search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aarudhra Scam"

    • ரூசோவிற்கு வழங்கப்பட்ட ஜாமீனை சென்னை உயர்நீதிநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
    • ரூசோ 3 நாட்களில் ரூசோ விசாரணை நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும்

    ஆருத்ரா கோல்டு மோசடி விவகாரத்தில் ரூசோவிற்கு வழங்கப்பட்ட ஜாமீனை சென்னை உயர்நீதிநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

    ஆருத்ரா கோல்டு நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி தருவதாக கூறி சுமார் ஒரு லட்சம் முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.2438 கோடி மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் 21 மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் ரூசோ உட்பட பல கைது செய்யப்பட்டனர்.

    இந்நிலையில், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ரூசோவுக்கு சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ரூசோவிற்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ரூசோவிற்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டது. ரூசோ 3 நாட்களில் ரூசோ விசாரணை நீதிமன்றத்தில் சரணடைய வேண்டுமென்றும், அப்படி அவர் சரணடைய வில்லையென்றால் அவரை கைது செய்யவும் காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • முக்கிய ஏஜெண்டுகளின் அசையா சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    • இயக்குனர்கள் முக்கிய ஏஜெண்டுகளின் வங்கி கணக்குகளில் இருந்து ரூ.96 கோடி முடக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    ஆருத்ரா நிதி நிறுவனம் அதிக வட்டி தருவதாக கூறி முதலீட்டாளர்களிடம் ரூ.2400 கோடி பணத்தை சுருட்டி உள்ளது. இந்த ஆருத்ரா பண மோசடி வழக்கில் அந்த நிறுவனத்தின் இயக்குனர் உள்பட 13 பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். மற்றொரு இயக்குனர் ராஜசேகர், அவரது மனைவி ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய நபர்களின் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை முடக்கி உள்ளது. முடக்கப்பட்ட சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளது. இதேபோல் மேலும் சில நிதி நிறுவன மோசடிகள் தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

    இந்நிலையில் நிதி நிறுவன மோசடி வழக்குகள் தொடர்பாக சென்னையில் இன்று பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி. ஆசையம்மாள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் இதுவரை ரூ.6.35 கோடி பணம், ரூ.1.13 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி பொருட்கள் மற்றும் 22 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

    நிறுவனங்கள், இயக்குனர்கள் முக்கிய ஏஜெண்டுகளின் வங்கி கணக்குகளில் இருந்து ரூ.96 கோடி முடக்கப்பட்டுள்ளது. நிறுவன இயக்குனர்கள், முக்கிய ஏஜெண்டுகளின் அசையா சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும். இவ்வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி ஆர்.கே.சுரேசுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

    ஹிஜாவு நிதி நிறுவன மோசடி வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் அலெக்சாண்டர் மீது ரெட் கார்னர் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்ட நபர்களுக்கு சொந்தமான 48 இடங்களில் சோதனை மேற்கொண்டு ரூ.3.34 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான 448 கிராம் தங்க நகைகள், ரூ.75 ஆயிரம் மதிப்பிலான வெள்ளிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. குற்றவாளிகளுக்கு சொந்தமான 162 வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.14.47 கோடி முடக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாஜக நிர்வாகிகள் தங்கள் மீதான குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து விரிவான பதில் அளித்துள்ளனர்.
    • ஆருத்ரா நிதி நிறுவன வங்கிக் கணக்குகள் முழுவதையும் கையாண்டவர் மைக்கேல்ராஜ்.

    சென்னை:

    ஆருத்ரா நிதி நிறுவன மோசடி தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த வழக்கில் பாஜக பிரமுகர் உள்ளட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாஜக வழக்கறிஞர் பிரிவு வழக்கறிஞர் அலெக்ஸ், ராணிப்பேட்டை பாஜக மாவட்ட பொறுப்பில் உள்ள டாக்டர் சுதாகர் ஆகிய இருவரும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். அப்போது தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து விரிவான பதில் அளித்துள்ளனர்.

    இந்நிலையில், ஆருத்ரா நிதி நிறுவன இயக்குனர்களில் ஒருவரான மைக்கேல் ராஜ் அளித்த வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஆருத்ரா நிதி நிறுவன வங்கிக் கணக்குகள் முழுவதையும் கையாண்ட மைக்கேல்ராஜிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சுமார் ரூ.1,749 கோடி அளவுக்கு பணப்பரிவர்த்தனை செய்தது தெரியவந்துள்ளது. பரிவர்த்தனை செய்யப்பட்ட வங்கிக்கணக்கு உரிமையாளருக்கு சம்மன் அனுப்ப பொருளாதார குற்றப்பிரிவு முடிவு செய்துள்ளது.

    ×