search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உடலை வாங்க மறுப்பு"

    • நேற்று சோபிகா தனது கணவர் வீட்டில் உள்ள மின்விசிறி கொக்கியில் சேலை கட்டப்பட்டு கழுத்து இறுகிய நிலையில் பிணமாக தொங்கினார்.
    • சோபிகாவின் சாவில் சந்தேகம் உள்ளதாக கூறி இன்று காலை பெற்றோர் கவிதா- முருகேசன் மற்றும் உறவினர்கள் சோபிகா உடலை வாங்க மறுத்து அரசு ஆஸ்பத்திரியில் கதறி அழுதனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் பேரூராட்சி 14-வது வார்டு சுகந்தம் நகர் பகுதியை சேர்ந்தவர் அஜித் (வயது 25). இவர் அதே பகுதியை சேர்ந்த சோபிகா (17) என்பவரை காதலித்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

    இந்த நிலையில் நேற்று சோபிகா தனது கணவர் வீட்டில் உள்ள மின்விசிறி கொக்கியில் சேலை கட்டப்பட்டு கழுத்து இறுகிய நிலையில் பிணமாக தொங்கினார்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் ஓமலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோபிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த நிலையில் சோபிகாவின் சாவில் சந்தேகம் உள்ளதாக கூறி இன்று காலை பெற்றோர் கவிதா- முருகேசன் மற்றும் உறவினர்கள் சோபிகா உடலை வாங்க மறுத்து அரசு ஆஸ்பத்திரியில் கதறி அழுதனர்.

    பின்னர் ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே வந்த அவர்கள் கலெக்டர் அலுவலக வளாக பிரதான நுழைவு வாயில் முன்பு அமர்ந்து சோபிகாவின் கணவர் அஜித் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி அழுது புரண்டு போராட்டம் நடத்தினர்.

    இதனால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது. பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சோபிகாவின் பெற்றோர் கவிதா-முருகேசன் தம்பதி கண்ணீர் மல்க போலீசாரிடம் கூறியதாவது:-

    எங்களது மகளுக்கு 17 வயது தான் ஆகிறது. இதனால் திருமணத்திற்கு முன்பு நாங்கள் அஜித்க்கு திருமணம் ெசய்து கொடுக்க மறுப்பு தெரிவித்து தர்மபுரியில் உள்ள உறவினர் ஒருவடைய வீட்டில் சோபிகாவை மறைத்து வைத்தோம். இதை அறிந்த அஜித் அங்கு வந்து சோபிகாவை கட்டாயப்படுத்தி அவரை அழைத்து சென்று திருமணம் செய்து கொண்டார்.

    திருமணத்திற்கு பிறகு அஜித் அடிக்கடி சோபிகாவிடம் பணம் கேட்டு தொல்லை கொடுத்து வந்தார். நேற்று அஜித் சோபிகாவிடம் ரூ.10 ஆயிரம் பெற்றோரிடம் இருந்து வாங்கி வருமாறு கூறினார். ஆனால் எங்களின் குடும்ப கஷ்டத்தை பார்த்து மகள் பணம் வாங்கி கொடுக்கவில்லை. இதனால் அஜித் அவரை திட்டியுள்ளார்.

    சோபிகா தற்கொலை செய்யவில்லை. அவரது கழுத்தில் கயிறு போட்டு இறுக்கப்பட்டுள்ளது. கழுத்தில் காயம் உள்ளது. எனவே மகளின் சாவில் சந்தேகம் இருக்கிறது. அஜித் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் சோபிகா உடலை வாங்க மாட்டோம். இவ்வாறு பெற்றோர் கூறினர்.

    இது தொடர்பாக போலீசாா் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுப்பெண் திருமணம் ஆகி 4 மாதங்களிலேயே மர்மமான முறையில் இறந்து விட்டதால் மேட்டூர் உதவி கலெக்டர் தணிகாசலமும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்.

