என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Z Plus Security"

    • கவர்னர் ஆனந்த போசுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
    • இசட் பிளஸ் பாதுகாப்பு பெறுபவர்களுக்கு 40 கமாண்டோ வீரர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு அளிப்பார்கள்.

    மேற்கு வங்காளத்தில் கவர்னராக இருப்பவர் சி.வி.ஆனந்த போஸ். இவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக மத்திய உளவுத்துறை, உள்துறை அமைச்சகத்துக்கு தகவல் தெரிவித்தது. இதையடுத்து கவர்னர் ஆனந்த போசுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

    இசட் பிளஸ் பாதுகாப்பு பெறுபவர்களுக்கு 40 கமாண்டோ வீரர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு அளிப்பார்கள். தற்போது மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பில் இருக்கும் ஆனந்த போஸ் உயர்மட்ட பாதுகாப்பு பிரிவுக்கு செல்கிறார்.

    • கார்கே உயிருக்கு ஆபத்து இருப்பதாக மத்திய உளவுத்துறை தகவல் அளித்துள்ளது.
    • இதனால் அவருக்கு மத்திய அரசு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்குவதாக அறிவித்தது.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவி வகித்து வருபவர் மல்லிகார்ஜூன கார்கே.

    இந்நிலையில், கார்கேவின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மத்திய உளவுத்துறை தகவல் அளித்ததையடுத்து, மத்திய அரசு அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க உள்ளதாக தகவல் வெளியானது.

    அதன்படி, இனி 40 முதல் 50 கமாண்டோ படை வீரர்கள் கார்கேவை பாதுகாக்கும் பணியில் ஈடுபடுவார்கள்.

    இசட் பிளஸ் என்பது மிக உச்சபட்ச பாதுகாப்பு பிரிவாகும். நாட்டின் மிக முக்கியமான நபர்களுக்கே இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

    • தலாய் லாமாவுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது.
    • அவரது பாதுகாப்புப் பணியில் 35 கமாண்டோக்கள் ஈடுபடுத்தப்படுவர்.

    புதுடெல்லி:

    இந்தியாவில் உள்ள திபெத்தைச் சேர்ந்தவர் புத்த மதத் துறவி தலாய் லாமா. இவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத் துறை தகவல் தெரிவித்தது. இதையடுத்து அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    இந்நிலையில், தலாய் லாமாவுக்கு சி.ஆர்.பி.எப். படையினரால் கூடுதல் பாதுகாப்பு வழங்க முடிவெடுத்திருப்பதக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, தலாய் லாமாவுக்கான பாதுகாப்புப் பணியில் மத்திய ரிசர்வ் காவல் படையின் 35 முதல் 40 கமாண்டோக்கள் ஈடுபடுத்தப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கருணாநிதி இறந்து விட்டதால் இசட் பிளஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து தமிழ்நாட்டில் வேறு யாருக்கும் இப்போது இசட் பிளஸ் பாதுகாப்பு இல்லை. #DMK #Karunanidhi #Jayalalithaa #ZplusSecurity
    சென்னை:

    விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் காரணமாக முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கும், தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கும் ஏற்கனவே மத்திய அரசின் ‘இசட்பிளஸ்’ கமாண்டோ பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தது.

    கடந்த 2016-ம் ஆண்டு ஜெயலலிதா மரணம் அடைந்ததை தொடர்ந்து அவருக்கு வழங்கப்பட்டிருந்த ‘இசட்பிளஸ்’ பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது.

    தி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்த 7-ந்தேதி மரணம் அடைந்ததை தொடர்ந்து அவருக்கு வழங்கப்பட்டிருந்த இசட்பிளஸ் பாதுகாப்பு படையும் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் இப்போது யாருக்கும் ‘இசட்பிளஸ்’ பாதுகாப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    ஏற்கனவே ஜனதா கட்சித் தலைவராக இருந்த சுப்பிரமணியசாமிக்கு கடந்த 8 வருடங்களுக்கு முன்பே ‘இசட்பிளஸ்’ பாதுகாப்பு படை விலக்கிக் கொள்ளப்பட்டு மத்திய ரிசர்வ் போலீஸ் படை பாதுகாப்பு வழங்கப்பட்டது.

    இதே போல் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் சாதாரண கமாண்டோ படை பாதுகாப்புதான் உள்ளது.

    ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு யாருக்கு கொடுக்க வேண்டும் என்பதை மத்திய உளவுப்பிரிவு தக்க ஆதாரங்களை சேகரித்து, என்னென்ன அச்சுறுத்தல் உள்ளது என்பதை பட்டியலிட்டு, உள்துறை அமைச்சகத்துக்கு வழங்கும்.


    அதை மத்திய அரசு பரிசீலித்து தான் ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பை வழங்குகிறது.

    இந்த அடிப்படையில் தான் ஜெயலலிதாவுக்கு 91-ம் ஆண்டில் இருந்தும், கருணாநிதிக்கு 1997-ம் ஆண்டில் இருந்தும் ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தது. இருவரும் இறந்து விட்டதால் ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து தமிழ்நாட்டில் வேறு யாருக்கும் இப்போது ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இசட் பிளஸ் பாதுகாப்பு என்றால் தேசிய பாதுகாப்பு படையின் (என்.எஸ்.ஜி) கமாண்டோ வீரர்கள் 8 பேர் எந்திர துப்பாக்கியுடன் எப்போதும் உடன் வருவார்கள். 3 ஷிப்டாக பணியாற்றும் வகையில் குறைந்தது 24 பேர் இருப்பார்கள்.

    அந்த வகையில் ஜெயலலிதாவுக்கு 40 ‘இசட்பிளஸ்’ கமாண்டோ படையினரையும், கருணாநிதிக்கு 22 இசட்பிளஸ் கமாண்டோ படையினரையும் மத்திய அரசு ஒதுக்கி இருந்தது. அது முடிவுக்கு வந்து விட்டது. இப்போது உள்ள அரசியல் தலைவர்களான எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம், மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு ரிசர்வ் போலீஸ் படை பாதுகாப்பு தான் உள்ளது. #DMK #Karunanidhi #Jayalalithaa #ZplusSecurity
    ×