search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்"

    • ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடைபெற்றது.
    • ஆண்கள் இரட்டையர் பிரிவில் நடந்த போட்டியில் இந்திய ஜோடி இறுதிக்கு முன்னேறியது.

    துபாய்:

    ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீரர்கள் சாட்விக்-சிராக் ஜோடி, சீன தைபே ஜோடியுடன் மோதியது.

    இந்த ஆட்டத்தில் சாட்விக், சிராஜ் ஜோடி 21-18 என முதல் செட்டை கைப்பற்றியது. இரண்டாவது செட்டில் 13-14 என இருந்த நிலையில் காயம் காரணமாக சீன தைபே ஜோடி விலகியது. இதையடுத்து, இந்திய ஜோடி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    • ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது.
    • ஆண்கள் இரட்டையர் பிரிவில் நடந்த போட்டியில் இந்திய ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது.

    துபாய்:

    ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர்கள் சாட்விக், சிராக் ஜோடி, இந்தோனேசிய ஜோடியுடன் மோதியது.

    இந்த ஆட்டத்தில் சாட்விக், சிராஜ் ஜோடி 21-11, 21-12 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.

    • ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது.
    • நேற்று நடந்த காலிறுதியில் பி.வி.சிந்து அதிர்ச்சிகரமாக தோல்வி அடைந்தார்.

    துபாய்:

    ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, தென்கொரிய வீராங்கனை ஆன் செ யங்குடன் மோதினார்.

    இந்த ஆட்டத்தில் பி.வி.சிந்து முதல் செட்டை 21-18 என கைப்பற்றினார். ஆனால் அடுத்த இரு செட்களை 5-21, 9-21 என்ற செட் கணக்கில் இழந்து அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    • ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது.
    • நேற்று நடந்த போட்டியில் பி.வி.சிந்து, பிரனாய் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினர்.

    துபாய்:

    ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, சீன வீராங்கனை யூ ஹானுடன் மோதினார்.

    இந்த ஆட்டத்தில் பி.வி.சிந்து 21-12, 21-15 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    இதேபோல், ஆண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய், இந்தோனேசிய வீரர் வர்டயோவுடன் மோதினார். இதில் பிரனாய் 21-16, 5-21, 21-18 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் 14- 21, 22-20, 9-21 என்ற செட் கணக்கில் தோற்று தொடரில் இருந்து வெளியேறினார்.

    • ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது.
    • ஆண்கள் இரட்டையர் பிரிவில் நடந்த போட்டியில் இந்திய ஜோடி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

    துபாய்:

    ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர்கள் சாட்விக், சிராக் ஜோடி, மலேசிய ஜோடியுடன் மோதியது.

    விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய ஜோடி 21-14, 21-17 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

    • ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது.
    • இன்று நடந்த போட்டியில் பி.வி.சிந்து, கிடாம்பி ஸ்ரீகாந்த் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

    துபாய்:

    ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, தைவான் வீராங்கனை ஹு வென் சீயுடன் மோதினார்.

    விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் லக்ஷ்யா சென் 21-15, 22-20 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    இதேபோல், ஆண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த், பஹ்ரைன் வீரர் அட்னன் இப்ரஹமுடன் மோதினார். இதில் கிடாம்பி 21-13, 21-8 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது.
    • முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் லக்ஷயா சென், முன்னாள் உலக சாம்பியன் லோ கீன் யூவை (சிங்கப்பூர்) எதிர்கொண்டார்.

    துபாய்:

    40-வது ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் லக்ஷயா சென், முன்னாள் உலக சாம்பியன் லோ கீன் யூவை (சிங்கப்பூர்) எதிர்கொண்டார்.

    விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் லக்ஷ்யா சென் 7-21, 21-23 என்ற செட் கணக்கில் லோ கீன் யூவிடம் தோல்வி அடைந்தார்.இதனால் லக்ஷயா சென் முதல் சுற்றிலே தொடரில் இருந்து வெளியேறினார்.

    • காலிறுதியில் ஹாங்காங்கை வென்ற இந்தியா அரையிறுதியில் நுழைந்தது.
    • சீனா அரையிறுதியில் இந்தியாவை தோற்கடித்தது.

    துபாய்:

    ஆசிய பேட்மிண்டன் கலப்பு அணிகள் சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் கடந்த 14ம் தேதி முதல் 19-ம் தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 16 அணிகள் 4 பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் இந்திய அணி 'பி' பிரிவில் இடம் பிடித்துள்ளது. கஜகஸ்தான், மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை அந்தப் பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும்.

    இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு முன்னேறும்.

    இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் கஜகஸ்தானையும், 2-வது ஆட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்சையும், மூன்றாவது லீக் ஆட்டத்தில் மலேசியாவையும் வீழ்த்தியது.

    இந்நிலையில், நேற்று அரையிறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் இந்தியா, சீனா அணிகள் மோதின. ஆண்கள் ஒற்றையர் பிரிவில்

    எச்.எஸ்.பிரனோய் தோல்வி அடைந்தார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து தோல்வி அடைந்து 0-2 என பின்தங்கியது.

