search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆருத்ரா கோல்டு நிறுவனம்"

    • ஆர்.கே.சுரேஷ் நேற்று முன்தினம் துபாயில் இருந்து சென்னை திரும்பினார்.
    • மோசடி விவகாரம் தொடர்பாக சரமாரி கேள்விகளை கேட்டு போலீசார் ஆர்.கே.சுரேசை துளைத்தெடுத்தனர்.

    சென்னை:

    சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட ஆருத்ரா நிதி நிறுவனம் பொதுமக்களிடம் அதிக வட்டி தருவதாக கூறி ஏமாற்றி பண வசூலில் ஈடுபட்டது. 1 லட்சம் பேரிடம் ரூ.2,400 கோடி அளவுக்கு ஆருத்ரா நிறுவனம் மோசடியில் ஈடுபட்டிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.

    இந்த வழக்கில் சிக்கிய ஒருவரிடம் நடிகர் ஆர்.கே.சுரேஷ் பணம் பெற்றிருப்பதாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. இதை தொடர்ந்து ஆர்.கே.சுரேசிடம் விசாரணை நடத்துவதற்காக போலீசார் அவருக்கு சம்மன் அனுப்பினார்கள்.

    ஆனால் ஆர்.கே.சுரேஷ் துபாயில் தலைமறைவானார். இதையடுத்து அவருக்கு எதிராக அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் லுக் அவுட் நோட்டீசை பிறப்பித்தனர்.

    இது தொடர்பான வழக்கு விசாரணை கடந்த சில நாட்களுக்கு முன்பு கோர்ட்டில் நடைபெற்றபோது, ஆர்.கே.சுரேஷ் தரப்பில் வாதிடப்பட்டது. அப்போது லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் ஆர்.கே.சுரேசை கைது செய்யும் சூழல் உள்ளது. ஆனால் அவர் விரைவில் சென்னை திரும்பி போலீஸ் விசாரணைக்கு ஆஜராக உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.

    இதன்படி ஆர்.கே.சுரேஷ் நேற்று முன்தினம் துபாயில் இருந்து சென்னை திரும்பினார். இந்த நிலையில் அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் அவர் ஆஜரானார். ஆர்.கே.சுரேசிடம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    மோசடி விவகாரம் தொடர்பாக சரமாரி கேள்விகளை கேட்டு போலீசார் ஆர்.கே.சுரேசை துளைத்தெடுத்தனர். அப்போது அவர் தெரிவித்த தகவல்களை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்துள்ளனர்.

    இதன் அடிப்படையில் அடுத்த கட்ட விசாரணை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்.கே. சுரேஷ், பெரிய மீசை தாடியுடன் காணப்படுவார். பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் ஆஜராக வந்த அவர் மொட்டையடித்து லேசாக முடி வளர்த்த நிலையில் காணப்பட்டார்.

    • அதிக வட்டி தருவதாக ஆசை காட்டி ஏராளமானோரிடம் கோடிக்கணக்கில் வசூலித்த நிதி நிறுவன உரிமையாளர்கள் தலைமறைவாகி விட்டனர்.
    • மோசடியில் தொடர்புடைய ஆரூத்ரா அதிபர் ராஜசேகர் வெளிநாட்டுக்கு தப்பி சென்றிருந்தார்.

    சென்னை:

    சென்னை அமைந்தகரையை மையமாக கொண்டு செயல்பட்டு வந்த ஆரூத்ரா நிதி நிறுவனம் பொதுமக்களிடம் இருந்து அதிக அளவில் பணத்தை பெற்று மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    அதிக வட்டி தருவதாக ஆசை காட்டி ஏராளமானோரிடம் கோடிக்கணக்கில் வசூலித்த நிதி நிறுவன உரிமையாளர்கள் தலைமறைவாகி விட்டனர். இது தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடியின் பின்னணி குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். இந்த மோசடியில் தொடர்புடைய ஆரூத்ரா அதிபர் ராஜசேகர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றிருந்தார்.

    துபாயில் பதுங்கி இருக்கும் அவரை பிடிக்க போலீஸ் வியூகம் வகுத்திருந்தது. கடந்த 3 வருடமாக தேடப்பட்டு வந்த நிலையில் முக்கிய குற்றவாளியான ராஜசேகர் துபாயில் கைது செய்யப்பட்டு உள்ளார்.

