என் மலர்

    நீங்கள் தேடியது "young women death"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்யும் வேலை செய்து கொண்டு இருந்தனர்.
    • போலீசார் தேவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக இ.எஸ்ஐ ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கோவை,

    கோவை ரத்தினபுரி தயிரிட்டேரியை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மனைவி தேவி(வயது27). இவர் தனது சகோதரி சத்யா(33) என்பவருடன் சேர்ந்து கூலி வேலை செய்து வருகிறார்.

    இந்நிலையில், சம்பவத்தன்று இவர்கள் 2 பேரும் உப்பிலிபாளையத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்யும் வேலை செய்து கொண்டு இருந்தனர். அப்போது திடீரென தேவி மாயமானார். இதனையடுத்து அவரை அவரது சகோதரி சத்யா பல இடங்களில் தேடினார்.

    அப்போது அங்குள்ள தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கிய நிலையில் தேவி உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சத்யா அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தேவியை மீட்க முயன்றார்.

    பின்னர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீரில் மூழ்கிய தேவியை மீட்க முயன்றனர். ஆனால் அதற்குள் அவர் இறந்தார்.

    சிங்காநல்லூர் போலீசார் தேவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக இ.எஸ்ஐ ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தேவி தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்த போது தவறி விழுந்து நீரில் மூழ்கி இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்குமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    மதுரை அருகே ரோட்டில் பாம்பு குறுக்கே புகுந்ததால் பைக்கில் உறவினருடன் சென்ற இளம்பெண் பரிதாபமாக பலியானார்.
    மதுரை:

    சென்னை போரூர் ராமகிருஷ்ணா நகரைச் சேர்ந்த பெரியகருப்பன் மகள் கார்த்திகா (வயது21). இவர் 2 நாட்களுக்கு முன்பு உசிலம்பட்டி அருகே உள்ள சடைச்சிப்பட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்திருந்தார்.

    அப்போது உறவினர் சச்சின்பிரான் (20) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். வாலாந்தூர்-பாப்பாப்பட்டி ரோட்டில் சென்றபோது சாலையின் குறுக்கே திடீரென பாம்பு புகுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சச்சின்பிரான் திடீரென பிரேக் போட்டார். இதனால் மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கீழே சரிந்தது.

    இதில் கீழே விழுந்த கார்த்திகா நடுரோட்டில் ரத்த காயங்களுடன் மயங்கி கிடந்தார். இதையடுத்து அவரை உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கார்த்திகா பரிதாபமாக இறந்தார்.

    இதுதொடர்பாக கார்த்திகாவின் தந்தை பெரியகருப்பன் வாலாந்தூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வனிதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.#tamilnews
    ×