search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அறிவு"

    • பாடல் வெளியாகி சில நாட்களில் பட்டித் தொட்டி எங்கும் எதிரொலித்தது. இப்பாடலுக்கான யு ட்யூப் வீடியோ இதுவரைக்கும் 449 மில்லியன் வியூஸ்களையும், 4.8 மில்லியன் லைக்ஸ்களை வாங்கியுள்ளது.
    • இந்த பாடலின் மூலம் எனக்கு இதுவரைக்கும் எந்த ஒரு பைசா வருமானமும் கிடைக்கவில்லை

    எஞ்சாய் எஞ்சாமி எனும் பாடல் மார்ட் 7 ஆம் தேதி 2021 ஆம் ஆண்டு வெளியானது.இந்த பாட்டை பாடியவர் 'அறிவு' மற்றும் 'தீ'. பாடகி தீ- க்கு இதுவே முதல் பாடல் ஆகும். சந்தோஷ் நாராயணன் தான் இப்பாடலிற்க்கு இசையமைத்தார்.

    இப்பாடல் மாஜா என்னும் ம்யூசிக் லேபல் தயாரித்தது.

    பாடல் வெளியாகி சில நாட்களில் பட்டித் தொட்டி எங்கும் எதிரொலித்தது. இப்பாடலுக்கான யு ட்யூப் வீடியோ இதுவரைக்கும் 449 மில்லியன் வியூஸ்களையும், 4.8 மில்லியன் லைக்ஸ்களை வாங்கியுள்ளது.

     

    இந்தப் பாடல் தமிழ் பாடலை உலகளவிற்க்கு கொண்டு புகழ் வர செய்தது. இந்த பாடல் வெளியாகி 3 ஆண்டு முடிவடைந்த நிலையில் .அதன் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ட்விட்டரில் ஒரு வீடியோ பதிவினை பதிவிட்டுள்ளார் அதில் அவர் "இந்த பாடலின் மூலம் எனக்கு இதுவரைக்கும் எந்த ஒரு பைசா வருமானமும் கிடைக்கவில்லை , இந்த பாடலுக்கான வருமானம் எல்லாம் அந்த பாடல் தயார் செய்த ம்யூசிக் தயாரிப்பாளர்களுக்கே செல்கிறது . நான் இது வரைக்கும் எந்த வலைதளங்களிலும் இதை பற்றி பேசியதில்லை. இதை பற்றி இப்பொழுது பேச தோன்றியது அதனால் கூறுகிறேன் . இப்பதிவினை முடிந்த அளவுக்கு அனைவருக்க்கும் பகிர செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    தனி இசைக் கலைஞர்களுக்கு கூடுதல் வெளிப்படை தன்மையாக இயங்கும் தளங்கள் தேவை அதனால் நான் ஒரு ம்யூசிக் ஸ்டூடியோ ஒன்று தொடங்குவேன் .

    தனி இசைக் கலைஞர்கள் இதனால் கவலை பட வேண்டாம் உங்களை வந்து சேர வேண்டியது கண்டிப்பாக வந்து சேரும்" என்று அவரின் ஆதங்கத்தை அதில் பதிவிட்டுள்ளார்.

    • புத்தகம் வாசிப்பதால் மட்டுமே முழுமையான அறிவு பெருகும் என தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. பேசினார்.
    • காமராஜர் பிறந்த விருதுநகருக்கு பெருமை சேர்த்துள்ளது.

    ராஜபாளையம்

    விருதுநகர் கே.வி.எஸ்.மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற 2ம் ஆண்டு புத்தக திருவிழாவில் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் முன்னிலையில் ராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினர் தங்கபாண்டி யன் கலந்து கொண்டு புத் தக கண்காட்சியை பார்வை யிட்டார்.

    புத்தக விழாவில் அவர் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் அறிவுறுத்தலின்படி வருவாய்த்துறை, நிதித்துறை அமைச்சர்களின் ஆலோசனை படி சிறப்பாக புத்தக திருவிழா நடை பெற்று வருவது கல்விகண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் பிறந்த விருது நகருக்கு பெருமை சேர்த் துள்ளது.

    பேரறிஞர் அண்ணா கூற்றுப்படி ஒரு நூலகம் திறந்தால் நூறு சிறைச் சாலைகள் மூடப்படும் என்பதை உணர்ந்து முன்னாள் முதல்- அமைச் சர் கருணாநிதி மிகப்பெரிய ளவில் அண்ணா நூலகம் திறந்து வைத்தார்.