    • விசாரணைக்கு ஆஜராகாமல் ஆர்.கே.சுரேஷ் துபாய்க்கு சென்றுவிட்டார்.
    • மனுதாரர் ஆர்.கே.சுரேஷ் வருகிற 12-ந்தேதி போலீஸ் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும்.

    சென்னை:

    வாடிக்கையாளர்களுக்கு அதிக வட்டி தருவதாக கூறி, ஏராளமானோரிடம் இருந்து, 2 ஆயிரத்து 438 கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்ததாக, ஆருத்ரா நிதி நிறுவனம் மற்றும் அதன் இயக்குனர்கள் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த மோசடி வழக்கில் நடிகர், தயாரிப்பாளர் மற்றும் பா.ஜனதா மாநில ஓ.பி.சி., பிரிவு துணைத்தலைவரான ஆர்.கே.சுரேசுக்கு தொடர்பு இருப்பதாக போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து, விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு சம்மன் அனுப்பினர்.

    ஆனால், விசாரணைக்கு ஆஜராகாமல் ஆர்.கே.சுரேஷ், துபாய்க்கு சென்றுவிட்டார். இதனால், அவரை தேடப்படும் நபராக அறிவித்து `லுக் அவுட்' நோட்டீசை போலீசார் பிறப்பித்தனர்.

    இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஆர்.கே.சுரேஷ் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது. ஆர்.கே.சுரேஷ் தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், வருகிற 10-ந்தேதி அவர் நாடு திரும்புவதாக கூறப்பட்டு இருந்தது.

    போலீஸ் தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வக்கீல் பாபு முத்து மீரான், "இந்த மோசடி வழக்கில் இருந்து குற்றவாளிகளை காப்பாற்றுவதாகவும், இதற்காக சில முக்கிய நபர்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று ரூசோ என்பவர் மூலம் ஆர்.கே.சுரேஷ் ரூ.12½ கோடியை பெற்றுள்ளார். இது போலீசாருக்கு தெரியவந்தவுடன் வெளிநாடு தப்பிச்சென்றுள்ளார்'' என்று கூறினார்.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுதாரர் ஆர்.கே.சுரேஷ் வருகிற 12-ந்தேதி போலீஸ் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும். ஒருவேளை ஆர்.கே.சுரேசை கைது செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால், இந்த ஐகோர்ட்டின் முன் அனுமதியை போலீசார் பெற வேண்டும். இந்த வழக்கு விசாரணையை 18-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறேன்'' என்று உத்தரவிட்டார்.

    • முதல் கட்டமாக ரூ.1 லட்சம் பணம் தருவதாக ஒப்புக்கொண்ட சரண்யா கடத்தல் கும்பல் கூறியபடி காஞ்சிபுரம் தனியார் ஆஸ்பத்திரி அருகே சென்று காத்திருந்தார்.
    • அதிர்ச்சி அடைந்த சரண்யா, கணவர் கடத்தப்பட்டது குறித்து கோயம்பேடு போலீசில் புகார் அளித்தார்.

    போரூர்:

    சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்ட ஆருத்ரா கோல்டு நிறுவனம், முதலீடுகளுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி எனக் கூறி சுமார் 1 லட்சம் முதலீட்டாளர்களிடம் இருந்து, ரூ.2,438 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இந்த வழக்கு தொடர்பாக மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி வழக்கில் அரியலூர், மாவட்டம் இரவான்குடியை சேர்ந்த செந்தில்குமார் (வயது37) என்பவரும் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    தற்போது ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில்குமார் கடந்த 2 மாதமாக கோயம்பேடு சேமாத்தம்மன் நகரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி சென்னை ஐகோர்ட்டில் தினசரி கையெழுத்திட்டு வருகிறார்.

