search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் - அடுத்த சுற்றுக்கு முன்னேறினர் பி.வி.சிந்து, கிடாம்பி ஸ்ரீகாந்த்
    X

    ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் - அடுத்த சுற்றுக்கு முன்னேறினர் பி.வி.சிந்து, கிடாம்பி ஸ்ரீகாந்த்

    • ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது.
    • இன்று நடந்த போட்டியில் பி.வி.சிந்து, கிடாம்பி ஸ்ரீகாந்த் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

    துபாய்:

    ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, தைவான் வீராங்கனை ஹு வென் சீயுடன் மோதினார்.

    விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் லக்ஷ்யா சென் 21-15, 22-20 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    இதேபோல், ஆண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த், பஹ்ரைன் வீரர் அட்னன் இப்ரஹமுடன் மோதினார். இதில் கிடாம்பி 21-13, 21-8 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    Next Story
    ×