    அடுத்து நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் துருவ் கபிலா, சிராக் ஷெட்டி ஜோடி சீன ஜோடியை வென்றது. பெண்கள் இரட்டையரில் டிரிசா ஜாலி, காயத்ரி கோபிசந்த் ஜோடி சீனாவை வென்றது. இதனால் இந்தியா 2-2 என சமனிலை வகித்தது.

    கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் இஷான் பட்நாகர், டனிஷா கிராஸ்டோ ஜோடியை சீன ஜோடி வென்று, 3-2 என்ற கணக்கில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    அரையிறுதியில் தோல்வி அடைந்த இந்திய அணிக்கு வெண்கலப் பதக்கம் உறுதியானது.

    • கஜகஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், மலேசியாவை வீழ்த்தியது இந்தியா வென்றது.
    • நேற்று நடந்த காலிறுதியில் ஹாங்காங்கை வென்ற இந்தியா அரையிறுதிக்குள் நுழைந்தது.

    துபாய்:

    ஆசிய பேட்மிண்டன் கலப்பு அணிகள் சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் கடந்த 14ம் தேதி முதல் 19-ம் தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 16 அணிகள் 4 பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் இந்திய அணி 'பி' பிரிவில் இடம் பிடித்துள்ளது. கஜகஸ்தான், மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை அந்தப் பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும்.

    இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு முன்னேறும்.

    இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் கஜகஸ்தானையும், 2-வது ஆட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்சையும், மூன்றாவது லீக் ஆட்டத்தில் மலேசியாவையும் வீழ்த்தியது.

    இந்நிலையில், நேற்று காலிறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் இந்தியா, ஹாங்காங் அணிகள் மோதின. ஆண்கள் ஒற்றையர் பிரிவில்

    லக்ஷயா சென் தோல்வி அடைந்தார். கலப்பு இரட்டையர் பிரிவிலும் இந்தியா தோல்வி அடைந்து 0-2 என பின்தங்கியது.

    அடுத்து நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் துருவ் கபிலா, சிராக் ஷெட்டி ஜோடி 20-22, 21-16, 21-11 என்ற கணக்கில் ஹாங்காங் ஜோடியை வென்றது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து 16-21 21-7 21-9 என்ற கணக்கில் வென்றார்..

    பெண்கள் இரட்டையரில் டிரிசா ஜாலி, காயத்ரி கோபிசந்த் ஜோடி 21-13, 21-12 என்ற கணக்கில் வென்றது. இதனால் இந்தியா 3-2 என்ற கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.

    • முதலாவது லீக் ஆட்டத்தில் கஜகஸ்தானை இந்தியா அபார வெற்றி பெற்றது.
    • இரண்டாவது லீக் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமிரேட்சையும் வீழ்த்தியது.

    துபாய்:

    ஆசிய பேட்மிண்டன் கலப்பு அணிகள் சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் கடந்த 14ம் தேதி முதல் 19-ம் தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 16 அணிகள் 4 பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் இந்திய அணி 'பி' பிரிவில் இடம் பிடித்துள்ளது. கஜகஸ்தான், மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை அந்தப் பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும்.

    இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு முன்னேறும்.

    இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் கஜகஸ்தானையும், 2-வது ஆட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்சையும் 5-0 என்ற கேம் கணக்கில் வீழ்த்தியது.

    இந்நிலையில், நேற்று 3-வது ஆட்டம் நடைபெற்றது. இதில் இந்தியா, மலேசியா அணிகள் மோதின. ஆண்கள் ஒற்றையர் பிரிவில்

    எச். எஸ்.பிரனோய் 18-21 21-13 25-23 என்ற கணக்கில் வென்றார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் பிவி சிந்து 21-13 21-17 என்ற கணக்கில் வென்றார்..

    அடுத்து நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி 16-21 10-21 என்ற கணக்கில் மலேசியாவிடம் தோற்றது. பெண்கள் இரட்டையரில் 23-21, 21-15 என்ற கணக்கில் வென்றார். இதனால் இந்தியா 3-1 என்ற கணக்கில் இந்தியா வென்று காலிறுதிக்கு முன்னேறியது.

    ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் பிவி சிந்து, சாய்னா நேவால், சமீர் வர்மா ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறினர்.
    ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் முன்னணி வீராங்கனைகளில் ஒருவரான பிவி சிந்து இந்தோனேசியாவின் சொய்ருன்சியாவை எதிர்கொண்டார். இதில் பிவி சிந்து 21-15, 21-19 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். பிவி சிந்து காலிறுதியில் சீனாவின் காய் யன்யன்-ஐ எதிர்கொள்கிறார்.

    மற்றொரு வீராங்கனையான சாய்னா நேவால் கொரியாவின் கிம் கா இயுன்-ஐ எதிர்கொண்டார். இதில் சாய்னா 21-13, 21-13 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். சாய்னா அடுத்த சுற்றில் ஜப்பானின் அகானே யமகுச்சியை எதிர்கொள்கிறார்.



    ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் சமீர் வர்மா ஹாங்காங் வீரர் கா லாங் அங்குஸை 21-12, 21-19 என நேர்செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
    ×