search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Whale saliva"

    • சுமார் 1 கிலோ 575 கிராம் எடை கொண்ட திமிங்கல உமிழ்நீர் மற்றும் ஒரு கார், 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • மங்களூரு மாநகர குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் மங்களூரு நகரில் பம்ப்வெல் பகுதியில் சந்தேகத்துக்கிடமாக ஒரு கார் நின்றிருந்தது. அதில் இருந்த சிலர் விலை உயர்ந்த திமிங்கல உமிழ்நீர் என்று அழைக்கப்படும் அம்பர் கிரீஸ் வைத்திருந்தனர்.

    அதனை விற்க வாடிக்கையாளர்களை தேடிக்கொண்டிருந்த நிலையில் மங்களூர் மாநகர குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் அடிப்படையில் போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர்.

    விசாரணையில் அவர்கள் சிக்கமகளூர் மாவட்டம் தமிழ் காலனி பகுதியை சேர்ந்த பியாரோஜன் என்கின்ற சேட்டு (37), விட்லா பகுதியை சேர்ந்த பத்ருதீன் என்கின்ற பத்ரு (38), தமிழ்நாடு நாகப்பட்டினம் மாவட்டம் சன்னதி கோவில் தெரு பகுதியை சேர்ந்த ராஜேஷ் (22) என்பது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து சுமார் 1 கிலோ 575 கிராம் எடை கொண்ட திமிங்கல உமிழ்நீர் மற்றும் ஒரு கார், 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு ஒரு கோடியே 62 லட்சத்து 80 ஆயிரம் ஆகும் இது தொடர்பாக மங்களூரு மாநகர குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    ×