    அவர்வழியில் தமிழ்நாடு முதலமைச்சர் ஒவ்வொரு மாவட்டத்திலும் புத்தக திருவிழா நடத்தி புத்தகத்தின் முக்கியத்துத்தை இளை ஞர்களிடம் கொண்டு சேர்த்து வருகிறார். எத்தனை தொழில்நுட்பம் கணிணி செல்போனில் படித்தாலும் புத்தகத்தை படித்தல் மட்டுமே முழுமையான அறிவு பெருகும்.

    ராஜபாளையத்தில் பெண்களுக்கென தனியாக நூலக வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. தற்போது சட்ட மன்ற நிதியிலிருந்து கிருஷ்ணாபுரம் ஊராட்சி நூலகம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதுபோல் தொகுதியில் வேறெங்கும் நூலக வசதி தேவைப்படுமேயானால் சட்ட மன்ற நிதியிலிருந்து செய்து தரப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்வில் சேத்தூர் பேரூர் சேர்மன்கள் ஜெய முருகன், பாலசுப்பிர மணியன், சேத்தூர் செட்டி யார்பட்டி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    • தொழில் வாய்ப்புகள், தொடங்கும் முறைகள் அரசின் உதவிகள் மற்றும் புத்தாக்க அறிவினை தூண்டும் விதமாக எடுத்துரைத்தார்.
    • 50-க்கும் மேற்பட்ட கல்லூரி தொழில் முனைவோர் மாணவத்தலைவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு அரசு தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் மண்டல மையமான அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி, மற்றும் பாரத் இன்ஸ்டிடியூட் ஆப் கேட்டரிங் டெக்னாலஜி அண்ட் ஹோட்டல் மேனேஜ்மென்ட் ஆகியோர் இணைந்து நடத்தும் 2 நாள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம் பாரத் கேட்டரிங் கல்லூரியில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியை அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர்தமிழ்செல்வம் மற்றும் மைய ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார் ஆகியோர் ஏற்பாட்டில் பாரத் கல்விக் குழும செயலாளர் புனிதா கணேசன் முன்னிலையில் கல்லூரி முதல்வர்முத்துக்கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

    கள ஒருங்கிணைப்பாளர் அமர்நாத் வரவேற்புரை கூறினார். சிறப்பு விருந்தினராக சென்னையிலிருந்து டாக்டர் ரோசி பெர்னான்டஸ் கலந்து கொண்டு மாணவர்களிடம் பல்வேறு தொழில் வாய்ப்புகள், தொடங்கும் முறைகள் அரசின் உதவிகள் மற்றும் புத்தாக்க அறிவினை தூண்டும் விதமாக எடுத்துரைத்தார்.

    நிகழ்ச்சியின் இறுதியில் துணை முதல்வர்கவிதா நன்றி கூறினார். நிகழ்ச்சியினை துணை போராசியரியர்சாண்டினா தொகுத்து வழங்கினார். 9 மாவட்டங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட கல்லூரி தொழில் முனைவோர் மாணவத்தலைவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    • அறிவு சார்ந்த புத்தகங்கள் விற்று மற்றவர்களுக்கு வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தி கொடுக்கிறேன்.
    • தினமும் காலையிலிருந்து எனது பணியை தொடங்கி வீதி வீதியாக நடந்தே சென்று புத்தகங்கள் விற்கிறேன்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பிள்ளையார்பட்டி அருகே உள்ள பூக்கொல்லையை சேர்ந்தவர் அப்துல்முனாப் (வயது 54).

    இவரது மனைவி பரக்கத். இவர்களுக்கு இரண்டு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

    அப்துல்முனாப் கடந்த 35 ஆண்டுகளாக புத்தகங்கள் விற்பனை செய்து வருகிறார்.‌

    அதாவது நடந்தே சென்று பல இடங்களில் புத்தகங்கள் விற்று வருகிறார்.

    தான் சரியாக படிக்கவில்லை என்றாலும் புத்தகங்கள் விற்பனை செய்து அதனை படிப்பவர்களுக்கு அறிவு களஞ்சியத்தை மேம்படுத்தி கொள்ள தன்னால் ஓரளவு முடிகிறதே எண்ணி பெருமை கொள்கிறார்.

    இது குறித்து அப்துல் முனாப் கூறும் போது:-

    நான் தொடக்கப் பள்ளியை தாண்டவில்லை.

