search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊழியா்கள்"

    • 850 பணியாளா்கள் முழுமையாக பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
    • மருத்துவமனைகள், மின் ஊழியா்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளனா்.

    தஞ்சாவூர்:

    வடகிழக்கு பருவ மழை யையொட்டி தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறையை மேயர் சண்.ராமநாதன் திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களு க்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது;-

    வடகிழக்கு பருவ மழையை யொட்டி தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. மேலும், உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் 51 பாதுகாப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த 51 குழுக்களில் அந்தந்த மாமன்ற உறுப்பினா்களின் தலைமையில் மாநகரா ட்சியின் பொறுப்பு அலுவலா்கள் நியமிக்கப்ப ட்டுள்ளனா்.

    மேலும், பருவ மழையை எதிா்கொ ள்ளும் விதமாக மாநகராட்சியிலுள்ள 850 பணியாளா்களும் முழுமையாகப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

    கட்டுப்பாட்டு அறைக்கு மழை பாதிப்பு குறித்து பொதுமக்கள் தகவல் அளித்தால், மாநகராட்சியில் இக்குழுக்களுக்கு தகவல் அளித்து உடனடியாக போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

    எனவே, பொதுமக்கள் ஏதேனும் பாதிப்புகள் இருந்தால் உடனடியாக 18004251100 என்ற கட்டணமில்லா எண்ணிலும், 7598016621, 04362 - 231021 என்கிற எண்களிலும் தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

    மேலும் தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கட்டுப்பாட்டு அறையிலும் மாநகராட்சி பணியாளா்கள் மூவா் பணியில் இருப்பா்.

    தஞ்சாவூா் மாநகராட்சி பகுதியில் நூறு ஆண்டுகள் கடந்த கட்டடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. பழைமையான கட்டட ங்களில் அதன் உரிமையா ளா்கள் பாதுகாப்பைக் கருதி யாருக்கும் வாடகைக்கு விட வேண்டாம். அதில் யாரும் குடியிருக்க வேண்டாம்.

    சுகாதாரத் துறையினா், மருத்துவமனைகள், மின் ஊழியா்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளனா்.

    மழை அதிக அளவில் பெய்து, தாழ்வான பகுதிகளில் தண்ணீா் தேங்கி குடியிருப்புகள் பாதிக்கப்பட்டால், அப்பகுதியைச் சோ்ந்த அனைவரையும் முகாமுக்கு அழைத்து சென்று உணவு வழங்குவது, பாதுகாப்பாக தங்க வைப்பது என முடிவு செய்துள்ளோம் .

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது, மண்டலக் குழுத் தலைவா் எஸ்.சி. மேத்தா, மாநகராட்சி செயற்பொறியாளா் ஜெகதீசன், உதவிச் செயற்பொறியாளா் ராஜசேகரன், உதவிப் பொறியாளா் சந்திரபோஸ், மேலாளா் ஜெயக்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

    • மின்வாரியத்தினருக்கான பல்வேறு கடன் சலுகைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
    • துணை மின்நிலையங்கள் மற்றும் மின்வாரியப் பணிகளில் சிலவற்றை தனியாருக்கு வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

    நாமக்கல்:

    தமிழ்நாடு மின்சார வாரியத்தில், இதுவரை மின்வாரிய பொறியாளா்கள், அலுவலா்கள், பணியாளா்கள் இடமாறுதலை வாரிய அதிகாரிகளே மேற்கொண்டு வந்தனா். இந்த நடவடிக்கை தற்போது அரசிடம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், மின்வாரியத்தினருக்கான பல்வேறு கடன் சலுகைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. துணை மின்நிலையங்கள் மற்றும் மின்வாரியப் பணிகளில் சிலவற்றை தனியாருக்கு வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அகவிலைப்படி உயா்வு வழங்கடாத நிலை உள்ளது.

    இவ்வாறான நடவடிக்கைகளுக்கு எதிா்ப்பு தெரிவித்தும், மின் ஊழியா்களுக்கு எதிரான அரசாணைகளை திரும்பப் பெற வலியுறுத்தியும் மாநிலம் தழுவிய அளவில் நேற்று காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. நாமக்கல் மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்தில், நாமக்கல் மின்பகிா்மான வட்ட மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் உயா்மட்ட நிா்வாகிகள் கே.ஆனந்த்பாபு, டி.எஸ்.கந்தசாமி, கோவிந்தராஜ், முத்துசாமி, சிட்டுசாமி, முருகானந்தம் உள்ளிட்டோா் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா். மின்வாரிய ஊழியா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டு பல்வேறு முழக்கங்களை எழுப்பினா்.

    ×