை வைத்து யாரேனும் இருசக்கர வாகனங்கள் எடுத்து செல்கின்றார்களா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றார்.

    இதனால் அந்தியூர் பகுதியில் இருசக்கர வாகன திருடர்கள் சுற்றித் திரிகிறார்கள் எனவே போலீசார் வாகன சோதனையை தீவிரப்படுத்தி இருசக்கர வாகன திருடர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • முருகம்பாளையம் கிராமத்தை சேர்ந்த பெண்கள் கொடுமுடி யூனியன் அலுவலகத்திற்கு திரண்டு வந்து வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மனாபனிடம் மனு கொடுத்தனர்.
    • சுமை தாங்கி பகுதியில் தற்போது போர் போட்டு டேங்க் கட்டப்பட்டு உள்ளது. அதில் இருந்து எங்களுக்கு குடிநீர் வழங்கிட ஆவண செய்ய வேண்டும்.

    கொடுமுடி:

    கொடுமுடி அருகே அய்யம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது முருகம்பாளையம். இக்கிராமத்தை சேர்ந்த பெண்கள் கொடுமுடி யூனியன் அலுவலகத்திற்கு திரண்டு வந்து வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மனாபனிடம் மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்ப தாவது:

    எங்கள் பகுதி நொய்யல் ஆற்றங்கரையில் உள்ளது. இதனால் நிலத்தடி நீர் அனைத்தும் மாசுபட்டு உள்ளதால் அனைத்து ஆழ்குழாய் கிணறுகளும் மூடப்பட்டு விட்டன. காவிரி கூட்டுக் குடிநீர் திட்டமும் சரியாக செயல்படுவதில்லை. வீட்டுக்கு 2 குடம் குடிநீர் கிடைப்பதே அரிதாக உள்ளது.

    மேலும் அங்கன்வாடி மையம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளுக்கும் குடிதண்ணீர் பற்றாக்குறை உள்ளது.எனவே சுமை தாங்கி பகுதியில் தற்போது போர் போட்டு டேங்க் கட்டப்பட்டு உள்ளது. அதில் இருந்து எங்களுக்கு குடிநீர் வழங்கிட ஆவண செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் அதில் கூறியுள்ளனர்.

    மனுவை பெற்றுக் கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர் உடனடியாக ஊராட்சி செயலாளரை தொடர்பு கொண்டு குடி தண்ணீர் காலை, மாலை 2நேரமும் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

    • சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதி ஓசூர் கிராமத்தில் செயல்படாத கல்குவாரி உள்ளது. இதன் அருகே ஓசூர் கிராமம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனை மற்றும் குடியிருப்பு பகுதிகள் உள்ளன.
    • புதர் மண்டி கிடப்பதால் மீண்டும் சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் புகும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட வருவாய் துறை அதிகாரிகள் இந்த கல்குவாரியை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஈரோடு, ஜூலை. 5-

    சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதி ஓசூர் கிராமத்தில் செயல்படாத கல்குவாரி உள்ளது. இதன் அருகே ஓசூர் கிராமம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனை மற்றும் குடியிருப்பு பகுதிகள் உள்ளன.

    வருவாய் துறைக்கு சொந்தமான இந்த கல்குவாரியின் உரிமம் கடந்த 2014-ம் ஆண்டு முதல் காலாவதியானது. இதனால் குவாரியை சுற்றியுள்ள பட்டா நிலங்களில் கற்கள் மலை போல் குவிந்துள்ளது.

    பல வருடங்களாக குவிந்துள்ள கற்குவியல்களில் செடி, கொடி வளர்ந்து புதர் நிறைந்து காடு போன்று காட்சியளிக்கிறது.

    இந்நிலையில் ஒரு சிறுத்தை இந்த கல்குவாரியில் தஞ்சம் புகுந்து கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் புகுந்த ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை தொடர்ந்து வேட்டையாடி வந்தன.

    தொடர்ந்து போக்கு காட்டி வந்த சிறுத்தையை பிடிக்க பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து வனத்துறையினர் கூண்டு வைத்து கடந்த மாதம் 30-ந் தேதி சிறுத்தையை பிடித்தனர்.

    பின்னர் சிறுத்தை அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது. இதை அடுத்தே அப்பகுதி மக்கள், விவசாயிகள் சற்று நிம்மதி அடைந்தனர்.

    இருந்தாலும் மீண்டும் கல்குவாரியில் வேறு ஏதாவது வன விலங்குகள் பதுங்கி மீண்டும் அச்சுறுத்தக் கூடாது என பயந்து வருகின்றனர்.

    இது குறித்த அப்பகுதி மக்கள் கூறியதாவது:

    இந்த செயல்படாத கல்குவாரி 1.25 ஏக்கர் பரப்பளவில் மட்டுமே உள்ளது. ஆனால் இதனை சுற்றியுள்ள பட்டா நிலங்களில் கற்கள் மலை போல் குவிந்து கிடக்கிறது. இதனால் தரிசு இடத்தில் விவசாயம் செய்ய முடிவதில்லை.

    புதர் மண்டி கிடப்பதால் மீண்டும் சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் புகும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட வருவாய் துறை அதிகாரிகள் இந்த கல்குவாரியை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இது தவிர இந்த பகுதியில் உள்ள புதர்களை அகற்றி சுத்தமாக வைத்திருந்தால் வனவிலங்குகள் ஊருக்குள் வராது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×