    கடந்த 28-ந் தேதி வழக்கம்போல் ஐகோர்ட்டில் கையெழுத்துப் போட்டுவிட்டு செந்தில்குமார் சேமாத்தம்மன் நகரில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது காரில் வந்த மர்ம கும்பல் செந்தில்குமாரை கடத்தி சென்றனர். மேலும் செந்தில்குமாரின் மனைவி சரண்யாவை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய கடத்தல் கும்பல் "செந்தில்குமார் மூலம் ஆருத்ரா நிறுவனத்தில் ரூ.15 லட்சம் முதலீடு செய்து ஏமாற்றப்பட்டுள்ளோம், இதனால் செந்தில்குமாரை கடத்தி வைத்து உள்ளோம். உடனடியாக எங்களுக்கு இழப்பீடு தொகை வேண்டும்" என்று கூறி மிரட்டினர்.

    இதையடுத்து முதல் கட்டமாக ரூ.1 லட்சம் பணம் தருவதாக ஒப்புக்கொண்ட சரண்யா கடத்தல் கும்பல் கூறியபடி காஞ்சிபுரம் தனியார் ஆஸ்பத்திரி அருகே சென்று காத்திருந்தார்.

    ஆனால் நீண்ட நேரம் ஆகியும் கடத்தல் கும்பல் அங்கு வரவில்லை என்று தெரிகிறது. கணவர் செந்தில்குமாரின் செல்போனும் "சுவிட்ச் ஆப்" செய்யப்பட்டு இருந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சரண்யா, கணவர் கடத்தப்பட்டது குறித்து கோயம்பேடு போலீசில் புகார் அளித்தார்.

    உதவி கமிஷனர் ரமேஷ்பாபு, இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு கடத்தல் கும்பலை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதுவரை செந்தில் குமார் பற்றி எந்த தகவலும் போலீசாருக்கு தெரியவில்லை. அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவித்து அவரை மீட்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    ஆருத்ரா கோல்டில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் கடத்தலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • முக்கிய ஏஜெண்டுகளின் அசையா சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    • இயக்குனர்கள் முக்கிய ஏஜெண்டுகளின் வங்கி கணக்குகளில் இருந்து ரூ.96 கோடி முடக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    ஆருத்ரா நிதி நிறுவனம் அதிக வட்டி தருவதாக கூறி முதலீட்டாளர்களிடம் ரூ.2400 கோடி பணத்தை சுருட்டி உள்ளது. இந்த ஆருத்ரா பண மோசடி வழக்கில் அந்த நிறுவனத்தின் இயக்குனர் உள்பட 13 பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். மற்றொரு இயக்குனர் ராஜசேகர், அவரது மனைவி ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய நபர்களின் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை முடக்கி உள்ளது. முடக்கப்பட்ட சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளது. இதேபோல் மேலும் சில நிதி நிறுவன மோசடிகள் தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

    இந்நிலையில் நிதி நிறுவன மோசடி வழக்குகள் தொடர்பாக சென்னையில் இன்று பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி. ஆசையம்மாள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் இதுவரை ரூ.6.35 கோடி பணம், ரூ.1.13 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி பொருட்கள் மற்றும் 22 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

    நிறுவனங்கள், இயக்குனர்கள் முக்கிய ஏஜெண்டுகளின் வங்கி கணக்குகளில் இருந்து ரூ.96 கோடி முடக்கப்பட்டுள்ளது. நிறுவன இயக்குனர்கள், முக்கிய ஏஜெண்டுகளின் அசையா சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும். இவ்வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி ஆர்.கே.சுரேசுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

    ஹிஜாவு நிதி நிறுவன மோசடி வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் அலெக்சாண்டர் மீது ரெட் கார்னர் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்ட நபர்களுக்கு சொந்தமான 48 இடங்களில் சோதனை மேற்கொண்டு ரூ.3.34 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான 448 கிராம் தங்க நகைகள், ரூ.75 ஆயிரம் மதிப்பிலான வெள்ளிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. குற்றவாளிகளுக்கு சொந்தமான 162 வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.14.47 கோடி முடக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆருத்ரா மோசடி தொடர்பாக ரூ.100 கோடி மதிப்புள்ள வங்கி கணக்குகள் முடக்கப்பட்டிருப்பதாக தகவல்.
    • பொதுமக்களிடம் இருந்து முதலீடுகளை பெற்றுக்கொடுத்த ஏஜெண்டுகள் 256 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

    சென்னை:

    ஆருத்ரா நிதி நிறுவனம் அதிக வட்டி தருவதாக கூறி முதலீட்டாளர்களிடம் ரூ.2400 கோடி பணத்தை சுருட்டி உள்ளது. இந்த ஆருத்ரா பண மோசடி வழக்கில் அந்த நிறுவனத்தின் இயக்குனர் உள்பட 13 பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். மற்றொரு இயக்குனர் ராஜசேகர், அவரது மனைவி ஆகியோர் தலைமறைவாக உள்ளனர்.

