search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ"

    கருணாநிதி உடல் அடக்கம் குறித்து அவதூறாக பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. கண்டனம் தெரிவித்துள்ளார். #ministerkadamburraju

    முள்ளக்காடு:

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், திருச்செந்தூர் எம்.எல்.ஏ.வுமான அனிதா ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களின் காவலனாக, தமிழினத்தின் தலைவராக, தமிழ் மக்களின் முன்னேற்றத்திற்காக, சுயமரியாதைக்காக தன் வாழ்நாள் முழுவதும் அயராது உழைத்திட்ட மாபெரும் தலைவர் கலைஞர்.

    தனது 95-வது வயதில் மரணமடைந்த தலைவர் கலைஞரை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்கி நாங்கள் பிச்சை போட்டோம் என அநாகரீகமாக, அவதூறாக பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூவிற்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க தனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.

    தனது 14 வயதில் இந்தி மொழி திணிப்பை எதிர்த்து மாணவர்களை திரட்டி போராட்டம் நடத்தியவர். அன்று முதல் இறுதி மூச்சுவரை தமிழ் சமுதாயத்திற்காக வாழ்ந்தவர் தலைவர் கலைஞர். தனது 45- வது வயதில் தமிழகத்தின் முதல்வர் பொறுப்பை ஏற்றவர். 13 முறை போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக வெற்றிபெற்றவர். 5 முறை தமிழக முதல்வர் பொறுப்பை ஏற்று நவீன தமிழகத்தின் வளர்ச்சிக்கு எண்ணற்ற திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தியவர் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட, சிறுபாண்மை மக்களின் பாதுகாப்பிற்காக, சமூகநீதியை உறுதிப்படுத்துவதற்காக சமரசமில்லாமல் போராடி வெற்றி கண்டவர். நம் தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்த்தை பெற்று தந்தவர்.

    மாநில சுயாட்சி, மத்தியில் கூட்டாச்சி என்ற மகத்தான கொள்கையை உருவாக்கியவர். மத்தியில் கூட்டணி ஆட்சியை உருவாக்கிய தளகர்த்தர்களில் முதன்மையானவர். கூட்டணி ஆட்சியில் ஜனாதிபதிகளை, பிரதமர்களை உருவாக்கியதில் முக்கிய பங்காற்றியவர்.

    தேசம் முழுவதும் உள்ள அனைத்து அரசியல் கட்சி தலைவர்களால் பெரிதும் நேசிக்கப்பட்ட, மதிக்கப்பட்ட மாபெரும் தலைவருக்கு மெரினாவில் உள்ள அண்ணா சமாதியின் அருகில் அடக்கம் செய்ய இடம் தர மறுத்தது அ.தி.மு.க அரசு. சென்னை உயர் நீதிமன்றம் கலைஞரின் சிறப்பை அங்கீகரித்து மெரினாவில் இடம் ஒதிக்கித்தர உத்தரவை பிறப்பித்தது.

    உண்மை இவ்வாறிருக்க, அரசியலும், வரலாறும் தெரியாமல் அமைச்சர் என்ற அந்தஸ்தை மறந்து அருகதையற்ற முறையில் பேசுவதை அமைச்சர் கடம்பூர் ராஜூ நிறுத்திக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #ministerkadamburraju

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் பணியில் தி.மு.க.வினர், முகவர்கள் எழுச்சியுடன் செயல்பட வேண்டும் என்று அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ பேசினார்.

    முள்ளக்காடு:

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம் தலைமை வகித்தார். மாநில மாணவரணி துணைச் செயலாளர் உமரி சங்கர், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பூபதி, கருணாகரன், மாவட்ட துணைச் செயலாளர் முகம்மது அப்துல்காதர், பொதுக்குழு உறுப்பினர்கள் சொர்ணகுமார், சாகுல்ஹமீது, சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசியதாவது:-

    தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களை சேர்த்தல், திருத்தம் மற்றும் நீக்கம் செய்தல் ஆகியவை நடைபெறுகிறது. தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள நாட்களில் பொதுமக்களுக்கு உதவிகரமாக தி.மு.க.வினர் செயல்பட வேண்டும்.

    18 வயது நிரம்பிய வாக்காளர்களை கண்டறிந்து பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான முக்கியத்துவத்தை விளக்கி கூற வேண்டும். சட்டமன்ற தொகுதி வாரியாக பூத் கமிட்டி வாரியாக உள்ள முகவர்கள் இதில் சிறப்பாக செயல்பட வேண்டும். நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி மன்ற தேர்தல் ஆகியவை வர உள்ளது. எனவே எந்த தேர்தல் எப்போது வந்தாலும் அதில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வெற்றிபெறும் வகையில் நாம் களப்பணி ஆற்ற வேண்டும். எனவே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் பணியில் தி.மு.க.வினர், முகவர்கள் எழுச்சியுடன் செயல்பட வேண்டும்.

