என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "virat khoil"
- இப்போட்டியில் விராட் கோலி 2 கேட்சுகள் பிடித்ததன் மூலம் ஐபிஎல் தொடரில் புதிய சாதனை ஒன்றை பதிவு செய்துள்ளார்.
- இந்த பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா 167 கேட்சுகளை பிடித்து மூன்றாம் இடத்தில் உள்ளார்.
ஐபிஎல் தொடரின் இன்றைய 6-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியது. வருகின்றன. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்களைச் சேர்த்தது.
அதிகபட்சமாக தவான் 45 ரன்கள் விளாசினார். ஆர்சிபி அணி தரப்பில் முகமது சிராஜ் மற்றும் கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதைத்தொடர்ந்து ஆர்சிபி அணி விளையாடி வருகிறது.
இந்நிலையில் இப்போட்டியில் விராட் கோலி 2 கேட்சுகள் பிடித்ததன் மூலம் ஐபிஎல் தொடரில் புதிய சாதனை ஒன்றை பதிவு செய்துள்ளார். ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக கேட்சுகளை பிடித்த விக்கெட் கீப்பர் அல்லாத வீரர் எனும் சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.
முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா 172 கேட்சுகளை பிடித்ததே சாதனையாக இருந்த நிலையில், 174 கேட்சுகளைப் பிடித்து விராட் கோலி முதலிடத்தைப் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா 167 கேட்சுகளை பிடித்து மூன்றாம் இடத்தில் உள்ளார்.
- சூர்யகுமார் யாதவ் சதம் வீளாசியதன் மூலம் ரோகித் சர்மா சாதனையை சமன் செய்தார்.
- சூர்யகுமார் யாதவ் டி20 கிரிக்கெட்டிற்குள் வந்தே 20 மாதங்கள் தான் ஆகிறது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் குவித்தது. அதனை தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி 18.5 ஓவர்களில் 126-க்கு ஆல் அவுட்டானது.
இதனால் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டார். ஒற்றையாளாக போராடிய சூர்யகுமார் யாதவ் 51 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 111 ரன்களை விளாசினார்.
இதன் மூலம் விராட் கோலியின் சாதனையை அவர் முறியடித்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் சூர்யகுமார் யாதவ் தனது 7-வது ஆட்ட நாயகன் விருதை பெற்றார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ஆட்ட நாயகன் விருதை பெற்ற வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். விராட் கோலி 6 முறை பெற்றிருந்தார். சூர்யகுமார் யாதவை போலவே ஜிம்பாப்வே அணியின் சிகாந்தர் ராசாவும் 7 முறை சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஆட்ட நாயகன் விருதை பெற்றுள்ளார்.
இதே போல ரோகித் சர்மாவின் சாதனையையும் சூர்யகுமார் முறியடித்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் 2 சதங்களை விளாசிய ஓரே இந்தியராக ரோகித் சர்மா மட்டுமே இருந்தார். ஆனால் நேற்றைய சதத்தின் மூலம் ரோகித்தை சமன் செய்தார் சூர்யகுமார் யாதவ்.
சூர்யகுமார் யாதவ் டி20 கிரிக்கெட்டிற்குள் வந்தே 20 மாதங்கள் தான் ஆகிறது. ஆனால் குறைந்த காலத்திலேயே உலகின் நம்பர் 1 வீரராக திகழ்கிறார். அதுவும் டி20 கிரிக்கெட்டில் தனது 2வது சதத்தை பூர்த்தி செய்திருக்கிறார். 39 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்து 1,395 ரன்களை விளாசியிருக்கிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்