search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்திய வீரர் உயிரிழப்பு"

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்ட எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் இன்று அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர் உயிரிழந்தார். #Soldierkilled #Pakistanarmy #ceasefire #Rajouriceasefire
    ஜம்மு:

    போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது துப்பாக்கிகளால் சுட்டும், மோர்ட்டார் குண்டுகளை வீசியும் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்த தாக்குதல்களில் இந்திய ராணுவத்தை சேர்ந்த வீரர்கள் உயிரிழப்பதுடன் எல்லையோர கிராமங்களில் வாழும் இந்திய மக்களும் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

    அவ்வகையில், கடந்த 15 ஆண்டுகால வரலாற்றில் மிக அதிகமான அளவில் கடந்த 2018-ம் ஆண்டில் மட்டும் பாகிஸ்தான் படைகள் 2936 முறை எல்லையோரத்தில் உள்ள இந்திய நிலைகளின்மீது அதிரடியாக தாக்குதல் நடத்தியுள்ளது.



    ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்ட எல்லைப்பகுதியில் கடந்த திங்கட்கிழமை பாகிஸ்தான் ராணுவம்  துப்பாக்கிகளால் சுட்டும், மோர்ட்டார் குண்டுகளை வீசியும் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் கொல்லப்பட்டார்.

    இந்நிலையில், இன்றும் இதே ரஜோரி மாவட்ட எல்லைப்பகுதியில் உள்ள சுந்தர்பானி செக்டார் பகுதியில் உள்ள கெரி என்ற இடத்தில் உள்ள இந்திய நிலைகளின்மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒரு இந்திய வீரர் உயிரிழந்தார்.

    இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து இன்றுவரை பாகிஸ்தான் ராணுவம் 110 முறை இந்திய நிலைகளின்மீது தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. #Soldierkilled #Pakistanarmy #ceasefire #Rajouriceasefire
    காஷ்மீரில் உள்ள எல்லைப்பகுதியில் இன்று பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய எல்லை பாதுகாப்பு படை உதவி ‘கமான்டன்ட்’ வினய் பிரசாத் வீர மரணமடைந்தார். #Pakistanviolates #ceasefire #jawankilled #Hiranagarsector
    ஜம்மு: 
     
    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள இந்திய எல்லைக்கோட்டுப் பகுதிகளில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அவ்வப்போது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்திய வீரர்களும் உரிய பதிலடி தந்து வருகின்றனர்.

    அவ்வகையில், கத்துவா மாவட்டத்தில் உள்ள ஹிராநகர் செக்டர் எல்லைக்கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் படைகள் இன்று நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய எல்லைப் பாதுகாப்பு படையை சேர்ந்த ‘கமான்டன்ட்’ வினய் பிரசாத் வீர மரணமடைந்தார். #Pakistanviolates #ceasefire #jawankilled # Hiranagarsector
    காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்டத்தில் உள்ள எல்லைக்கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் இன்று அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர் உயிரிழந்தார். #Porterkilled #ceasefire #Pakistanisniper
    ஜம்மு:

    காஷ்மீர் மாநிலத்தின் ரஜோரி மாவட்டத்தில் நவ்ஷேரா செக்டர் பகுதியில் உள்ள கலால் என்னுமிடத்தில் உள்ள இந்திய கண்காணிப்பு கோபுரங்கள் மீது இன்று பாகிஸ்தான் படையினர் துப்பாக்கிளால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.

    இந்திய படையினரும் ஆவேசமாக பதில்  தாக்குதலில் ஈடுபட்டனர். இருதரப்பினருக்கும் இடையில் சில நிமிடங்கள் நீடித்த துப்பாக்கிச் சண்டையில் இந்திய ராணுவ வீரர் கோசாவி கேஷவ் சோம்கீர்
    உயிரிழந்தார்.

    முன்னதாக, இதே ரஜோரி மாவட்டத்தில் உள்ள சுந்தர்பானி எல்லைக்கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் படையினர் நேற்று நடத்திய தாக்குதலில் வருண் கட்டால் என்ற இந்திய வீரர் உயிரிழந்தார்.

    நேற்று முன்தினம் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஜம்மு மாவட்டத்தில் உள்ள பர்க்வால் எல்லைக்கோட்டுப் பகுதியில் இந்திய ராணுவ வீரர்களுக்கு தேவையான பொருட்களை கொண்டுசென்று சேர்க்கும் போர்ட்டராக பணியாற்றிய  தீபக் குமார் உயிரிழந்தார் என்பது நினைவிருக்கலாம். #Porterkilled #ceasefire #Pakistanisniper
    ஜம்மு காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். #PakistanViolatesTruce #JKAttack
    ஜம்மு:

    காஷ்மீர் எல்லையில், எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு அப்பால் இருந்து பாகிஸ்தான் படையினர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அவ்வப்போது தாக்குதல் நடத்துகின்றனர். இந்திய நிலைகளை குறிவைத்து அவர்கள் தாக்கும்போது, இந்திய ராணுவமும் பதில் தாக்குதல் நடத்துகிறது.

    அவ்வகையில், மீண்டும் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய பாகிஸ்தான் ராணுவம், சுந்தர்பானி செக்டார் கோவூர் பகுதியில் இன்று காலை துப்பாக்கி சூடு நடத்தியது. இந்த தாக்குதலில் இந்திய ராணுவம் தரப்பில் வருண் என்ற வீரர் உயிரிழந்தார்.



    இதேபோல், நேற்று அக்னுர் பகுதியில் நடந்த தாக்குதலில் ஒரு வீரர் உயிரிழந்தார். பிப்மர் காலி பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் எல்லைப் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது. #PakistanViolatesTruce #JKAttack

    ×