search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இன்று விசாரணை"

    காஷ்மீர் மக்களுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கும் சட்டத்திற்கு எதிரான பொதுநல வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ள நிலையில், ஜம்மு காஷ்மீரில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. #SC #Article35A
    ஜம்மு:

    ஜம்மு காஷ்மீர் மாநில மக்களுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கும் சட்டப்பிரிவு 35ஏ செல்லாது என அறிவிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின்படி காஷ்மீர் மக்கள் நிரந்தர குடிமக்கள் அந்தஸ்தை பெறுவதுடன், வெளிமாநில மக்கள் யாரும் இங்கு அசையா சொத்துக்களை வாங்க முடியாது. மாநிலத்தின் நிரந்தர குடிமக்களை வரையறுத்து, அவர்களுக்கு சிறப்பு உரிமைகளை வழங்குவது தொடர்பாக மாநில சட்டமன்றம் எந்தவொரு சட்டத்தையும் இயற்றிக்கொள்ள இந்த 35ஏ சட்டப்பிரிவு அதிகாரம் அளிக்கிறது.

    பிற மாநில மக்கள் இங்கு சொத்து வாங்க முடியாது என்று தடை விதிப்பது நாட்டின் ஒருமைப்பாட்டை பாதிப்பதாக பொதுநல மனுவில் கூறப்பட்டுள்ளது.

    மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வருகிறது. இன்றைய விசாரணையின்போது உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த வழக்கிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சிறப்பு சலுகைகள் வழங்கும் சட்டப்பிரிவுக்கு ஆதரவாகவும் காஷ்மீரில் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் சார்பில் கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி நேற்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இன்றும் போராட்டம் தொடர்கிறது.

    இதனால் ஸ்ரீநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஏராளமான பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அமர்நாத் யாத்ரீகர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜம்முவின் பகவதிநகர் முகாமில் இருந்து யாத்ரீகர்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

    இன்றைய விசாரணையின்போது 35ஏ சட்டப்பிரிவை உச்ச நீதிமன்றம் நீக்குவது தொடர்பாக உத்தரவு ஏதேனும் பிறப்பித்தால் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட பிரிவினைவாத அமைப்புகள் முடிவு செய்துள்ளன. #SC #Article35A
    ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் குறித்து விசாரணை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நீதிபதிகள் முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது. #SterlitePlant #NGT
    புதுடெல்லி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டம் மற்றும் துப்பாக்கிச்சூடு சம்பவங்களை தொடர்ந்து அந்த ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் வழக்கு தொடர்ந்துள்ளது.



    அந்த மனுவில், ‘ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு சட்டத்துக்கு புறம்பானது. ஆலை நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்க போதிய வாய்ப்பு அளிக்கப்படவில்லை. திடீரென்று ஆலை மூடப்பட்டதால் அங்கு பணியாற்றி வந்த தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாத வகையில் ஆலை இயக்கப்பட்டு வந்தது’ என்று கூறப்பட்டுள்ளது.

    மேலும் இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு வரும்வரை, ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள இடைக்கால அனுமதி வழங்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    இந்த மனு மீதான விசாரணை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நீதிபதிகள் ஜவாத் ரஹீம், ரகுவேந்திர எஸ்.ரத்தோர், சத்யவான் சிங் கர்ப்யால் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வருகிறது. #SterlitePlant #NGT #Tamilnews 
    அரசு செலவில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கின் மீதான விசாரணை ஐகோர்ட்டில் இன்று நடைபெறவுள்ளது. #Jayalalitha #Memorial
    சென்னை:

    ஐகோர்ட்டில், டிராபிக் ராமசாமி தொடர்ந்துள்ள பொதுநல மனுவில், ‘மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் அரசு செலவில் நினைவிடம் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த 6-ந் தேதி நடந்தது. இதில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஒருவருக்கு அரசு செலவில் நினைவிடம் கட்டுவது சட்டவிரோதமாகும். எனவே, இதற்கு தடை விதிக்க வேண்டும்‘ என்று கூறியுள்ளார்.



    மேலும் அந்த மனுவில், ‘அடிக்கல் நாட்டு விழாவுக்காக மெரினா கடற்கரை, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக பேனர்கள் அவைக்கப்பட்டிருந்தது. இதை அகற்ற சென்ற என்னை அ.தி.மு.க.வினர் கடுமையாக தாக்கினார்கள். அப்போது தாக்குதலை தடுக்காமல், திருவல்லிக்கேணி உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்டோர் வேடிக்கை பார்த்தனர். இவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்‘ என்றும் கூறியிருந்தார். இந்த வழக்கு விடுமுறை கால நீதிபதிகள் முன்பு இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு வர உள்ளது. #Jayalalitha #Memorial 
    ×