search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Zero Shadow Day"

    • எளிய வானியல் நிகழ்வை அவரவர் வீடுகளிலேயே செய்து பார்க்கலாம்.
    • உரிய நேரத்தில் சமதள பரப்பளவில் ஏதேனும் ஒரு உருளையான பொருளை செங்குத்தாக வைத்து அதன் நிழல் விழவில்லையா என்பதை பார்க்கலாம்.

    திருச்சி:

    தினமும் சூரியன் நமக்கு மேல் உச்சியில் செல்வதுபோல தெரிந்தாலும், ஆண்டுக்கு 2 நாட்கள் மட்டுமே மிகச் சரியாக உச்சியில் வரும். அப்போது ஒரு பொருளின் மேல் விழும் சூரிய வெளிச்சத்தின் விளைவாக, நிழல் அப்பொருளின் பரப்புக்கு உள்ளேயே விழுவதால் அதன் நிழலைப் பார்க்க முடியாது.

    இந்த நிகழ்வு வெறும் ஓரிரு நிமிடங்கள் மட்டுமே நடைபெறும். இந்த நாட்களை நிழல் இல்லா நாள் அல்லது பூஜ்ய நிழல் நாள் என்கின்றனர்

    இதன்படி நடப்பாண்டு திருச்சி மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) திருச்சி, மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி, மணிகண்டம், திருவெறும்பூர் பகுதிகளிலும் நாளை ( வியாழக்கிழமை) புள்ளம்பாடி, லால்குடி, மண்ணச்சநல்லூர், ஸ்ரீரங்கம், முசிறி, தா.பேட்டை, தொட்டியம் பகுதிகளிலும், நாளை மறுநாள் (19-ந்தேதி) துறையூர் உப்பிலியபுரம் பகுதிகளிலும் நிழல் இல்லா நாள் அமைகிறது.

    இது தொடர்பாக தமிழ்நாடு அறிவியல் இயக்க திருச்சி மாவட்ட செயலாளர் மணிகண்டன் கூறுகையில்,

    இந்த எளிய வானியல் நிகழ்வை அவரவர் வீடுகளிலேயே செய்து பார்க்கலாம். உரிய நேரத்தில் சமதள பரப்பளவில் ஏதேனும் ஒரு உருளையான பொருளை செங்குத்தாக வைத்து அதன் நிழல் விழவில்லையா என்பதை பார்க்கலாம்.

    உங்கள் ஊரில் எப்போது நிழல் இல்லா நேரம் என்பதை அறிந்து கொள்ள https:// alokm.com/zsd.html என்ற இணையதளத்தில் சென்று, ஊர் பெயரை தட்டச்சு செய்தால் உரிய நேர விவரம் கிடைக்கும் என்றார்.

    • ஒரு பொருளின் நேர் மேலாக 90 டிகிரி உச்சியில், சூரியன் வரும் நிகழ்வு.
    • கலிலியோ அறிவியல் கழகம் வாயிலாக கண்டறியப்பட்டது.

    உடுமலை :

    சூரியனால் ஏற்படும் ஒரு பொருளின் நிழல் காலையில் அதிக நீளத்தோடு இருந்து உச்சி நேரத்தில் குறையும். பின், சூரியன் மறையும் வரை மீண்டும் நீள்கிறது. அதேநேரம், ஓராண்டில் இரு முறை சூரியனால் ஏற்படும் நிழலை காண இயலாது. அவ்வகையில் ஒரு பொருளின் நேர் மேலாக 90 டிகிரி உச்சியில், சூரியன் வரும் நிகழ்வு, பூஜ்ய நிழல் தினமாக அழைக்கப்படுகிறது.அந்த நிகழ்வு உடுமலையில் கலிலியோ அறிவியல் கழகம் வாயிலாக கண்டறியப்பட்டது.

    குறிப்பாக ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் எளிய பொருட்களின் வாயிலாக பூஜ்ய நிழலை கண்டு களித்தனர்.இதேபோல என்.வி., மெட்ரிக் பள்ளி மாணவர்கள், மைதானத்தின் வட்ட வடிவில் நின்று பூஜ்ய நிழலை கண்டறிந்தனர்.இதன் ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான் கூறியதாவது:-

    பூஜ்ஜிய நிழலை கண்டறியும் வகையில் ஒரு பொருளைக்கொண்டு சரியாக பிற்பகல் 12:23 மணிக்கு, உற்று நோக்கப்பட்டது.அப்போது சூரியனால் ஏற்பட்ட பொருளின் நிழல் நேர்குத்தாக கீழே விழுந்தது. அப்போது, பொருளின் நிழல் தென்படவில்லை. மாணவர்களிடையே அறிவியல் திறனை மேம்படுத்தவும், வானியலில் ஆர்வத்தை ஏற்படுத்தவும் இது போன்ற நிகழ்வுகள் ஊக்கப்படுத்தப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    சென்னையில் இன்று பள்ளி மாணவ, மாணவியர் நிழல் இல்லா நாள் வானியல் நிகழ்வை ஆர்வமுடன் கண்டு களித்தனர். #ZeroShadowDay
    சென்னை:

    சூரியன் தலைக்கு நேர் மேலே இருக்கும்போது நிழலின் நீளம் பூஜ்ஜியமாகிவிடும். அதாவது நிழல் காலுக்குக் கீழே இருக்கும். ஆனால் சூரியன் சரியாக தலைக்கு மேல் நாள்தோறும் வருவதில்லை. ஆண்டுக்கு இருமுறை மட்டுமே வரும். அந்த நாளையே நிழல் இல்லாத நாள் அல்லது பூஜ்ய நிழல் என்று வானியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த நிகழ்வானது அனைத்து இடங்களிலும் ஒரே நாளில் நிகழ்வதில்லை.

    இந்நிலையில், புதுச்சேரியில் நிழல் இல்லா நாள் அபூர்வ நிகழ்வு ஏப்ரல் 21-ந் தேதியும், ஆகஸ்டு 21-ந் தேதியும் நிகழும் என அறிவியல் இயக்கம் தெரிவித்து இருந்தது. அதன்படி கடந்த 21ம் புதுச்சேரி மக்கள் இந்த நிகழ்வை கண்டு ரசித்தனர்.



    சென்னை நகரில் இன்று இந்த அரிய நிகழ்வை பொதுமக்கள் காணலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை பொதுமக்கள் காண்பதற்காக சென்னை பிர்லா கோளரங்கில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 12.07க்கு சூரியன் செங்குத்தாக தலைக்கு மேலே வந்தபோது, இந்த நிகழ்வை மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கண்டுகளித்தனர். சென்னை தவிர பெங்களூர் மற்றும் மங்களூரிலும் இந்த பூஜ்ய நிழலை கண்டுரசித்தனர். இதேபோல் ஆகஸ்ட் 18-ம் தேதியும் இந்த பூஜ்ய நிழலை பார்க்க முடியும் என வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். #ZeroShadowDay
    ×