    இருந்தாலும் அறிவு சார்ந்த புத்தகங்கள் விற்று மற்றவர்களுக்கு வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தி கொடுக்கிறேன்.

    குழந்தைகளுக்கான வாய்ப்பாடு முதல், இந்தியா, உலக மேப், சமையல் கலை புத்தகம், ஜோதிட புத்தகம், நகைச்சுவை புத்தகம், காந்தியடிகள், பாரதியார் உள்ளிட்ட பல்வேறு தேச தலைவர்களின் வரலாற்று புத்தகங்கள், சிந்திக்க தூண்டும் புத்தகங்கள் என பல்வேறு வகையான புத்தகங்களை விற்று வருகிறேன்.

    இதற்காக வாரத்தில் ஒரு நாள் திருச்சிக்கு சென்று புத்தகங்களை மொத்தமாக கொள்முதல் செய்கிறேன்.

    பின்னர் தஞ்சை நகரில் தினமும் காலையிலிருந்து எனது பணியை தொடங்கி வீதி வீதியாக நடந்தே சென்று புத்தகங்கள் விற்கிறேன்.

    மேலும் சீர்காழி ,மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் பஸ், ரயில்களில் சென்று அங்கும் எனது பணியை தொடர்கிறேன்.

    தினமும் ஓரளவுக்கு நல்ல வருமானம் கிடைத்து வருகிறது.

    இந்த வருமானத்தைக் கொண்டுதான் எனது மூன்று பிள்ளைகளுக்கும் திருமணம் செய்து வைத்தேன்.

    மற்றவர்களுக்கு அறிவு களஞ்சியத்தை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் எனது பணி இருப்பதால் மகிழ்ச்சி தான். தினமும் ஒரளவு வருமானம் வருவதால் தடையின்றி புத்தகங்கள் விற்று வருகிறேன்.

    கொரோனா ஊரடங்கு காலத்தில் குறைந்த அளவு வருமானம் கிடைத்தது.

    தற்போது நிலைமை சீராகி இயல்பு நிலை திரும்பியதால் வழக்கம்போல் எனது புத்தகங்கள் விற்கும் பணி தடையின்றி தொடர்கிறது.

    புத்தகங்கள் வாங்குபவர்களுக்கு குறைந்த விலையில் அதனை கொடுக்கிறேன் என்றார்.

    • சந்தோஷ் நாராயணன் இசையில் கடந்த ஆண்டு வெளியான பாடல் 'என்ஜாய் எஞ்சாமி'.
    • இந்த பாடலை தீ மற்றும் தெருக்குரல் அறிவு பாடியிருந்தனர்.

    சமீபத்தில் நடந்த சர்வதேச 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் 'என்ஜாய் எஞ்சாமி' பாடலை தீ மற்றும் மாரியம்மாள் பாடியிருந்தார்கள். இந்த நிகழ்ச்சியில் இப்பாடலை எழுதி, அதில் நடித்திருந்த தெருக்குரல் அறிவு இடம்பெறவில்லை.

    இதுதொடர்பாக ரசிகர்கள் பலர் சமூக வலைதளங்களில் அறிவு ஏன் புறக்கணிக்கப்படுகிறார் என கேள்வி எழுப்பி வந்தனர். இதைத்தொடர்ந்து, அறிவு தான் புறக்கணிக்கப்படுவது குறித்து சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த பதிவு வைரலானது. இதற்கு பதிலளிக்கும் விதமாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பதிவிட்டிருந்தார். இந்நிலையில், பாடகி தீ சார்பில் விளக்கமளிக்கப்பட்ட பதிவு ஒன்று வெளியாகியுள்ளது.


    என்ஜாய் எஞ்சாமி

    அதில்,  "எஞ்சாயி எஞ்சாமி பாடலின் ஒவ்வொரு கட்டத்திலும் அறிவு மற்றும் சந்தோஷ் நாராயணன் இருவருக்கும் உரிய அங்கீகாரம் வழங்கியுள்ளேன். ஒவ்வொரு முறையும் எனக்கு கிடைத்த வாய்ப்புகளில் அவர்கள் இருவரையும் குறிப்பாக அறிவு குறித்து பெருமையுடனே பேசியுள்ளேன். அவர்கள் இருவரின் முக்கியத்துவத்தை எந்தக் கட்டத்திலும் நான் குறைத்து மதிப்பிட்டது கிடையாது. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், மேடையிலும் இருவரின் பங்களிப்பை முன்னிலைப்படுத்தியுள்ளேன்.

