search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உமா சங்கர்"

    சங்கீத வித்வான் மீது ட்விட்டரில் பாலியல் புகார் கூறியுள்ள தொலைக்காட்சி பெண் தொகுப்பாளர் ஸ்ரீரஞ்சனிக்கு மிரட்டல் வருவதாக கூறியுள்ளார். #MeToo #TimesUp #SriRanjani
    சர்வதேச அளவில் பிரபலமான ‘மீ டூ’ இயக்கத்தை தமிழகத்தில் பாடகி சின்மயி தொடங்கிவைத்தார். அவர் வைரமுத்து மீது புகார் செய்ததால் மீ டூ இயக்கம் பிரபலமானது. தொடர்ந்து நடிகைகள், பாடகிகள், டிவி பெண் தொகுப்பாளர்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்களை பகிர்ந்து வருகிறார்கள்.

    வில்லன் நடிகர் ஜான் விஜய் மீதும், கடம் வித்வான் உமா சங்கர் மீதும் டிவி பெண் தொகுப்பாளர் ஸ்ரீ ரஞ்சனி புகார் கூறினார். ஒரு பேட்டிக்காக அணுகியபோது சில நாட்கள் கழித்து நள்ளிரவில் போன் செய்து ஆபாசமாக பேசினார் என்று குற்றம் சாட்டினார்.

    ஜான் விஜய்யிடம் இது குறித்து கேட்டபோது ’சாக்கடையில் கல் வீசினால் நம் மீது தெறிக்கும் என்று சொல்வார்கள். இந்த வி‌ஷயம் குறித்துப் பேசுவதையும் சாக்கடையில் கல் வீசுவதற்கு நிகரானதாகவே நினைக்கிறேன்’ என கூறினார். அதேநேரம் ஜான் விஜய்யின் மனைவி தன் கணவரின் செயலுக்காக தன்னிடம் மன்னிப்புக் கேட்டதாக ஸ்ரீரஞ்சனி கூறினார்.

    ஸ்ரீ ரஞ்சனி அளித்த பேட்டியில் ‘ஒரே ஒரு முறை நள்ளிரவில் என்னிடம் போனில் பேசிய ஜான் விஜய் அப்போதுதான் அத்துமீறி பேசினார். அது பற்றிதான் நான் டுவீட் செய்திருந்தேன்.



    என்னோட டுவிட்டை பார்த்து விட்டு ஜான் விஜய் மனைவி என்னிடம் பேசி அந்த சம்பவம் குறித்துக் கேட்டார். நானும் சொன்னேன். கடைசியில் ‘அவர் செய்த தவறுக்கு நான் மன்னிப்பு கேட்கிறேன்’ என்று சொல்லி போனை வைத்துவிட்டார். ஜான் விஜய் மனைவி தொடர்பு கொண்ட செயலை நான் பாராட்டுகிறேன்.

    அதேநேரம் ‘உமா சங்கர்’ தரப்பில் எனக்கு தெரிந்த சிலரை அணுகி, ‘ஸ்ரீரஞ்சனியிடம் பேசி, அந்த டுவிட்டை நீக்கச் சொல்லுங்கள் என்று பேசியிருக்கிறார்கள். என் நண்பர்கள் ‘இந்த வி‌ஷயத்தில் தலையிட விரும்பவில்லை என்று சொல்லிவிட்டார்கள். ஆனாலும் தொடர்ந்து மிரட்டல் வருவது போல் தெரிகிறது. எனக்கு நடந்தது இந்த இரண்டு சம்பவங்கள்தான். இனி என்னிடம் இருந்து எந்த டுவிட்டும் வராது’ என்று கூறி இருக்கிறார். #MeToo #TimesUp #SriRanjani

    உத்தரபிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் எம்.எல்.ஏ. உமா சங்கர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். #BSPMLA #UmaShankar
    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலத்தில் பாலியா தொகுதியில் இருந்து பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் உமா சங்கர். இவர் தலைநகர் லக்னோவில் பத்திரிகையாளர்களை நேற்று சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    கடந்த 8-ந்தேதி இ.மெயிலுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராகிம் புகைப்படம் இருந்தது. அதோடு “நீங்கள் பாலியா தொகுதி மக்களுக்காக உழைக்கிறீர்கள். நீங்கள் அதை தொடர விரும்பினால் எங்களுக்கு ரூ.1 கோடி தர வேண்டும். இல்லையென்றால் ஒரே ஒரு துப்பாக்கி குண்டு உங்களுக்கு போதும். எந்த நேரத்திலும் உங்களை கொலை செய்வோம்” என்ற வாசகமும் இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விவகாரம் தொடர்பாக உமா சங்கர் ஏற்கனவே போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #BSPMLA #UmaShankar #Tamilnews 
    ×