    இந்த வழக்கில் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பொதுமக்களிடம் இருந்து முதலீடுகளை பெற்றுக்கொடுத்த ஏஜெண்டுகள் 256 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். விசாரணையின் முடிவில் சொத்து முடக்கம் மற்றும் கைது நடவடிக்கை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய நபர்களின் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை முடக்கி உள்ளது. முடக்கப்பட்ட சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் ரூ.100 கோடி மதிப்புள்ள வங்கி கணக்குகள் முடக்கப்பட்டிருப்பதாகவும், ரூ.6 கோடி பணம், 4 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர பல கோடி மதிப்பிலான 130 சொத்துக்களை கண்டுபிடித்திருப்பதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் தெரிவித்துள்ளது.

    இவை அனைத்தையும் முடக்கி அடுத்த 6 மாதத்திற்குள் பொதுமக்கள் இழந்த பணத்தை திருப்பி கொடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • ஆருத்ரா நிதி நிறுவனம் சுமார் 1 லட்சத்து 9255 பேரிடம் ரூ.2438 கோடியை சுருட்டியது.
    • ஆருத்ரா நிறுவனத்தின் சந்திரகாந்த் என்ற நிர்வாகியிடம் இருந்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    சென்னை:

    நிதிநிறுவனங்களில் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பொதுமக்கள் கோடிக்கணக்கில் முதலீடு செய்து ஏமாந்து வருவது வாடிக்கையாகி இருக்கிறது.

    அந்த வகையில் ஆருத்ரா நிதி நிறுவனம் சுமார் 1 லட்சத்து 9255 பேரிடம் ரூ.2438 கோடியை சுருட்டியது.

    இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மக்கள் அளித்த புகாரின் பேரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மோசடி தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

    இந்த நிலையில் ஆருத்ரா மோசடி வழக்கில் முக்கிய நிர்வாகியாக கருதப்படும் காஞ்சிபுரத்தை சேர்ந்த ராஜா செந்தாமரை அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். ராஜா செந்தாமரை முக்கியமான முகவராக செயல்பட்டு வந்துள்ளார். காஞ்சிபுரம் பகுதியில் 200-க்கும் மேற்பட்டவர்களிடம் ரூ.600 கோடி வரையில் அவர் வசூலித்து கொடுத்திருப்பது தெரிய வந்துள்ளது. கைதான அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இதற்கிடையே ஆருத்ரா நிறுவனத்தின் சந்திரகாந்த் என்ற நிர்வாகியிடம் இருந்து 90 மூட்டைகள் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    சந்திரகாந்தின் 3 கோடி ரூபாய் வங்கி கணக்கை முடக்கியதாகவும் அவரிடம் ஆருத்ரா நிறுவனத்தின் பண பரிவர்த்தனை குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • பாஜக நிர்வாகிகள் தங்கள் மீதான குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து விரிவான பதில் அளித்துள்ளனர்.
    • ஆருத்ரா நிதி நிறுவன வங்கிக் கணக்குகள் முழுவதையும் கையாண்டவர் மைக்கேல்ராஜ்.

    சென்னை:

    ஆருத்ரா நிதி நிறுவன மோசடி தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த வழக்கில் பாஜக பிரமுகர் உள்ளட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாஜக வழக்கறிஞர் பிரிவு வழக்கறிஞர் அலெக்ஸ், ராணிப்பேட்டை பாஜக மாவட்ட பொறுப்பில் உள்ள டாக்டர் சுதாகர் ஆகிய இருவரும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். அப்போது தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து விரிவான பதில் அளித்துள்ளனர்.

