search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு பள்ளி ஆசிரியர் பலி"

    • மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறியதில் ஜான் பால் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.
    • விபத்து குறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    சங்கரன்கோவில் அருகே உள்ள ஜெருசலேம் தர்மா நகர் தெற்கு தெருவை சேர்ந்தவர் அந்தோணி. இவரது மகன் ஜான் பால் (வயது 37). இவரது மனைவி கனிஷ்கா.

    ஜான்பால் நெல்லை மாவட்டம் மணிமுத்தாறில் உள்ள பஞ்சாயத்து யூனியன் தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார்.

    கடந்த 4-ந்தேதி நெல்லையில் இருந்து இவர், மோட்டார் சைக்கிளில் மணிமுத்தாறுக்கு சென்று கொண்டிருந்தார். முன்னீர்பள்ளம் அருகே உள்ள பிராஞ்சேரி பகுதியில் சென்று கொண்டிருந்த போது சாலையின் குறுக்கே ஒருவர் வந்ததால் திடீரென ஜான்பால் பிரேக் பிடித்துள்ளார்.

    இதில் மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறியதில் ஜான் பால் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். உடனே அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து புதிய பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை ஜான்பால் பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் குறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனிடையே ஜான்பால் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதைத் தொடர்ந்து அவரது உடல் நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

    அங்கிருந்து அவரது உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு பொருத்துவதற்காக அனுப்பி வைக்கப்பட உள்ளது.

    இதற்கான ஏற்பாடுகளை டீன் ரேவதி தலைமையில் மருத்துவமனை டாக்டர்கள் செய்து வருகின்றனர்.

    விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் அரசு பள்ளி ஆசிரியர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
    திருநாவலூர்:

    கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் தாலுகா திவண்டா கோட்டை பகுதியை சேர்ந்தவர் சிவசாமி(வயது 45). இவர் திருநாவலூர் ஈஸ்வரகண்டநல்லூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக வேலைபார்த்து வந்தார்.

    விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் அருகே உள்ள கெடிலத்தில் தனியாக ஒரு வீட்டில் தங்கியிருந்தார்.

    இந்தநிலையில் நேற்று இரவு சிவசாமி உளுந்தூர்பேட்டையில் இருந்து கெடிலம் நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

    மோட்டார்சைக்கிள் திருநாவலூரை அடுத்த காந்திநகர் என்ற இடத்தில் வந்துகொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக சிவசாமியின் மோட்டார் சைக்கிள் சாலையின் தடுப்புக்கட்டையில் மோதியது.

    இதில் தூக்கிவீசப்பட்ட சிவசாமி பலத்த காயமடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விபத்தில் படுகாயமடைந்த சிவசாமியை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சிவசாமி பரிதாபமாக இறந்தார்.

    விபத்து குறித்து திருநாவலூர் சப்-இன்ஸ்பெக்டர் பரணிதரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    திருநாவலூரை அடுத்த சின்னக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ராசு படையாட்சி(55). விவசாயி. இவர் இன்று காலை விவசாய நிலத்துக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டார்.

    பின்னர் அந்த பகுதியில் உள்ள சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் ராசுபடையாட்சி மீது மோதியது.

    இதில் தூக்கிவீசப்பட்ட அவருக்கு பலத்தகாயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ராசு படையாட்சி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து திருநாவலூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×