    • அருள் கரும்பு வெட்டும் கூலித் தொழிலாளி.
    • வீட்டிற்கு போன் மூலம் ஏஜென்ட் தகவல் கொடுத்துள்ளார்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பேரூராட்சிக்குட்பட்ட கலைஞர் நகரை சேர்ந்தவர் அருள் (வயது 50). இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். இவர் கரும்பு வெட்டும் கூலித் தொழிலாளி. இப்பகுதியில் வேலை இல்லாத நாட்களில் ஆந்திரா, கர்நாடகா, தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு ஏஜெண்ட் மூலம் சென்று கரும்பு வெட்டும் பணி செய்து வந்தார். அதன்படி கடந்த 2 மாதங்ளுக்கு முன்பு அருள் மற்றும் அவருடன் 10 பேர் மரக்காணத்திலிருந்து கருப்பு வெட்டும் கூலி வேலைக்கு கர்நாடகா மாநிலத்திற்கு சென்றனர். இவர்கள் இரண்டு மாதமாக அங்கேயே தங்கி கரும்பு வெட்டும் வேலை செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று இரவு 8 மணிக்கு அருளுக்கு உடல் நிலை சரி இல்லை என்றும் இதனால் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளோம் என அவரது வீட்டிற்கு போன் மூலம் ஏஜென்ட் தகவல் கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து இன்று காலை 5 மணிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அருளின் உடலை அவரது வீட்டிற்கு எடுத்து வந்துள்ளனர். உடல்நிலை சரியில்லை என்று தகவல் வந்த நிலையில் திடீரென அருளின் பிரேதத்தை கண்ட அவரது உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.


    மேலும், உறவினர்கள் அருளின் இறப்பில் மர்மம் உள்ளது. இதனால் நாங்கள் உடலை வாங்க மாட்டோம் இவரை கர்நாடக மாநிலத்திற்கு வேலைக்கு அழைத்துச் சென்ற ஏஜெண்ட் மற்றும் வேலை வாங்கிய உரிமையாளர் இங்கு வரவேண்டும் என்று கூறி உடலை வாங்க மறுப்பு தெரிவித்து வருகின்றனர். பிரேதத்தை கொண்டு வந்த ஆம்புலன்சையும் சிறை பிடித்து வைத்துள்ளனர். இதுகுறித்து அருளின் உறவினர்கள் மரக்காணம் போலீஸ் நிலையம், மரக்காணம் வருவாய்த்துறை அலுவலர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • கள்ளக்குறிச்சியில் மாணவியின் உடலை வாங்க மறுத்து 3-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
    • சாலை மறியல் போராட்டத்தால் அரை மணி நேரம்போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகில் உள்ள பெரியநெசலூர் கிராம த்தைசேர்ந்த ராமலிங்கம் மகள் ஸ்ரீமதி (16), இவர்க ள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கணியாமூரில் உள்ள ஒருதனியார் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்தார்.

    நேற்று முன்தினம் அதிகாலை மாணவி ஸ்ரீமதி விடுதியின் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைசெய்து கொ ண்டதாக கூறப்படுகிறது. இறந்த மாணவியின் உடல் மருத்துவ பரிசோ தனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

    இந்நி லையில் மாணவியின் பெற்றோர்கள் தனது மகள் சாவில் சந்தேகம் உள்ளதாக கூறி நேற்று முன்தினம் தனியார் பள்ளி எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் விதமாக மறியலில் ஈடுபட்டதால் போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

    இந்நிலையில் நேற்று இறந்துபோன மாணவி விருத்தாசலம் தொகுதிக்குஉட்பட்டவர் என்பதால் தகவல் அறிந்ததும் விருத்தாசலம் எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவர் இளையராஜா மற்றும் நிர்வாகிகள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று மாணவியின் பெற்றோ ர்களுக்கு ஆறுதல் கூறினர். அதனை தொடர்ந்து எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதரை நேரில் சந்தித்து தனியார் பள்ளியில் மர்மமான உயிரிழந்த மாணவியின் இறப்புக்கு நியாயமானமுறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தார். மனுவை பெற்று க்கொண்ட மாவட்ட கலெக்டர் பிரேத பரிசோதனை முடிவை பொறுத்து உரிய முறையில் நடவடிக்கை எடுப்பதாகஉறுதியளித்தார்.

    இந்நிலையில் மாணவியின் இறப்பில் சந்தேகம் உள்ளது என கூறிபள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சடலத்தை வாங்க மறுத்து மாணவியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அந்த பகுதியி ல்பரபரப்பு ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜலட்சுமி மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதானம் செய்து உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

    அதனை ஏற்றுக்கொண்டு சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் அரை மணி நேரம்போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்க ப்பட்டிருந்த மாணவியின் உடல் நேற்று மாலை பிரேத பரிசோதனை நிறை வடைந்தது. இருப்பினும் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பிரேத பரிசோதனை முடிவு தெரியும் வரை மாணவியின் உடலை வாங்கமாட்டோம் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் கள்ளக்குறிச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    ×