    இந்நிலையில், ஆருத்ரா நிதி நிறுவன இயக்குனர்களில் ஒருவரான மைக்கேல் ராஜ் அளித்த வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஆருத்ரா நிதி நிறுவன வங்கிக் கணக்குகள் முழுவதையும் கையாண்ட மைக்கேல்ராஜிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சுமார் ரூ.1,749 கோடி அளவுக்கு பணப்பரிவர்த்தனை செய்தது தெரியவந்துள்ளது. பரிவர்த்தனை செய்யப்பட்ட வங்கிக்கணக்கு உரிமையாளருக்கு சம்மன் அனுப்ப பொருளாதார குற்றப்பிரிவு முடிவு செய்துள்ளது.

    • தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் 'ஆருத்ரா கோல்டு' நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.
    • ஆர்.கே.சுரேஷ் 2 மாதமாக வெளிநாட்டில் தங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சென்னை அமைந்தகரையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வந்த 'ஆருத்ரா கோல்டு' நிறுவனம் தமிழகம் முழுவதும் கிளைகளை தொடங்கி தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை கூடுதல் வட்டி தருவதாக கவர்ச்சிகரமாக அறிவித்தனர்.

    இதனை நம்பி தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் 'ஆருத்ரா கோல்டு' நிறுவனத்தில் முதலீடு செய்தனர். இதன் மூலம் பொதுமக்களிடம் முதலீடாக பெற்ற ரூ.2,438 கோடி மோசடி செய்யப்பட்டது.

    இந்த வழக்கில் ஏற்கனவே அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் பலர் கைது செய்யப்பட்டனர். ஆருத்ரா கோல்டு நிறுவனத்தின் வங்கி கணக்குகள், சொத்துக்கள் முடக்கப்பட்டன. இதுதொடர்பாக குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி தொடர்பாக 21 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஏற்கனவே 8 பேர் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் ஆருத்ரா நிறுவனத்தின் பண மோசடி வழக்கில் நடிகர் ஆர்.கே.சுரேஷிற்கு தொடர்பு இருப்பதாக பொருளாதார குற்ற தடுப்பு பிரிவு போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    விசாரணையில் இருந்து தப்பிக்க ஆர்.கே.சுரேஷ் 2 மாதமாக வெளிநாட்டில் தங்கி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    ஏற்கனவே இந்த வழக்கில் கைதான நடிகர் ரூசோ அளித்த தகவலின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

    • பா.ஜனதா நிர்வாகி ஹரீஷ், மாலதி ஆகிய 2 பேரையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
    • தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் ‘ஆருத்ரா கோல்டு’ நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.

    சென்னை:

    சென்னை அமைந்தகரையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வந்த 'ஆருத்ரா கோல்டு' நிறுவனம் தமிழகம் முழுவதும் கிளைகளை தொடங்கி தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை கூடுதல் வட்டி தருவதாக கவர்ச்சிகரமாக அறிவித்தனர்.

    இதனை நம்பி தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் 'ஆருத்ரா கோல்டு' நிறுவனத்தில் முதலீடு செய்தனர். இதன் மூலம் பொதுமக்களிடம் முதலீடாக பெற்ற ரூ.2,438 கோடி மோசடி செய்யப்பட்டது.

    இந்த வழக்கில் ஏற்கனவே அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் பலர் கைது செய்யப்பட்டனர். ஆருத்ரா கோல்டு நிறுவனத்தின் வங்கி கணக்குகள், சொத்துக்கள் முடக்கப்பட்டன. இதுதொடர்பாக குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குனர்கள் ராஜசேகர் மற்றும் உஷா ராஜசேகர், மைக்கேல் ராஜ் ஆகிய 3 பேரும் வெளிநாட்டில் தலைமறைவாகி விட்டனர்.

    மேலும் ஆருத்ரா கோல்டு நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான பா.ஜனதா நிர்வாகி ஹரீஷ் மற்றும் அந்த நிறுவனத்தின் மற்றொரு இயக்குனரான மாலதி ஆகியோர் குறித்து விசாரித்து வந்தனர்.

    இந்த நிலையில் பா.ஜனதா நிர்வாகி ஹரீஷ், மாலதி ஆகிய 2 பேரையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இன்று அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. ஹரீஷ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பா.ஜனதாவில் விளையாட்டு பிரிவு மாநில செயலாளராக நியமிக்கப்பட்டார்.

    ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி தொடர்பாக 21 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஏற்கனவே 8 பேர் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    ×