search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆயுதப்படை போலீசார்"

    • மன உளைச்சலை போக்க காவலர்களுக்கு யோகா பயிற்சி நடந்தது.
    • காவலர்களுக்கு சரியான உடற்பயிற்சி மற்றும் மன வலிமையை ஊக்குப்படுத்தும் விதமாக யோகா பயிற்சி மேற்கொள்ளப்பட வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலு வலகத்தில் காவலர்களின் மன உளைச்சலை போக்க காவலர்களுக்கு யோகா பயிற்சி நடந்தது. இதில் ஏராளமான காவலர்கள் பயிற்சியில் கலந்து கொண்டனர்.போலீஸ் நிலையங்கள் மற்றும் ஆயுதப்படையில் பணியாற்றும் போலீசார் ஒவ்வொரு நாளும் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல்வேறு பிரச்சனைகளுக்கு உள்ளாகி வருகின்றனர்.இந்நிலையில் காவலர்களுக்கு சரியான உடற்பயிற்சி மற்றும் மன வலிமையை ஊக்குப்ப டுத்தும் விதமாக யோகா பயிற்சி மேற்கொ ள்ளப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி திருப்பூர் மாநகர கமிஷனர் அலுவலகத்தில் பணியாற்றகூடிய அதிவிரைவு படை மற்றும் ஆயுதப்படை காவலர்களு க்குமாநகரகாவல் ஆணையர் பிரவீன் குமார் அபினபு உத்தரவின் பேரில் மாநகர காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில்வாழ்க வளமுடன் அமைப்பின் சார்பில் யோகா பயிற்சி அளிக்க ப்பட்டது.

    இந்த யோகா பயிற்சியில் மன வலிமையை ஊக்குப்ப டுத்தும் யோகா பயிற்சியும் மூச்சுப் பயிற்சி களும் அளிக்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் மாநகர காவல் ஆணையர் அலுவல கத்தில் பணியாற்ற கூடிய காவ லர்கள் ஏராள மானோர் கலந்து கொண்டு யோகா பயிற்சியில் ஈடுபட்ட னர்.

    • ஆயுதப்படை பிரிவில் பணியாற்றும் போலீசார் பணியிட மாறுதல் கேட்டு விருப்பம்
    • போலீஸ் நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசி மோகன் உத்தரவு

    ஈரோடு ஆனைக்கல் பாளையம் பிரிவில் மாவட்ட ஆயுதப்படை செயல்பட்டு வருகிறது. ஆயுதப்படை பிரிவில் பணியாற்றும் போலீசார் பணியிட மாறுதல் கேட்டு விருப்பம்தெரிவித்திருந்தனர்.

    இதன் பேரில் மாவட்ட ஆயுதப்படையில் பணி யாற்றிய சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் தங்கராஜ், தலைமை காவலர்கள் பிரபு , சக்தி வேலாயுத சாமி, சுரேஷ்குமார், சிவகுமார் முத்துகிருஷ்ணன், சரவணன், பெண் தலைமை காவலர் பாண்டிய ஜோதி மற்றும் போலீசார் என 59 பேர் ஈரோடு, பவானி, கோபி, பெருந்துறை, சத்தியமங்கலம் ஆகிய 5 போலீஸ் சப்- டிவிஷன்க ளுக்கு கீழே உள்ள போலீஸ் நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசி மோகன் உத்தரவிட்டார்.

    இதில் பணியிடம் மாற்றம் செய்யப்பட்ட 59 பேரில் 7 பேர் பெண் போலீசார் என்பது குறிப்பிடத்தக்கது. இடமாற்றம் செய்யப்பட்ட 59 பேரும் தங்களிடம் உள்ள ஆயுதங்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும் எனவும் போலீஸ் குடியிருப்புகளையும் காலி செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • 9 பேர் கோவை சரகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
    • நிர்வாக காரணங்களுக் காக அவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி ஆயுதப்படை போலீஸ் பிரிவில் பணியாற்றி வந்த போலீஸ்காரர்கள் பாலாஜி, ராஜேஷ், வினோத்குமார், சேட்டு, நேதாஜி, அருள்செல்வம், கலைவாணன், சரத்குமார், மணிவேல் ஆகிய 9 பேர் கோவை சரகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    நிர்வாக காரணங்களுக் காக அவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டதாக போலீஸ் அதிகாரிகள் தரப்பில் கூறினாலும், ஆயுதப்படை போலீஸ் பிரிவில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும், அதை மேற்கண்ட போலீசாரில் சிலர் தட்டி கேட்டதால் இந்த இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக போலீஸ் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

    ×