search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆயுதப்படை போலீசார் 59 பேர் போலீஸ்  நிலையங்களுக்கு இடமாற்றம்
    X

    ஆயுதப்படை போலீசார் 59 பேர் போலீஸ் நிலையங்களுக்கு இடமாற்றம்

    • ஆயுதப்படை பிரிவில் பணியாற்றும் போலீசார் பணியிட மாறுதல் கேட்டு விருப்பம்
    • போலீஸ் நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசி மோகன் உத்தரவு

    ஈரோடு ஆனைக்கல் பாளையம் பிரிவில் மாவட்ட ஆயுதப்படை செயல்பட்டு வருகிறது. ஆயுதப்படை பிரிவில் பணியாற்றும் போலீசார் பணியிட மாறுதல் கேட்டு விருப்பம்தெரிவித்திருந்தனர்.

    இதன் பேரில் மாவட்ட ஆயுதப்படையில் பணி யாற்றிய சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் தங்கராஜ், தலைமை காவலர்கள் பிரபு , சக்தி வேலாயுத சாமி, சுரேஷ்குமார், சிவகுமார் முத்துகிருஷ்ணன், சரவணன், பெண் தலைமை காவலர் பாண்டிய ஜோதி மற்றும் போலீசார் என 59 பேர் ஈரோடு, பவானி, கோபி, பெருந்துறை, சத்தியமங்கலம் ஆகிய 5 போலீஸ் சப்- டிவிஷன்க ளுக்கு கீழே உள்ள போலீஸ் நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசி மோகன் உத்தரவிட்டார்.

    இதில் பணியிடம் மாற்றம் செய்யப்பட்ட 59 பேரில் 7 பேர் பெண் போலீசார் என்பது குறிப்பிடத்தக்கது. இடமாற்றம் செய்யப்பட்ட 59 பேரும் தங்களிடம் உள்ள ஆயுதங்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும் எனவும் போலீஸ் குடியிருப்புகளையும் காலி செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    Next Story
    ×