search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vollyball Tournament"

    • போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 9 குறு வட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் கலந்து கொண்டனர்.
    • 17வயதுக்குட்பட்ட கைப்பந்து போட்டியில் காஞ்சி ஸ்ரீ சங்கரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிக் தகுதி பெற்றுள்ளனர்.

    திருச்செந்தூர்:

    தூத்துக்குடி மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி தூத்துக்குடி காரபேட்டை நாடார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 9 குறு வட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் திருச்செந்தூர் குறு வட்ட அளவில் 17வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான கைப்பந்து போட்டியில் காஞ்சி ஸ்ரீ சங்கரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் வெற்றி பெற்று மாநில அளவிலான கைப்பந்து போட்டிக் தகுதி பெற்றுள்ளனர்.வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் டாக்டர் ராமமூர்த்தி, முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் பாராட்டினர்.

    • ஆண்கள் பிரிவில் 38 அணிகளும், பெண்கள் பிரிவில் 18 அணிகளும் கலந்து கொண்டு விளையாடின.
    • பெண்கள் பிரிவு இறுதி போட்டியில் மதுரை அமெரிக்கன் கல்லூரி அணியும், நெல்லை சதக் அப்துல்லா அப்பா கல்லூரி அணியும் மோதின.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே உள்ள படர்ந்தபுளியில் லியா கைப்பந்து கழகம் சார்பில் 18-வது மாநில அளவிலான ஆண், பெண்களுக்கான கைப்பந்து போட்டிகள் 2 நாட்கள் நடந்தன.

    இதில், ஆண்கள் பிரிவில் 38 அணிகளும், பெண்கள் பிரிவில் 18 அணிகளும் கலந்து கொண்டு விளையாடின. போட்டிகள் லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நடத்தப்பட்டன. போட்டிகளை மார்க்க ண்டேயன் எம்.எல்.ஏ., கனரா வங்கி உதவி பொது மேலாளர் சக்கால சுரேந்திர பாபு தொடங்கி வைத்தனர்.

    இறுதி போட்டிகள் நேற்று முன்தினம் இரவு நடந்தது. ஆண்கள் பிரிவில் கன்னியா குமரி கே.கே.பிரண்ட்ஸ் அணியும், கீழக்கரை அணியும் மோதின. இதில், 24-22, 18-24, 15-9 என்ற புள்ளி கணக்கில் கன்னியாகுமரி அணி வெற்றி பெற்றது. 3-வது இடத்தை புதியம்புத்தூர் அணியும், 4-வது இடத்தை கோவில்ப ட்டி அணியும் பிடித்தன.

    பெண்கள் பிரிவு இறுதி போட்டியில் மதுரை அமெரிக்கன் கல்லூரி அணியும், நெல்லை சதக் அப்துல்லா அப்பா கல்லூரி அணியும் மோதின. இதில், 25-23, 22-25, 15-11 என்ற புள்ளி கணக்கில் மதுரை அணி வெற்றி பெற்றது. 3-வது இடத்தை சென்னை லைப் ஸ்போர்ட்ஸ் அணியும், 4-வது இடத்தை மதுரை லேடி டோக் கல்லூரி அணியும் பிடித்தன.

    தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவில், வெற்றி பெற்ற அணிகளுக்கு கனரா வங்கி மண்டல மேலாளர் கவுசல்யா கோப்பைகளை வழங்கி பாராட்டினார். விழாவில், மாவட்ட கைப்பந்து கழக செயலாளர் ரமேஷ்குமார், நெல்லை மாவட்ட நீச்சல் கழக தலைவர் திருமாறன், தொழிலதிபர் ராஜாங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ஏற்பாடுகளை படர்ந்தபுளி லியா கைப்பந்து கழக தலைவர் ஜனகராஜ், செயலாளர் லிங்கவன் தலைமையிலான நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • முதல்-அமைச்சர் கோப்பைக்கான மகளிர் கைப்பந்து போட்டி நடைபெற்றது.
    • முதல் பரிசை மாதாபட்டணம் எஸ்.எஸ்.வி. மேல்நிலைப்பள்ளி அணியினர் பெற்றனர்.

    தென்காசி:

    முதல்-அமைச்சர் கோப்பைக்கான மகளிர் கைப்பந்து போட்டி மடத்தூர் இந்து நடுநிலைப்பள்ளி மற்றும் மடத்தூர் கைப்பந்து குழு சார்பாக பள்ளி நிர்வாகி கதிர்வேல் முருகன் தலைமையில், வட்டார கல்வி அலுவலர் கிருஷ்ணபாரதி புல்லுக்காட்டுவலசை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாடசாமி முன்னிலையில் நடைபெற்றது. பள்ளிகள் பிரிவில் முதல் பரிசை மாதாபட்டணம் எஸ்.எஸ்.வி. மேல்நிலைப்பள்ளி அணியினரும், 2-ம் பரிசை குறும்பலாபேரி அரசு மேல்நிலைப்பள்ளி அணியினரும், மூன்றாம் பரிசை ஆழ்வார்குறிச்சி பரம கல்யாணி மேல்நிலைப்பள்ளி அணியினரும் பெற்றனர். கல்லூரிகள் பிரிவில் முதல் பரிசை ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி கல்லூரி அணியினரும், இரண்டாம் பரிசை குற்றாலம் பராசக்தி கல்லூரி அணியினரும், மூன்றாம் பரிசை சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரி அணியினரும் பெற்றனர். ஏற்பாட்டினை சரவணசங்கர் மற்றும் இந்து நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் செய்திருந்தனர்.

    ×