search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இசட் பிளஸ் பாதுகாப்பு"

    • கார்கே உயிருக்கு ஆபத்து இருப்பதாக மத்திய உளவுத்துறை தகவல் அளித்துள்ளது.
    • இதனால் அவருக்கு மத்திய அரசு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்குவதாக அறிவித்தது.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவி வகித்து வருபவர் மல்லிகார்ஜூன கார்கே.

    இந்நிலையில், கார்கேவின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மத்திய உளவுத்துறை தகவல் அளித்ததையடுத்து, மத்திய அரசு அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க உள்ளதாக தகவல் வெளியானது.

    அதன்படி, இனி 40 முதல் 50 கமாண்டோ படை வீரர்கள் கார்கேவை பாதுகாக்கும் பணியில் ஈடுபடுவார்கள்.

    இசட் பிளஸ் என்பது மிக உச்சபட்ச பாதுகாப்பு பிரிவாகும். நாட்டின் மிக முக்கியமான நபர்களுக்கே இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

    • பகவந்த் மானுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து அச்சுறுத்தல்கள் வரும் நிலையில் பாதுகாப்பு.
    • மாநில போலீசாரின் பாதுகாப்பே போதுமானது என அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    பஞ்சாபில் முதல்வர் பகவந்த் மான் சிங் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பகவந்த் மானுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து அச்சுறுத்தல்கள் வரும் என்பதால் மத்திய அரசு சி.ஆர்.பி.எப் படையின் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கியது.

    சி.ஆர்.பி.எப். படையின் இசட் பிளஸ் பாதுகாப்பை உள்துறை அமைச்சகம் ஒதுக்கிய நிலையில், பகவந்த் மான் சிங் அதனை ஏற்க மறுத்துள்ளார்.

    இதுதொடர்பாக பகவந்த் மான் மத்திய அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், மத்திய அமைச்சகத்தின் சிஆர்பிஎப் படையின் இசட் பிளஸ் பாதுகாப்பு எனக்கு வேண்டாம் என்றும், மாநில போலீசாரின் பாதுகாப்பே போதுமானது எனவும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    • மகாராஷ்டிர அரசு மற்றும் உள்துறை அமைச்சகத்திற்கு அறிவுறுத்தல்களையும் சுப்ரீம் கோர்ட்டு வழங்கி உள்ளது.
    • இசட் பிளஸ் பாதுகாப்புக்கு ஆகும் செலவை முகேஷ் அம்பானியின் குடும்பத்தினரிடமே வசூலிக்கவும் உத்தரவிட்டு உள்ளது.

    புதுடெல்லி:

    நாட்டில் மிகவும் பிரபலமானவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு மத்திய அரசு பாதுகாப்பு கொடுத்து வருகிறது.

    உளவுத்துறை கொடுக்கும் தகவலின் அடிப்படையில் வி.ஐ.பி.கள், வி.வி.ஐ.பி.கள், விளையாட்டு துறை, பொழுது போக்குதுறை பிரபலங்கள் அரசியல்வாதிகளுக்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் உலக பணக்காரர்களில் ஒருவரான இந்தியாவை சேர்ந்த பிரபல தொழில் அதிபரும், ரிலையன்ஸ் குழும தலைவருமான முகேஷ் அம்பானி தரப்பில் தனது குடும்பத்தினருக்கு தொடர் அச்சுறுத்தல் இருப்பதாகவும், நாட்டுக்கு நிதி ரீதியாக சீர்குலைப்பு ஏற்படுத்தும் விதமாக தங்களுக்கு தொடர் ஆபத்துகள் இருப்பதால் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் கோரிக்கை மனு வைக்கப்பட்டது.

    மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருஷ்ணா முராரி, அசானுதின் அமனுல்லா ஆகியோர் அமர்வு முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தாருக்கு உள்நாட்டிலும், வெளிநாட்டுக்கு பயணம் செய்யும்போதும் இசட் பிளஸ் பாதுகாப்பை வழங்க உத்தரவிட்டுள்ளது.

    இது தொடர்பாக மகாராஷ்டிர அரசு மற்றும் உள்துறை அமைச்சகத்திற்கு அறிவுறுத்தல்களையும் சுப்ரீம் கோர்ட்டு வழங்கி உள்ளது.

    அதில், அச்சுறுத்தல்கள் இருப்பதாக உணர்ந்தால் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். அதற்கான செலவை அவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும், பாதுகாப்பு குறைவாக இருப்பதாக உணர்பவர்களை எந்த ஒரு இடத்திலும், பகுதியில் தங்க வைக்க வேண்டும் என கட்டுப்படுத்த கூடாது என கூறப்பட்டுள்ளது.

    55 பாதுகாவலர்கள், 10-க்கும் மேற்பட்ட தேசிய பாதுகாப்பு படை கமாண்டோக்கள் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என உத்தரவில் கூறப்பட்டு உள்ளது. இசட் பிளஸ் பாதுகாப்புக்கு ஆகும் செலவை முகேஷ் அம்பானியின் குடும்பத்தினரிடமே வசூலிக்கவும் உத்தரவிட்டு உள்ளது.

    • கவர்னர் ஆனந்த போசுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
    • இசட் பிளஸ் பாதுகாப்பு பெறுபவர்களுக்கு 40 கமாண்டோ வீரர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு அளிப்பார்கள்.

    மேற்கு வங்காளத்தில் கவர்னராக இருப்பவர் சி.வி.ஆனந்த போஸ். இவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக மத்திய உளவுத்துறை, உள்துறை அமைச்சகத்துக்கு தகவல் தெரிவித்தது. இதையடுத்து கவர்னர் ஆனந்த போசுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

    இசட் பிளஸ் பாதுகாப்பு பெறுபவர்களுக்கு 40 கமாண்டோ வீரர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு அளிப்பார்கள். தற்போது மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பில் இருக்கும் ஆனந்த போஸ் உயர்மட்ட பாதுகாப்பு பிரிவுக்கு செல்கிறார்.

    ×