    தமிழகத்தில் மீண்டும் தி.மு.க. ஆட்சி மு.க.ஸ்டாலின் தலைமையில் அமையவும், செயலற்று கிடக்கும் தமிழக அரசையும், உள்ளாட்சிகளையும் மீண்டும் செயல்பட வைத்து மக்கள் நல பணியாற்றுவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் ஒன்றிய, நகர , பேரூர் செயலாளர்கள், சார்பு, மாவட்ட, வர்த்தக அணி அமைப்பாளர்கள் மற்றும் மகேந்திரன், மாவட்ட தொண்டரனி அமைப்பாளர் சுந்தர் மற்றும் பரமன்குறிச்சி ஊராட்சி செயலாளர் இளங்கோ உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆலந்தலையில் கனிமொழி எம்.பி நிதியில் கட்டப்படவுள்ள ரேசன்கடைக்கான இடத்தை அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ ஆய்வு செய்தார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலை கிராமத்தில் அந்த பகுதி மக்கள் ரேசன் கடை, மீன் வலைக்கூடம் ஆகியவற்றிற்கு புதிதாக கட்டிடம் கட்டித் தரக்கோரி அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இவர்கள் கோரிக்கையை ஏற்று அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தி.மு.க. எம்.பி கனிமொழியிடம் தெரிவித்தார்.

    இதையடுத்து கனிமொழி எம்.பி தனது நிதியில் இருந்து ரேசன்கடை அமைக்க ரூ10 லட்சம், மீன் வலைக்கூடம் அமைக்க ரூ25 லட்சம் என மொத்தம் ரூ35 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளார். அதற்கான இடத்தை அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. ஆலந்தலை கிராமத்தில் ஆய்வு செய்தார். ஆய்வின் போது தி.மு.க. மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் ஸ்ரீதர் ரொட்ரிகோ, நகர செயலாளர் வாள் சுடலை, முன்னாள் கவுன்சிலர்கள் கோமதிநாயகம், சுதாகர், ஆலந்தலை ஊர் நல கமிட்டி தலைவர் அந்தோணி, கொம்பீரியர் சபை சந்திரலோபோ, வார்டு செயலாளர் லெவி, பரமன்குறிச்சி ஊராட்சி செயலாளர் இளங்கோ, மாவட்ட பிரதிநிதி முத்துக்குமார் உள்பட பலர் உடனிருந்தனர்.

    உடன்குடி தேர்வுநிலை பேரூராட்சியில் நடைபெறும் திட்டப்பணிகள் குறித்து அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ ஆய்வு செய்தார்.
    உடன்குடி:
                  
    திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் உடன்குடி யூனியன் அலுவலகத்திற்கு வந்தார். ஆணையாளர் கருப்பசாமி, என்ஜீனியர் சிவசங்கர், சாலை ஆய்வாளர் சண்முகசுந்தரி, ஒன்றிய பணி மேற்பார்வையாளர் ஜெயச்சந்திரா மற்றும் அலுவலர்களுடன் ஆய்வு செய்தார். வெள்ளாளன்விளை முதல் மாநாடு வரை, தண்டுபத்து முதல் மாநாடு வரை உள்பட கிராமபுற சாலைகளை புதியதாக போடுவதற்கும், செம்மறிகுளம் குடிநீர் பிரச்சனை,மெஞ்ஞானபுரம் மருதூர்கரை குடிநீர் பிரச்சனை மற்றும் கிராம பஞ்சாயத்துக்களில் குடிநீர் வசதி, மருதூர்கரை பழுதடைந்த பஸ் நிறுத்த கட்டிடம், தெரு விளக்கு வசதி இல்லாதது உட்பட சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு வேண்டுகோள்விடுத்தார்.

    முன்னதாக உடன்குடி தேர்வுநிலை பேரூராட்சிக்கு சென்று அங்கு நடைபெறும் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்தார். அனைத்து திட்டப்பணிகளையும் உடனடியாக முடிக்க வேண்டுகோள் விடுத்தார். ஆய்வின்போது தி.மு.க.வை சேர்ந்த ஒன்றிய கழக செயலாளர் பாலசிங், நகர கழக செயலாளர் ஜான் பாஸ்கர், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் ரவிராஜா, மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் ஷேக்முகமது, பரமன்குறிச்சி ஊராட்சி செயலாளர் இளங்கோ, மாவட்ட பிரதிநிதிகள் மதன்ராஜ், பிரபாகர், உடன்குடி நகர பொருளாளர் தங்கம், முன்னாள் கவுன்சிலர்கள் முகமது சலீம், அன்வர் சலீம், மகபூப், முன்னாள் நகர செயலாளர் கனகலிங்கம், நகர இளைஞர் அணி செயலாளர் அஜய், மருதூர்கரை தி.மு.க. செயலாளர் லூக்கா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
    சொத்து வரி உயர்வை கண்டித்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ, மக்களின் நலனுக்காக போராடும் இயக்கம் திமுக என்றார். #dmkprotest
    ஆறுமுகநேரி:

    தமிழக அரசின் சொத்து மற்றும் வீட்டு வரி உயர்வை கண்டித்து நகர தி.மு.க. சார்பில் காயல்பட்டினத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நகர செயலாளர் முத்துமுகமது, திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர், பாலப்பா, கணபதி, வழக்கறிஞர் ஜெபராஜ், மாவட்ட துணைச் செயலாளர் ஆறுமுகப்பெருமாள், மாநில பொதுக்குழு உறுப்பினர் சாகுல்ஹமீது, மருத்துவ அணி மாநில துணை அமைப்பாளர் டாக்டர் வெற்றிவேல் ஆகியோர் பேசினர்.

    ஆர்ப்பாட்டத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    தி.மு.க. தலைவர் கருணாநிதி உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கும் நிலையிலும்கூட மக்களின் நலனுக்காக இன்றைக்கு வீதியில் இறங்கி போராடிக் கொண்டிருக்கிறது தி.மு.க. தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியிலும், மத்தியில் மோடி ஆட்சியிலும் மக்கள் படும் துன்பத்திற்கு அளவேயில்லாமல் போய்விட்டது. வீட்டு வரியை அ.தி.மு.க. அரசு பல மடங்கு உயர்த்தி உள்ளதால் பாதிக்கப்படுவது சாதாரண மக்கள் தான். இந்த வரி உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும். அ.தி.மு.க. ஆட்சியையும், மோடி ஆட்சியையும் துரத்தி அடிக்கும் கடமை மக்களுக்கு உள்ளது. ஸ்டாலினை தமிழக முதல்வர் ஆக்க அனைவரும் உறுதி எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் மாநில மாணவரணி துணை செயலாளர் உமரிசங்கர், தலைமை செயற்குழு உறுப்பினர் கருணாகரன், மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம், துணைச் செயலாளர் முகமது அப்துல் காதர், ஒன்றிய செயலாளர்கள் உடன்குடி பாலசிங், ஆழ்வை கிழக்கு நவீன்குமார், சாத்தான்குளம் ஜோசப், ஸ்ரீவைகுண்டம் மேற்கு கொம்பையா, கருங்குளம் வடக்கு மகாராஜன், ஓட்டபிடாரம் மேற்கு சண்முகையா,நகர செயலாளர்கள் ஆறுமுகநேரி கல்யாணசுந்தரம், திருச்செந்தூர் சுடலை, ஆத்தூர் முருகப்பெருமாள், சாத்தான்குளம் இளங்கோ, ஸ்ரீவைகுண்டம் பெருமாள், ஆழ்வார் திருநகரி முத்து ராமலிங்கம், உடன்குடி ஜான் பாஸ்கர், நாசரேத் ரவி செல்வகுமார் உள்பட திரளானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். #dmkprotest
    சொத்துவரி உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி, நாளை காயல்பட்டிணம் நகராட்சி அலுவலகம் முன்பு தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது என்று அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

    முள்ளக்காடு:

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர்அனிதா ராதா கிருஷ்ணன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் உள்ளிட்ட அமைப்புகளில் 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை சொத்து வரியை திடீரென உயர்த்தி மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது அ.தி.மு.க. அரசு. தமிழகத்தில் 2 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தலை அ.தி.மு.க. அரசு நடத்தாமல் உள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் இல்லாததால் மத்திய அரசிடம் இருந்து உள்ளாட்சிகளுக்கு கிடைக்க வேண்டிய ரூ.3500 கோடி பெற முடியாமல் உள்ளது. இதனால் உள்ளாட்சிகளின் செயல்பாடுகள் முடங்கியுள்ளது.

    மக்கள் தங்களின் குறைகளை அதிகாரிகளிடம் கூறினால் தீர்வு கிடைப்பதில்லை. இந்த நிலையில் 100 சதவீதம் சொத்து வரியை திடீரென உயர்த்தி ஏழை- எளிய நடுத்தர மக்கள் வணிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது தமிழக அரசு.

    இதை கண்டித்தும், உடனடியாக உயர்த் தப்பட்ட சொத்து வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சிஅலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    இதையடுத்து நாளை (வெள்ளிக்கிழமை )காலை 10 மணிக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளராகிய எனது தலைமையில் காயல்பட்டணம் நகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    இந்த போராட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலாளர்கள், அனைத்து அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள், ஊராட்சி வட்ட செயலாளர்கள் மற்றும் பொதுமக்கள், வணிகர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.

    ×