    இயக்குனர் மணிகண்டனும், அவரின் `கடைசி விவசாயி' திரைப்படமும் 'எஞ்சாயி எஞ்சாமி' பாடல் உருவாக்கத்துக்கு பெரிய உந்து சக்தியாக அமைந்தது. 'எஞ்சாயி எஞ்சாமி' பாடல் வரிகளும், அதன் உருவாக்கமும் எங்களது அணியால் விவாதிக்கப்பட்டே செம்மைப்படுத்தப்பட்டது. பாடல் வெளியாகும் வரை நாங்கள் அனைவரும் ஒரே பக்கத்தில்தான் இருந்தோம்.

    பாடலுக்கான அர்த்தங்கள் மற்றும் அதன் கதைகள் பெரும்பாலானவற்றை பாடல் வெளியான பின் அறிவின் ஒவ்வொரு இன்டெர்வியூ மூலமாக நான் தெரிந்துகொண்டேன். அறிவு சொன்னது மிகவும் முக்கியமானது மட்டுமல்ல முதன்மையானது என நம்பி, அறிவின் குரல் எப்போதும் ஓங்கி ஒலிக்க வேண்டும் என விரும்பினேன். பாடல் மூலம் கிடைத்த அனைத்து வருமானம் மற்றும் உரிமைகளும் எங்கள் மூவருக்கும் சமமாகப் பகிரப்பட்டன. 'எஞ்சாயி எஞ்சாமி' எட்டிய உயரங்களை அறிவு மற்றும் சந்தோஷ் நாராயணனுடன் இணைந்து அனுபவிக்கவே ஆசைப்பட்டேன். ஏதேனும் ஒரு வாய்ப்பு அதில் சமத்துவமின்மையாக இருந்தால் ​​நிச்சயம் அதன் ஒரு பகுதியாக நான் இருக்கமாட்டேன்.


    என்ஜாய் எஞ்சாமி

    கடந்த ஆண்டு வெளியான "ரோலிங் ஸ்டோன் இந்தியா" இதழின் அட்டைப்படத்தில் நானும், ஷானும் இடம் பெற்றிருந்தோம். எங்கள் இணைப்பில் அடுத்து வரவுள்ள ஆல்பத்துக்கான அட்டைப்படமே அது. மற்றபடி, அது "எஞ்சாயி எஞ்சாமி" பாடலுக்கானதோ அல்லது "நீயே ஒலி" பாடலுக்கானதோ அல்ல. அந்த அட்டைப் படத்திலும் அந்த பாடல் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. அறிவு, சந்தோஷ் நாராயணன் மற்றும் மாஜா கலைஞர்கள் பற்றிய கட்டுரைகளை ரோலிங்ஸ்டோன் வெளியிட இருக்கிறது என்பது எனக்கு தெரிவிக்கப்பட்டது. எங்களின் அட்டைப்படம் வெளியாகும் முன்பே ரோலிங் ஸ்டோன் இதழ் ஒரு ட்வீட்டில் அறிவித்தது. அந்த அறிவிப்பை கண்டு நான் மகிழ்ச்சியடைந்தேன்.

    செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் என்னுடன் அறிவையும் பங்கேற்பதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அணுகினர். அறிவு அமெரிக்காவில் இருந்ததன் காரணமாக அவரால் பங்கேற்க முடியாததை அடுத்து அவர் குரலை நிகழ்ச்சியில் பயன்படுத்திக் கொண்டோம். தனது குரலுக்காகவும், பாடலில் அவரின் பங்களிப்புக்காகவும் நிகழ்வில் அறிவு பேசப்பட்டார். 'எஞ்சாயி எஞ்சாமி' பாடலை உருவாக்கியதற்காக சந்தோஷ் நாராயணன், அறிவு, மாஜா உள்ளிட்ட ஒட்டுமொத்த குழுவின் ஆதரவிற்கும் என் இதயத்தின் அடியாழத்திலிருந்து நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்த பிரபஞ்சத்தின் மீதும் உயிர்கள் மீதும் கொண்டுள்ள அன்பு, மரியாதையின் பொருட்டால் சக கலைஞர்களால் 'எஞ்சாயி எஞ்சாமி' பாடல் பிறந்தது. என்னைப் பொறுத்தவரை, அது எப்போதும் அப்படியே இருக்கும். உண்மை எப்போதும் வெல்லும்" என்று விளக்கம் கொடுத்துள்ளார்.



    ×